ஞாயிறு, 31 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 128

ஐந்தாவது ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்

(ப்லக்ஷம் முதலிய ஆறு த்வீபங்கள் அவற்றைச் சூழ்ந்த ஸமுத்ரங்கள் லோகாலோக பர்வதம் ஆகிய இவற்றின் நிலைமையைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இனிமேல் ப்லக்ஷம் முதலிய த்வீபங்களிலுள்ள வர்ஷங்களின் பிரிவுகளையும் அவற்றின் பரிமாணத்தையும் லக்ஷணத்தையும் ஆகாரத்தையும் க்ரமப்படி விவரித்துச் சொல்லுகிறேன். ஜம்பூத்வீபம் தான் எவ்வளவு விஸ்தாரமுடையதோ அவ்வளவு விஸ்தாரமுடைய லவண ஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருப்பது போலவும், அந்த த்வீபத்தினிடையிலுள்ள மேருபர்வதம் ஜம்பூத்வீபத்தினால் சூழப்பட்டிருப்பது போலவும் லவண ஸமுத்ரமானது, பட்டணத்தைச் சுற்றியிருக்கும் அகழி தனக்கு வெளியிலுள்ள உத்யான வனத்தினால் சூழப்பட்டிருப்பது போல், தன்னைக் காட்டிலும் இருமடங்கு அதிக விஸ்தாரமுடைய ப்லக்ஷ த்வீபத்தினால் சூழப்பட்டிருக்கின்றது. அந்த த்வீபத்தினிடையிலுள்ள ப்லக்ஷ வ்ருக்ஷம் ஜம்பூ வ்ருக்ஷத்தின் அளவுடையது. அதைப் பற்றியே அந்த த்வீபத்திற்கு ப்லக்ஷ த்வீபமென்னும் பேர் விளைந்தது. அந்த வ்ருஷம் ஸ்வர்ணம் போல் பளபளவென்று விளக்கமுற்றிருக்கும். அந்த வ்ருக்ஷத்தின் அடியில் ஏழு ஜ்வாலைகளையுடைய அக்னி இருக்கின்றது அந்த த்வீபத்திற்கு ப்ரியவ்ரதனுடைய பிள்ளையாகிய இத்மஜிஹ்வன் அதிபதி. அவன் அந்த த்வீபத்தை ஏழு வர்ஷங்களாகப் பிரித்து அவ்வர்ஷங்களின் பெயர்களையே பேராகவுடைய தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தான் ஆத்மயோகத்தினால் ஸம்ஸாரத்தினின்று மோக்ஷத்தை அடைந்தான். அவ்வர்ஷங்கள் சிவம், யசஸ்யம், ஸுபத்ரம், சாந்தம், க்ஷேமம், அபயம், அம்ருதமென்னும் பேருடையவை. அவ்வர்ஷங்களில் ஏழு பர்வதங்களும், ஏழு நதிகளும் பேர்பெற்றவை. எல்லையைத் தெரிவிக்கிற அப்பர்வதங்கள் ஏழும் மணிகூடம், வஜ்ரகூடம், இந்த்ரஸேனம், ஜ்யோதிஷ்மான், தூம்ரவர்ணம், ஹிரண்யக்ரீவம், மேகமாலமென்னும் பேருடையவை. அங்குள்ள மஹாநதிகள் அருணை, ஸ்ருமனை, ஆங்கிரஸி, ஸாவித்ரி, ஸுப்ரபாதை, ருதம்பரை, ஸத்யம்பரை என்னும் பேருடையவை. அந்நதிகளின் ஜலத்தில் ஸ்நான (நீராடுதல்) பான (பருகுதல்) முதலியவற்றைச் செய்கையால் ரஜஸ் தமஸ்ஸுக்கள் கழியப் பெற்றவர்களும் ஆயிரமாண்டு வாழ்நாள் உடையவர்களும் தேவதைகளோடொத்த காட்சியமைந்த ஸந்தானமுடையவர்களும் ஹம்ஸர், பதகர், ஊர்த்வாயனர், ஸத்யாங்கர் என்னும் பேர்களுடையவர்களுமான நான்கு வர்ணத்தவர்கள் வேதோக்தமான கர்மயோகாதிகளாலும் அவ்வேதத்தை ஒட்டின ஸ்ம்ருதி முதலியவற்றில் சொன்ன வழிகளாலும் ஷாட்குண்ய பூர்ணனும் வேத ப்ரதிபாத்யனும் (வேதத்தினால் அறியப்படுபவனும்) ஸூர்யனைச் சரீரமாகவுடையவனுமாகிய பரமாத்மாவை ஆராதிக்கிறார்கள். “அனாதியும் நிர்விகாரனும் புண்ய கர்மங்களின் பலன்களைக் கொடுப்பவனும் தன்னைப் பற்றினார்க்கு மோக்ஷத்தைக் கொடுப்பவனும் பற்றாதவர்க்கு ஸம்ஸாரத்தை விளைப்பவனும் பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்குச் சரீரபூதனான ஸூர்யனென்னும் ஜீவனைச் சரணம் அடைகிறோம்” என்னும் இம்மந்திரத்தை அவர்கள் ஜபிக்கின்றார்கள். 

சனி, 30 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 127

ஐந்தாவது ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்

(கிம்புருஷ வர்ஷம் பாரத வர்ஷம் இவற்றில் பகவான் எழுந்தருளியிருக்கும் விதத்தையும், பாரத வர்ஷத்தின் மேன்மையையும் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கிம்புருஷ வர்ஷத்தில் ஆதிபுருஷனாகிய பகவான் லக்ஷ்மணனுக்குத் தமையனும் ஸீதையின் மனத்திற்கினியனுமாகிய தாசரதி ராமனாய் வாஸம் செய்கிறான். அவனுடைய பாதாரவிந்தங்களில் மிக்க விருப்பமுடையவனும் பாகவதர்களில் சிறந்தவனுமாகிய ஹனுமான் அந்த கிம்புருஷ வர்ஷத்திலுள்ளவர்களுடன் அந்த ஸ்ரீராமபிரானை மாறாத பக்தியினால் ஆராதிக்கின்றான். கிம்புருஷ வர்ஷத்திலுள்ள புருஷர்களில் சிறந்த ஆர்ஷ்டிஷேணரும் கந்தர்வர்களும் அந்த ஸ்ரீராமபிரானுடைய மிக்க மங்களமான கதையை அருகாமையில் நின்று பாடிக்கொண்டிருக்கையில் ஹனுமான் பக்தியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறான். தானும் “ஓம் உலகத்தில் சிறந்த ப்ரஹ்மாதிகளால் துதி செய்யப் பெற்றவனும் சிறந்த புகழுடையவனும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய ஸ்ரீராமனுக்கு நமஸ்காரம். பெரியோர்கள் ஆதரிக்கும் அடையாளங்களையும் நடத்தைகளையும் வ்ரதங்களையும் உடைய ஸ்ரீராமபகவானுக்கு நமஸ்காரம். மன அடக்கமுடையவனுக்கு நமஸ்காரம். உலகங்களை அனுஸரித்திருக்கும் தன்மையனுக்கு நமஸ்காரம். ஸாதுவென்னும் ப்ரஸித்திக்கு உறைகல் (தங்கத்தை உறைத்துப் பார்த்து அதன் தரத்தை நிர்ணயிக்க உதவும் கல்) போன்றவனுக்கு நமஸ்காரம். ப்ராஹ்மணர்களின் விருப்பத்தை ஈடேற்றும் ப்ரபுவும் வேதாந்தவேத்யனும் கர்ம ஸம்பந்தமின்றித் திகழ்கின்றவனும் கல்யாண குணங்களெல்லாம் அமைந்த மஹாபுருஷனும் ராஜாதிராஜனுமாகிய ஸ்ரீராமனுக்கு நமஸ்காரம்” என்று ஜபித்து மீளவும் ராகாதி தோஷங்களால் தீண்டப்படாமல் கேவல ஜ்ஞானஸ்வரூபனும் என்றும் குறுகாத (குறைவில்லாத) ஜ்ஞான ப்ரகாசத்தினால் ரஜஸ்ஸு முதலிய குணங்களும் அவற்றால் விளையும் உற்பத்தி ஸ்திதி மரணங்களென்கிற மூன்று அவஸ்தைகளும் தீண்டப்பெறாதவனும் தனக்குத் தானே தோன்றும் தன்மையனும் யோக பரிசுத்தமான புத்தியால் அடையத் தகுந்தவனும் தேவாதி நாமரூபங்களற்றவனும் புருஷோத்தமனுமாகிய ஸ்ரீராமனைச் சரணம் அடைகிறேன்.

செவ்வாய், 26 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 126


ஐந்தாவது ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்

(பத்ராச்வ வர்ஷம் முதலிய ஆறுவர்ஷங்களில் பகவான் அங்குள்ளவர்களால் ஆராதிக்கப்படுவதைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தர்மனுடைய புதல்வனாகிய பத்ரச்ரவனென்பவனும் அவனது வம்சத்தில் முக்யர்களான மஹாபுருஷர்களும் பத்ராச்வ வர்ஷத்தில் (உலகின் ஒரு பெரிய பகுதி) ஷாட்குண்யம் நிறைந்த வாஸுதேவனுக்கு ப்ரியமாயிருப்பதும் தர்மஸ்வரூபமும் (தர்மத்தையே – அறத்தையே வடிவாய் உடையதும்) ஹயசீர்ஷன் (குதிரை முகன்) என்னும் பேருடையதுமாகிய அவனது மூர்த்தியைச் சிறந்த ஸமாதியால் (த்யானத்தின் கடைசி நிலையால்) ஸாக்ஷாத்கரித்து (நேரில் பார்த்து) கீழ்கண்டவாறு துதித்தனர்.

பத்ரச்ரவனும் அவனது வம்சத்தவர்களும் துதித்தார்கள்: “ஓம் தர்மஸ்வரூபனும் ஜீவாத்மாக்களை ப்ரக்ருதி ஸம்பந்தத்தினின்று விடுவித்துத் தன்னை அனுபவிக்கையாகிற மஹாநந்தம் (உயர்ந்த இன்பம்) கொடுப்பவனுமாகிய பகவானுக்கு நமஸ்காரம்” என்று சொல்லி, மீளவும் “இவ்வுலகத்திலுள்ள ஜனங்கள் தமது தந்தை முதலியவர்களைக் கொண்டு போகின்ற ம்ருத்யுவைக் (யமனைக்/மரணத்தைக்) கண்டும் தமக்கும் அங்கனமே நேருமென்பதை அறிகிறதில்லை. தாம் சாச்வதமாயிருப்பதாகவே நினைக்கின்றார்கள். இது பகவானுடைய சேஷ்டையே (ஆச்சர்யமான செயல்). ஆ! என்ன விசித்ரம்! அவனுடைய மாயையால் மதிமயங்கியே ஜனங்கள் இங்கனம் தமக்கு வரப்போகிற ம்ருத்யுவை (மரணத்தை) அறியாமல் திரிகின்றார்கள். தந்தை பிள்ளை முதலியவர் மரணம் அடைகையில் அவரது சரீரங்களைக் கொண்டு போய்க் கொளுத்திவிட்டு வாஸ்தவத்தில் (உண்மையில்) ஸுகத்திற்கிடமல்லாத சப்தாதி விஷயங்களை அனுபவிக்க விரும்பிப் பாபங்களைச் செய்யமுயன்று அவர்கள் ஸம்பாதித்ததைக் கொண்டு ஜீவிக்கப் பார்க்கிறார்கள். வேதாந்த வித்யையை உணர்ந்தவரும் ஆத்ம பரமாத்மாக்களை உபாஸித்தவருமான பண்டிதர்கள் இந்த ஜகத்தெல்லாம் அழியக்கூடியது என்று பார்க்கின்றார்களாயினும், உன் மாயையினால் மதிமயங்கிப் புத்ரமரணாதி காலங்களில் சோகிப்பதும் புத்ரோத்பத்தி (புத்ரன் பிறப்பு) முதலிய காலங்களில் ஸூகிப்பதுமாய் இருக்கிறார்கள். ஆகையால் உன் செயல் மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது. அந்த மோஹம் மாறுவதற்காக ஜன்ம மரணாதியான ஸாம்ஸாரிக தர்மங்கள் தீண்டப்பெறாத உன்னைச் சரணம் அடைகின்றோம். 

வெள்ளி, 22 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 125

ஐந்தாவது ஸ்கந்தம் – பதினேழாவது அத்தியாயம்

(கங்கை பூமியில் இறங்கி வருதலும், இலா வ்ருதவர்ஷத்தில் ருத்ரன் ஸங்கர்ஷண பகவானை ஆராதித்தலும்) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்யபூர்ணனும் யஜ்ஞமூர்த்தியும் வாமன ரூபியுமான ஸ்ரீமஹாவிஷ்ணு மூன்று லோகங்களையும் மூன்று அடிகளால் அளக்கும் பொழுது அந்தப் பகவானுடைய இடக்கால் கட்டைவிரல் நகத்தினால் அண்டகடாஹம் பிளவுண்டு அந்த த்வாரத்தினால் அதற்கு வெளியிலுள்ள ஆவரண ஜலத்தின் தாரை (ஓட்டம்) உள்ளே நுழைந்து நெடுங்காலமாய் விஷ்ணுபதமென்று கூறப்படுகிற த்யுலோகத்தின் (தேவ லோகம்) நுனியில் இறங்கியிருந்தது. அந்தப் பகவானுடைய பாதாரவிந்தங்களை அலம்புகையால் அப்பாதார விந்தங்களின் செவ்விய தாதுகள் போன்ற குங்குமக்குழம்பு பட்டு அந்த ஜலம் சிவந்திருக்கும். அது, தன்னைத் தொடுகிறவர்களின் ஸமஸ்த பாபங்களையும் போக்கும் திறமையுடையது; ஆயினும் அந்தப் பாபம் தன்மேல் தீண்டப்பெறாமல் பரிசுத்தமாயிருக்கும். அந்த ஜலமே பூமியில் இறங்கின பின்பு ஜாஹ்னவியென்றும் பாகீரதியென்றும் பலபேர்களைப் பெற்றது. அதுவே கங்கை. 

அது பூமியில் இறங்குவதற்கு முன்பு வேறு நாமங்கள் எவையுமின்றிக் கேவலம் பகவத் பதியென்றே கூறப்பட்டிருந்தது. அந்த த்யுலோகத்தில் நினைத்தபடியே நடத்தும்படியான மன உறுதியுடையவனும் உத்தானபாதனது புதல்வனுமாகிய த்ருவன் க்ஷணந்தோறும் வளர்கின்ற பகவத் பக்தியோகத்தினால் மிகவும் மனம் உருகப்பெற்று ப்ரீதியின் மிகுதியால் மெய்ம்மறந்து மொட்டுக்கள் போன்ற கண்களை மூடிக்கொண்டு ஆனந்தநீர் பெருக்கி உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் நிறைந்து “இது நங்குலதேவதையான பகவானுடைய பாதாரவிந்தத்தினின்று பெருகின புண்ய தீர்த்தம்” என்னும் கௌரவத்துடன் அந்தக் கங்காஜலத்தை மூன்று ஸந்திகளிலும் இப்பொழுதும் சிரஸ்ஸில் தரித்துக்கொண்டிருக்கிறான். ஆகையால் ஸப்தரிஷிகள் அந்தக் கங்கா ஜலத்தின் ப்ரபாவத்தை அறிந்து “தவத்தின் ஸித்தியாவது இந்த விஷ்ணுபதியின் ஸேவையே. இவ்வளவேயன்றி இதற்கு மேற்பட்டதில்லை” என்று நினைத்து, ஸர்வாந்தராத்மாவான வாஸுதேவ பகவானிடத்தில் மாறாத பக்தியோகம் உண்டாகப்பெற்று அர்த்த (பொருள்), காம (இன்பம்) முதலான மற்ற புருஷார்த்தங்களையும் கேவலமான ஆத்மஸ்வரூபத்தை அனுபவிக்கையாகிற கைவல்யத்தையும் உபேக்ஷித்து (பொருட்படுத்தாமல் விட்டு) மோக்ஷத்தில் விருப்பமுடையவர் ஸித்தமாய் நேரிட்டிருக்கும் மோக்ஷத்தை வெகுமதிப்பதுபோல் வெகுமதித்து இப்பொழுதும் அந்தக் கங்காஜலத்தைத் தமது ஜடாபாரத்தினால் (தலை முடியினால்) தரித்துக் (தாங்கிக்) கொண்டிருக்கிறார்கள். 

புதன், 20 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 124

ஐந்தாவது ஸ்கந்தம் – பதினாறாவது அத்தியாயம்


(மேருவின் நிலைமையைக் கூறுதல்)


பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- “ஸுர்யன் எதுவரையில் வெயில் காய்கிறானோ, சந்த்ரன் நக்ஷத்ரங்களோடு எதுவரையில் புலப்படுகிறானோ, அதுவரையிலுள்ள பூமண்டலத்தின் விஸ்தார விசேஷத்தை மொழித்தீர். அதிலும் ப்ரியவ்ரதனுடைய தேர் சக்கரம் படிந்த பள்ளங்களால் ஏழு ஸமுத்ரங்கள் ஏற்பட்டதையும், அவற்றால் இப்பூமியில் எழு தீவுகள் எற்பட்டதையும் ஸூசனையாகச் (குறிப்பாகச்) சொன்னீர். இவற்றின் அளவையும் அடையாளத்தையும் எனக்குச் சொல்வீராக. ஸத்வாதி குணங்களின் பரிணாமமான இந்த ஜகத்தெல்லாம் பகவானுடைய ஸ்தூலரூபமென்றும் அதில் மனத்தைச் செலுத்தி அனுஸந்தித்தால் ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமின்றிச் சுத்த ஸத்வமயமாயிருப்பதும் ஸ்வயம்ப்ரகாசமும் பரப்ரஹ்மம் பகவான் வாஸுதேவன் இவை முதலிய சப்தங்களால் கூறப்படுவதுமாகிய பரமாத்மாவின் ஸூக்ஷ்ம ரூபத்தில் அம்மனம் ஸுகமாகப் பற்றுமென்று சொன்னீர். அஜ்ஞான அந்தகாரத்தைப் (இருளைப்) போக்கும் குருவே! ஆகையால் பகவானுடைய ஸ்தூலரூபம் இப்பூண்டலத்தின் அளவு முதலியவற்றை அறியவிரும்புகிற எனக்கு அவற்றை விவரித்து மொழியவேண்டும்.


ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹாராஜனே! ஒருவன் தேவதைகளைப்போல் நீண்ட ஆயுளுடையவனாயினும் பகவானுடைய லீலாவிபூதியிலுள்ள ஸ்தான விசேஷங்களின் ஸ்வரூபத்தையும் பேரையும் முழுவதும் வாயால் சொல்லவாவது மனத்தினால் நினைக்கவாவது வல்லனாகமாட்டான். ஆகையால் முக்யமான பூகோள விசேஷத்தின் ஸ்வரூபத்தையும் பேரையும் அடையாளத்தையும் சொல்லுகிறோம். த்வீபங்களில் ப்ரஸித்தமான இந்த ஜம்பூத்வீபம் பூமண்டலமாகிற தாமரை மலரின் இதழ் வட்டங்கள் போன்ற த்வீபங்களில் உள்ளிதழ் வட்டம் போன்றிருக்கும்; லக்ஷயோஜனை (1 யோஜனை = 12.8 கி.மீ.) விஸ்தாரமுடையது; தாமரை இலைபோல் ஏற்றக்குறைவின்றி வட்டமாயிருக்கும். இதில் ஒன்பது வர்ஷங்கள் (கண்டங்கள்) உண்டு. ஒவ்வொன்றும் ஒன்பதினாயிரம் யோஜனை விஸ்தாரமுடையது. இவ்வொன்பது வர்ஷங்களும் எல்லையை அறிவிக்கிற எட்டு குல பர்வதங்களால் (மலைகளால்) தனித்தனியே பிரிந்திருக்கின்றன. அவற்றில் இலாவ்ருதமென்னும் வர்ஷம் இடையில் இருக்கின்றது. குலபர்வதங்களில் தலைமையுள்ள மேருபர்வதம் இதினிடையில் இருக்கின்றது; ஜம்பூத்வீபத்தின் விஸ்தீர்ணம் எவ்வளவோ அவ்வளவு (லக்ஷ யோஜனை) உயரமுடையது; இப்பூமண்டலமாகிற கமலத்திற்குக் கர்ணிகை (தாமரை மலரின் நடுப்பகுதி) போலிருக்கும். அம்மேருவின் முடி முப்பத்திரண்டு யோஜனை விஸ்தாரமுடையது. அதன் அடி பதினாறாயிரம் யோஜனையுடையது; பதினாறாயிரம் யோஜனை பூமிக்குள் மறைந்திருக்கின்றது. இலாவ்ருத வர்ஷத்திற்கு வடபாகத்தில் வரிசையாக நீலம், ச்வேதம், ச்ருங்கவான் என்னும் மூன்று மலைகள் இருக்கின்றன. அவை ரம்யகம், ஹிரண்மயம், குரு என்னும் வர்ஷங்களுக்கு எல்லைப் பர்வதங்கள் (மலைகள்). அவை மூன்றும் கிழக்கே நீண்டிருப்பவை; இருபுறத்திலும் லவண ஸமுத்ரத்தை எல்லையாகவுடையவை. ஒவ்வொன்றும் இரண்டாயிரம் யோஜனை விஸ்தீர்ணமுடையது. ஒன்றைவிட ஒன்று நீட்சியில் மாத்ரம் பத்து மடங்குக்கு மேல் குறைந்திருக்கும். இங்கனமே இலாவ்ருத வர்ஷத்திற்குத் தென்பாகத்தில் சிஷதம், ஹேமகூடம், ஹிமாலயம் என்று மூன்று மலைகள் இருக்கின்றன. இவையும் கிழக்கே நீண்டிருப்பவை. நீலம் முதலிய வடக்கு மலைகளைப்போலவே இரண்டாயிரம் யோஜனை விஸ்தீர்ணமும் பதினாயிரம் யோஜனை உயரமும் உடையவை. இவை ஹரிவர்ஷம், கிம்புருஷ வர்ஷம், பரதவர்ஷம் இவைகளுக்கு எல்லைப் பர்வதங்கள் மலைகள்). அங்கனமே இலாவ்ருத வர்ஷத்திற்கு மேல்பாகத்தில் மால்யவானென்றும் கீழ்ப்பாகத்தில் கந்தமாதனமென்றும் இரண்டு மலைகள் இருக்கின்றன. இவையிரண்டும் வடக்கில் நீலபர்வதம் வரையிலும் தெற்கில் நிஷதபர்வதம் வரையிலும் நீண்டிருப்பவை. இரண்டாயிரம் யோஜனை விஸ்தீர்ணமுடையவை. இவை கேதுமாலம், பத்ராச்வம் என்னும் வர்ஷங்களுக்கு எல்லைப் பர்வதங்கள் (மலைகள்). மந்தரம், மேரு மந்தரம், ஸுபார்ச்வம், குமுதம் என்னும் நான்கு மலைகள் மேருவுக்கு நான்கு புறங்களிலும் அரைநாண் (இடுப்புக் கயிறு) மாலைபோல் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவை பதினாயிரம் யோஜனை விஸ்தீர்ணமும் உயரமும் உடையவை. அவற்றுள் மந்தரபர்வதத்தில் மேலான மா மரமும், மேருமந்தர பர்வதத்தில் சிறந்த காவல் மரமும், ஸுபார்ச்வ பர்வதத்தில் ச்லாக்யமான கடப்ப மரமும், குமுத பர்வதத்தில் ச்ரேஷ்டமான ஆலமரமும் அம்மலைகளுக்கு த்வஜங்கள் (கொடிகள்) ஏற்பட்டிருக்கின்றன. அவை நான்கும் ஆயிரத்து நூறுயோஜனை உயரமும் அவ்வளவு விஸ்தீர்ணமும் உடையவை. அங்கனமே மந்தரத்தில் பால்மடுவும், மேருமந்தரத்தில் தேன்மடுவும், ஸுபார்ச்வத்தில் கருப்பஞ்சாற்று மடுவும், குமுதத்தில் சுத்தஜல மடுவும், ஆக நான்கு மடுக்கள் இருக்கின்றன. பரதச்ரேஷ்டனே! இம்மடுக்களில் ஸ்நான பானாதிகளைச் செய்யும் கந்தர்வர்கள் இயற்கையாகவே அணிமாதி (அணிமாதி ஸித்திகள் -  அணிமா முதலிய எட்டு பலன்கள்) – அவையாவன - 

செவ்வாய், 19 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 123

ஐந்தாவது ஸ்கந்தம் - பதினைந்தாவது அத்தியாயம்

(பரதனது வம்சத்தில் பிறந்த ராஜாக்களைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரதனுக்கு ஸுமதியென்று சொல்லப்பட்ட ஓர் புதல்வன் உண்டு. அவன் ருஷபன் அனுஷ்டித்த யோக மார்க்கத்தை அனுஸரித்திருப்பதைக் கண்டு சில பாஷண்டிகள் (வேத தர்மத்தில் நம்பிக்கை இல்லாத நாத்திக வழியைக் கடைபிடிப்பவர்கள்) புத்தனென்னும் தேவதையைக் கைப்பற்றி அத்தேவதையே இங்கனம் ஸுமதியாக அவதரித்தானென்று தமது பாபிஷ்ட புத்தியால் கற்பிக்கப் போகிறார்கள். அந்த ஸுமதிக்கு க்ருத்ரஸேனை என்னும் பார்யையிடத்தில் தேவதாஜித் என்னும் புதல்வன் உண்டானான். அவனுக்கு ஆஸுரி என்னும் பார்யையிடத்தில் தேவத்யும்னன் என்னும் பிள்ளை பிறந்தான். அவனுக்குத் தேனுமதி என்பவளிடத்தில் பரமேஷ்டியென்னும் பிள்ளை பிறந்தான். அவனுக்கு ஸுவர்ச்சலை என்னும் பார்யையிடத்தில் ப்ரதீஹனென்னும் பிள்ளை பிறந்தான். இவன் பலருக்கு ஆத்ம வித்யையை உபதேசித்து அதனால் பரிசுத்தமான மனமுடையவனாகிப் பரமபுருஷனை உபாஸித்தான். ஸுவர்ச்சலையின் புதல்வனாகிய ப்ரதீஹனுக்கு ப்ரதிஹர்த்தா, ப்ரஸ்தோதா, உத்காதா என்னும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அம்மூவரும் யாகானுஷ்டானத்தில் நிபுணராய் இருந்தார்கள். அவர்களில் ப்ரதிஹர்த்தாவுக்கு ஸ்துதியென்னும் பார்யையிடத்தில் அஜன், பூமன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். பூமனுக்கு ரிஷிகுல்யையென்னும் பார்யையிடத்தில் உத்கீதனென்னும் பிள்ளை பிறந்தான். அவனுக்குத் தேவகுல்யையிடத்தில் ப்ரஸ்தாரனும், அவனுக்கு விகுத்ஸையிடத்தில் விபுவும், அவனுக்குப் பாரதியிடத்தில் ப்ருதுஷேணனும், அவனுக்கு ஆகூதியிடத்தில் நக்தனும், அவனுக்கு க்ருதியிடத்தில் கயனும் பிறந்தார்கள். அவன் ராஜரிஷிகளில் சிறந்தவன்; பெரும் புகழுடையவன்; ஜகத்தை ரக்ஷிக்கும் பொருட்டுச் சுத்த ஸத்வமயமான திருவுருவங்கொண்ட பகவானுடைய அம்சம்; மனச்சிறப்பு முதலிய அடையாளங்களால் மஹா புருஷனாயிருந்தான். அவன் கர்மபலன்களை விரும்பாமல் ப்ரஜைகளைப் பயத்தினின்று காப்பது அவர்களை அன்னதானாதிகளால் ஸந்தோஷப்படுத்துவது பிள்ளைகளைப்போல் சீராட்டுவது துர்மார்க்கத்தினின்று (கெட்ட வழியிலிருந்து) தடுத்து நல்வழியில் நடத்துவது முதலிய தன் வர்ண தர்மத்தினாலும் பஞ்சமஹா யஜ்ஞாதி கர்மங்களை அனுஷ்டிக்கையாகிற தன் ஆச்ரம தர்மத்தினாலும் ஷாட்குண்யபூர்ணனும் ஸ்வரூபத்தினாலும் குணங்களாலும் எங்கும் நிறைந்தவனும் தலைமையுள்ள ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் தேவனும் மஹாபுருஷனுமாகிய ஸர்வேச்வரனிடத்தில் ஸர்வப்ரகாரத்தாலும் ஆத்ம ஸமர்ப்பணம் செய்கையாகிற முக்யமான அங்கத்தோடு கூடியதும் பரப்ரஹ்மத்தை அறிந்த பெரியோர்களின் பாதஸேவையால் விளைந்து வளர்ந்ததுமாகிய பகவத் பக்தியோகத்தினாலும் மனமலங்களெல்லாம் தீர்ந்து மதிதெளியப் பெற்றுத் தேஹமே ஆத்மாவென்னும் ப்ரமத்தையும் (மனக்கலக்கத்தையும்) துறந்து தனக்கு அந்தராத்மாவான பரமாத்மாவை ஸாக்ஷாத்கரித்துத் தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்) ஸ்வதந்த்ராத்மப்ரமம் (நான் பகவானுக்கு அடிமை அன்று; என் இஷ்டப்படி செயல்பட வல்லவன் என்கிற தவறான எண்ணம்) இவையில்லாமலே இந்தப் பூமியைப் பாதுகாத்து வந்தான். 

ஞாயிறு, 17 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 122

ஐந்தாவது ஸ்கந்தம் – பதினான்காவது அத்தியாயம்


(மறைத்துச் சொன்ன ஸம்ஸாரத்தின் கொடுமையை விவரித்துக் கூறுதல்)


ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸர்வேச்வரனாகிய பகவானுடைய வசத்திலிருக்கும் மாயையால் தேஹாத்மாபிமானிகள் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கிடமாகச் செய்யும் நல்லதும் தீயதும் இரண்டும் கலந்ததுமான பலவகைக் கர்மங்களால் விளைகிற தேவ மனுஷ்யாதி தேஹ பரம்பரைகளைப் பெறுகையும் அவற்றைத் துறக்கையுமாகிற ஸம்ஸாரத்தின் அனுபவத்திற்குக் காரணமான செவி, வாய், கண், மூக்கு, தோல், மனம் என்கிற ஆறு இந்திரியங்களின் கூட்டத்தினால், ஜீவாத்மாக்களைக் கொண்ட  இந்த உலகமானது, நுழையமுடியாத காட்டுவழி போன்ற கர்ம மார்க்கத்தில் விழுந்து பணம் ஸம்பாதிக்க முயன்ற வர்த்தகர் கூட்டம்போல், தாம் செய்த கர்மங்களின் பலன்களை அனுபவித்துக்கொண்டு தாம்செய்யும் ப்ரயத்னங்களெல்லாம் (முயற்சிகளெல்லாம்) வீணாவதும் விக்னங்களால் (இடையூறுகளால்) தடைபடுவதுமாகப் பெற்று, ச்மாசனம் (மயானம்) போல் அமங்களமான ஸம்ஸார மார்க்கத்தில் சென்று, அதில் விளையும் தாபங்களைப் போக்குவதும் பாகவதர்களால் அனுஷ்டிக்கப்படுவதுமாகிய பக்தி மார்க்கத்தை, இன்னம் கைப்பற்றாமலே வருந்துகின்றது. இந்த ஸம்ஸார மார்க்கத்தில் ஆறு இந்த்ரியங்களே திருடர்களாகக் கூறப்பட்டன. 


வர்த்தகர் முதலிய ஜனங்கள் மிகவும் ப்ரயாஸப்பட்டு (முயற்சி செய்து) ஸம்பாதித்ததும் தர்மத்திற்கு உபயோகப்படக்கூடியதுமாகிய தனத்தை அவர்கள் மன ஆக்கமற்றிருக்கையில் திருடர்கள் திருடிக்கொண்டு போவதுபோல், இந்திரியங்கள், ஜீவாத்மாக்களைப் பார்த்தல், தொடுதல், கேட்டல், சுவைத்தல், முகருதல், நினைத்தல், நிச்சயித்தல் ஆகிற தன்னுடைய செயல்களால் இல்லற வாழ்க்கையில் உண்டாகும் அற்பமான ஸுகங்களில் மூட்டி மதியைக் (அறிவைக்) கெடுத்து, தம்மை வெல்ல முடியாமல் ஊக்கமற்றிருக்கையில், அவர்கள் நெடுநாளாய் வருந்தி அனுஷ்டித்ததும் பரலோகத்தில் நன்மையை விளைவிப்பதுமாகிய வர்ணாச்ரம தர்மத்தையும் பகவத் ஆராதன ரூபமான தர்மத்தையும் பாழ் செய்கின்றன. பெரியோர்கள் ஜீவாத்மாவுக்கு வர்ணாச்ரம தர்மங்களால் உதவி செய்யப்பெற்ற பகவத் ஆராதன ரூபமான தர்மத்தையே தனமாகக் (செல்வம் என்று) கூறுகிறார்கள். அதை இவ்விந்திரியங்களாகிற திருடர்கள் பறிக்கின்றார்கள். 

செவ்வாய், 12 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 121

ஐந்தாவது ஸ்கந்தம் – பதின்மூன்றாவது அத்தியாயம்

(விரக்தி உண்டாகும் பொருட்டு ரஹோகணனுக்கு ஜடபரதன் ஸம்ஸாரத்தின் கொடுமையைக் கூறுதல்)

ப்ராஹ்மணர் சொல்லுகிறார்:- பகவானுடைய அனுக்ரஹத்தையொழிய மற்ற எவ்வகையிலும் கடக்க முடியாத கர்ம மார்க்கத்தில் ப்ரக்ருதியால் நுழைக்கப்பட்டு ஸத்வ ரஜஸ் தமோ குணங்களால் பிரிந்திருக்கிற கர்மங்களில் கண் வைத்து, வர்த்தகர் பணம் ஸம்பாதிக்கும் பொருட்டுக் காடு மேடெல்லாம் திரிவதுபோல், தர்ம அர்த்த காமங்களில் மனம் சென்ற ஜீவாத்மாக்கள் ஸம்ஸாரமாகிற அடவியில் (காட்டில்) அகப்பட்டு ஸுகத்தை அடையமாட்டார்கள். ஓ மன்னவனே! இவ்வடவியில் (இக்காட்டில்) ஆறு திருடர்கள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நல்வழி தெரியாத ஒருவனைத் தலைவனாகக்கொண்டு திரிகின்ற வர்த்தகர்களைத் தடுத்து மேல்விழுந்து அவரிடத்தினின்று பணத்தைப் பறிக்கின்றார்கள். இதில் நரிகள் பல உண்டு. செந்நாய்கள் ஆட்டை இழுத்துக்கொண்டு போவது போல், அவை மன ஆக்கமற்றிருக்கிற அவ்வர்த்தகர்களின் கூட்டத்தை இழுத்துக்கொண்டு போகின்றன. பல கொடிகளும் புற்களும் புதர்களும் நிறைந்த ஓரிடத்தில் கொடிய காட்டீக்களாலும் கொசுக்களாலும் கடியுண்டு வருந்துவார்கள். ஒருகால் கந்தர்வ நகரத்தைக் கண்டு இது நிலையென்று நினைப்பார்கள். சிற்சில இடங்களில் பெரு வேகமுடைய கொள்ளிவாய்ப் பிசாசத்தைக் (வாயில் நெருப்பைக் கக்கும் பிசாசு) காண்பார்கள். கானல்போன்ற தனத்தில் புத்தி சென்று அவ்வடவியில் (அக்காட்டில்) இங்குமங்கும் திரிவார்கள். சில இடங்களில் சுழற்காற்றால் மேற்கிளம்பின தூள்களால் கண்கள் நிரம்பப் பெற்றுத் திக்கு (திசை) தெரியாதிருப்பார்கள். சில இடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் ஒலிக்கின்ற சுவர்க்கோழிகளின் த்வனியினால் (சப்தத்தால்) காது நோவெடுக்கப் பெறுவார்கள். கோட்டான்களின் கூக்குரல்களால் மன வருத்தமுறுவார்கள். சில இடங்களில் பசியால் வருந்தி எட்டி (கசப்பான விஷமுடைய கனி) முதலிய விஷ வ்ருக்ஷங்களைப் பற்றுவார்கள். சில இடங்களில் கானலைத் தண்ணீரென்று ப்ரமித்து ஓடுவார்கள். சில இடங்களில் ஜலமில்லாத நதிகளைத் தேடிக்கொண்டு சென்று தண்ணீர் காணாமல் தடுக்கிப் பள்ளங்களில் விழுந்து கைகால் ஒடிந்து வருந்துவார்கள். ஒருகால் ஆஹாரமின்றிப் பிறருடைய தனத்தைப் பெற விரும்புவார்கள். ஒருகால் காட்டுத் தீயில் அகப்பட்டு அந்த தீயினால் கொளுத்தப்பட்டு வருந்துவார்கள். ஒருகால் யக்ஷர்களால் ப்ராணன்கள் (உயிர்) பறியுண்டு வருந்துவார்கள். 

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 32 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 20

என்னோட ஆசையை எல்லாம் புலம்ப ஆரம்பித்தேன். நான் ஒன்றும் ஸ்லோகம் எல்லாம் எழுதவே வரவில்லை. எனக்குள்ள துன்பத்தை எல்லாம் உங்களிடம் புலம்பினேன். வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. அந்தப் புலம்பலும் உம் அனுக்ரஹத்தால் பிரபந்தம் ஆகிவிட்டது. உமக்கு வேணுமானால் எதையும் பிரபந்தமாக்குவீர் என்பதற்கு அடியேனே சாட்சி இப்பொழுது. குழந்தை உளறியது என்றாலும் எப்படித் தாய் அன்போட ஏற்றுக்கொள்கிறாளோ, அதைப் போல தேவரீர் இந்த விக்ஞாபனத்தை கேட்டுக் கொள்ளவேண்டும். தள்ளிவிட வேண்டாம். ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

विज्न्यपनं यदिदमद्द्य तु मामकीनम् अङ्गिकुरुष्व यतिराज! दयाम्बुराशे! ।
अग्न्योSयमात्मगुणलेशविवर्जितश्च तमादन्नयशरणो भवतीति मत्वा ॥ (20)

விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம்     
அங்கீகுருஷ்வ யதிராஜ! தயாம்புராஸே |
அஜ்ஞோSயமாத்மகுணலேஸவிவர்ஜிதஸ்ச     
தஸ்மாதநந்ய ஶரணோ பவதீதி மத்வா || (20)

அடியேனுக்கு வேறு புகலிடம் கிடையாது என்று தேவரீருக்குத் தெரிய வேண்டும். வேறு எங்கு நான் போவேன். 

விஜ்ஞாபநம் – ‘வாசாயதீந்த்ர’ என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ, புலம்பியது எது உண்டோ அது விண்ணப்பம் ஆகிவிட்டது. மனமும், சொல்லும் ஒன்றிணைந்து தெரிவித்து விட்டது. 

அத்ய மாமகீநமிதம் அங்கீகுருஷ்வ – இப்போது அடியேன் உடையதான, நீசனுடைய சொல் என்று பாரும், 

இளையபுன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே என்று 
வள எழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை 
துவளத் தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல்
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே ! திருமாலை 45. 

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளியது போல, தாய் தன் குழந்தையின் மழலை சொல்லை ஏற்றுக் கொள்வதுபோல அடியேனுடைய இந்த விண்ணப்பத்தை, பெற்ற தாய் நீர் அப்படித்தானே ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஒருவராவது நாம் எடுத்த முயற்சியைப் புரிந்துகொண்டு நம்மிடத்தில் வந்துவிட்டாரே என்று ராமானுஜர் சந்தோஷப் படவேண்டுமாம். ஆகவே உம் முயற்சி பலித்தது என்று ஏற்றுக் கொள்ளும். 

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 31 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 19

இதே விஷயத்தை ஆர்த்திப்ரபந்தத்தில் கடைசி பாசுரத்தில் மணவாள மாமுனிகள் விண்ணப்பிக்கிறார். ராமானுஜர் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். “கமலாரமணே அர்த்திதா” என்று உள்ளது. அந்த ஒரு நாள்தான் ஸ்ரீரங்க நாச்சியார் பெருமாளோடு சேர்த்தி கண்டருளுகிறார். ஸ்ரீ ரங்கநாச்சியார் அமர்ந்த திருக்கோலம். நம்பெருமாள் நின்ற திருக்கோலம். உட்கார்ந்திருந்தால் வேலை சொல்கிறாள் என்று அர்த்தம், நின்று கொண்டிருக்கிறார் என்றால் வேலை பார்க்கப் போகிறார் என்று பொருள் என்று வேடிக்கையாகச் சொல்லுவர் பெரியோர். முதலில் பிராட்டி திருவடிகளில் சரணாகதி பண்ணி, உமது கணவரை உபாயமாகப் பற்றப் போகிறேன். அதில் உறுதியை எனக்குக் கொடுக்கவேண்டும். பகவானே உபாயம் என்பதில் அடியேனுக்கு நிஷ்டையைக் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறார். பட்டர் ஸாதிக்கிறார், “யாருடைய புருவ நெறிப்புக்கு பகவான் ஓடி ஓடி எனக்கு மோக்ஷம் கொடுப்பாரோ அந்தப் பெரிய பிராட்டியாரோட திருவடியைப் பற்றுகிறேன்” என்றார். அதைத்தான் ஸ்ரீ ராமானுஜர் செய்துள்ளார். சரணாகதி செய்தவுடன் பகவான் உமக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். “நமக்கு மோக்ஷம் வேண்டும்” என்றார். போறுமோ? என்றார் பகவான். “நம் ஸம்பந்தி, ஸம்பந்தி, ஸம்பந்தி அடைவில் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்க பகவான் கொடுத்தோம் என்றார். அதன் பிறகும் பிரார்த்திக்கிறார், “ மனோ வாக் காயை: ..... க்ஷமஸ்வ”

இந்தஅரங்கத்திலினிதிரு நீ யென்றரங்கர்*
ஏந்தை யெதிராசர்க் கீந்தவரம்* சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே! நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாய்முறை தான். ஆர்த்திப்பிரபந்தம் 60

பிரார்த்தனை செய்த பிறகு இனி நான் என்ன செய்யவேண்டும் என்று ராமானுஜர் பெருமாளிடம் கேட்கிறார். இந்த அரங்கத்தில் இரும், துவயம் அர்த்தானுஸந்தானம் செய்துகொண்டிரும் என்று பெருமாள் சொல்லிவிட்டார். உமது பக்தர்களுக்கு உபதேசம் பண்ணிக் கொண்டிரும் என்றார். அந்த சொத்தில் எனக்கும் பங்கிருக்கிறது என்று நல்ல பிள்ளை தெரிந்துகொண்டால் போதும் என்று மணவாள மாமுனி ஸாதிக்கிறார்.

திங்கள், 11 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 30 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 18

தேவரீருடைய ஜனங்கள் என்றால் பாபவிமோசனத்தை நீர் பண்ணிவிடுவீர். நாங்கள் செய்ய வேண்டியது என்ன? ராமானுஜருடைய திருவடியை சேர்ந்த ஜனங்கள் என்று தெரிவதற்கு கூட்டத்துக்குள் நுழைந்து விடவேண்டும். 

ஈஸ்வரன் உமக்கு பவ்யன். அவரே நீர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறார். ஆனால் பண்ணியிருக்கிற குற்றத்தை ஈஸ்வரன் பார்த்தால் அவர் கோவித்துக் கொள்ள மாட்டாரோ. அதற்கு நான் என்ன பண்ணுவேன். ராமானுஜர் புருஷாகாரம் பண்ணுகிறார். பண்ணினால் மட்டும் கிடைத்துவிடுமா? ஒரு கல்லூரியில் தன் மகனுக்கு இடம் வேண்டும் என்று தகப்பனார் சிபாரிசுக் கடிதத்தோடு முதல்வரை அணுகினார். அவன் வாங்கிய மார்க்கோ 55. அதுவாவது பரவாயில்லை என்று சேர்த்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் அவனது நடத்தை சரியில்லை என்று தெரியவந்தால் அப்பொழுது என்ன சொல்லுவார். சிபாரிசு செய்தவரின் பெயரைக் கெடுத்து விடுவாய் என்றல்லவா சொல்லுவார். 

ராமானுஜரிடம் போய் அதுபோல சிபாரிசு கடிதம் பெற்று பகவானை அணுகினேன். அவர் சரி ராமானுஜர் கடிதம் கொடுத்துள்ளார், அதனால் எந்த கர்ம, ஞான, பக்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனாலும் அனாதிகாலமாக பண்ணிய துஷ்க்ருதிகள் கண்டு சீறினால் நான் என்ன செய்வேன். என்று ராமானுஜர் சொல்வதாகக் கொண்டு மணவாள மாமுனிகள் சொல்கிறார். ஒரு முதல்வருக்கு சிபாரிசு கடிதம் கொடுப்பவர் மனதுக்குள் நுழைந்து தான் சிபாரிசு செய்பவன் நல்லவனா கெட்டவனா என்று பார்க்கத் தெரியாது. ஆனால் ராமானுஜரே நீர் அப்படிப் பட்டவரா? நான் உம்மிடம் வந்து விட்டாலே உம் கடாக்ஷம் என் மீது பட்டுடுத்து என்று அர்த்தம். பட்டுவிட்டது என்றாலே அனாதிகால பாபம் தொலைந்து விட்டது என்று அர்த்தம். தொலைந்துவிட்டது என்றாலே பெருமாள் கண்ணுக்கு அது படாது என்று அர்த்தம். இந்த உண்மை எனக்குத் தெரியாதா? அதனால்தானே திரும்பத் திரும்ப வந்து உம்மிடம் நிற்கிறேன். 

லௌகீகத்தில் நமக்கு சிபாரிசு பண்ணுகிறவர்களுக்கு நம் குற்றங்களைப் போக்கும் சக்தி கிடையாது. ராமானுஜர் அப்படியா? தன் கடாக்ஷத்தால் பாபத்தைப் போக்கும் சக்தி உள்ளவராயிற்றே. தேவரீரின் திருக்கண் பார்வை என் மீது பட்டது என்றால் அனாதிகால பாபமும் தொலைந்து விடுமே. வருபவன் அப்பழுக்கற்றவனாக ஆகியிருக்கணும். அந்த மாதிரி மாற்றி அனுப்பக்கூடியவரின் சிபாரிசையே பகவான் ஏற்றுக் கொள்வார். ஆக்கவல்ல சக்தியுள்ளவரிடம்தான் அவர் உரிமையைக் கொடுப்பார். உம் கடாக்ஷத்தால் என் பாபம் தொலையும். 

ஞாயிறு, 10 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 29 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 17

இஷ்டத்தை எல்லாம் கொடுக்கவேண்டும் அனிஷ்டத்தைப் போக்கவேண்டும் என்று சொன்னீர். இதையெல்லாம் செய்ய வேண்டியது சர்வேஸ்வரன் தானே என்றார் ராமானுஜர். அவரிடம் கேளும். நம்மிடம் கேட்கின்றீரே. இதைச் செய்யவேண்டியது ஸர்வேஸ்வரன் இல்லையோ. 

அந்த ஸர்வேஸ்வரன் பொறுப்பை எப்பவோ உம்மிடம் ஒப்படைத்து விட்டாராமே. அப்படித்தானே நாம் கேள்விப்பட்டோம். பொறுப்பை ஒப்படைத்தபிறகு அவரிடம்போனால் கோபம்தான் கிடைக்கும். அதுக்குன்னு ஒருத்தரை நியமித்து விட்டேன். என்னைப் பார்த்தால் நரகம்தான் என்பார் எம்பெருமான். 

உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து* அவர்க்கு உயவே        
பண்ணும் பரனும் பரிவில்னாம்படி* பல்லுயிர்க்கும்             
விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமானுசன்   
மண்ணின் தலத்துதித்து* உய் மறை நாலும் வளர்த்தனனே.      இராமானுச நூற்றந்தாதி 95.

உம்மையல்லவோ நியமித்துள்ளான். விஷ்ணு லோகத்திற்கு போவதற்கு உள்ள மார்க்கத்தைக் காட்டுவதே நீர். உம்மால் முடியாதது உண்டோ? அவதாரத்துக்காக ஸர்வேஸ்வரன் தலையில் ஏறிட்டருளினீர் ஆகில், அந்த ஈஸ்வரன் தான் உமக்கு வஸ்யன் அன்றோ. 

சனி, 9 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 28 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 16 

சரி. இப்ப உம்மிடம் உள்ள குற்றத்தையெல்லாம் விண்ணப்பம் செய்துவிட்டீரா? புரிந்தது. சரணாகதனாக வந்திருக்கின்றீர். என்னையே புகலாகக் கொண்டுள்ளீர். நான்தான் ரக்ஷிக்கணும் என்று புரிந்துவிட்டது. உமக்கு என்ன வேணும்? உமக்கு அநிஷ்டம் எது. இஷ்டம் எது. அநிஷ்டத்தைப் போக்கி இஷ்டத்தைக் கொடுக்கிறோம். வேண்டுவதென்ன என்று ராமானுஜர் கேட்க இப்பொழுது திரும்ப பிரார்த்திக்கிறார்:

பகவானின் அடியவனுக்கு, அடியவனுக்கு அடியவனுடைய குடிசையில் போய் கைங்கர்யம் பண்ண வேண்டும். 

அனாதி காலமாக விஷயாந்தரங்களில் பிராவண்யனாக இருக்கிறேனே. இது அநிஷ்டம். அதைத் தொலைத்துக் கொடுக்கவேண்டும். அனாதிகாலமாக உம்மிடத்து, பகவானிடத்தும் ப்ரீதி இல்லாமல் இருக்கின்றேனே. அது இஷ்டம். அந்த ருசியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அநிஷ்டத்தைத் தொலைத்து இஷ்டத்தை ஏற்படுத்திக் கொடும். உமக்கு அடியவனுக்கு, அடியவனுக்கு அடியவனுடைய குடிசையில் போய் கைங்கர்யம் பண்ண வேண்டும். அந்த தாஸ்ய ரஸத்தை அடியேனுக்குக் கொடுத்தருள வேண்டும் என்று மணவாள மாமுனிகள் பிரார்த்திக்கிற ஸ்லோகம்: 

शब्दादिभोगविषया रुचिरस्मदीया नष्टा भवत्विह भवद्द्यया यतीन्द्र ! ।
त्वद्दासदासगणनाचरमावधौ यः तद्दासतैकरसताSविरता ममास्तु ॥ (16)

ஸப்தாதி போக விஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர! |
த்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ ய:
தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து || (16)

தாஸனுக்குத் தாஸனுக்குத் தாஸனிடம் கைங்கர்யம் பண்ணும் ருசி அடியேனுக்கு ஏற்படட்டும். முதல் பாதி ஸ்லோகம் அநிஷ்டத்தைத் தொலைக்கணும் என்பதும் இரண்டாவது பாதி இஷ்டத்தைக் கொடுக்கணும் என்றும் பிரார்த்திக்கிறது. 

புதன், 6 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் – 120

ஐந்தாவது ஸ்கந்தம் – பன்னிரண்டாவது அத்தியாயம்

(ரஹோகணனுடைய ஸந்தேஹங்களுக்கு ஜடபரதர் ஸமாதானம் கூறுதல்).

ரஹோகணன் சொல்லுகிறான்:- நீர் பரமாத்மாவுக்கு வாஸஸ்தானமாயிருப்பவர். எங்களைப் போன்ற ஜனங்களைப் பாதுகாக்கும் பொருட்டே நீர் இச்சரீரம் கொண்டவர். நீர் ஆத்மஸ்வரூபத்தை அறிந்து அதையே அனுபவித்துக்கொண்டிருக்கும் தன்மையராகையால் அபராதம் செய்தவரிடத்திலும் விரோதத்தைப் பாராட்டுகின்றவரல்லர். நீர், எப்பொழுதும் பரமாத்மானுபவத்தில் ஆழ்ந்திருப்பவராயினும் எல்லோரும் அவமதிக்கும்படி ப்ராஹ்மண அதமனுடைய (ப்ராஹ்மணர்களில் மிகவும் தாழ்ந்தவன் போன்று) வேஷம் பூண்டிருக்கின்றமையால் அது ஒருவர்க்கும் தெரியாமல் மறைந்திருக்கின்றது. இத்தகைய உமக்கு நமஸ்காரம். 

ப்ராஹ்மணச்ரேஷ்டரே! ஜ்வரத்தினால் வருந்தினவனுக்குச் சுத்தமான ஔஷதம் போலவும், கோடை காலத்து வெயிலில் அடிபட்டவனுக்குத் தண்ணீர் போலவும், ஆபாஸமான தேஹத்தில் ஆத்மாபிமானமாகிற ஸர்ப்பத்தினால் நன்கு கடியுண்ட விவேகமென்னும் கண்ணுடைய எனக்கு வருத்தங்களையும் தாபங்களையும் போக்குவதாகிய உமது மொழி அம்ருதம் போன்ற, ஔஷதமாயிருக்கின்றது. ஆனால் எனக்கு இவ்விஷயத்தில் சில ஸம்சயங்கள் (ஸந்தேஹங்கள்) உண்டு. அவற்றைப் பிறகு கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நீர் மொழிந்தது ஆத்மயோக விஷயங்கள் பலவும் நிறைந்திருக்கையால் எனக்கு எளிதில் அறிய முடியாமல் இருக்கின்றது. அதை நான் நன்றாக அறியும்படி விவரித்துச் சொல்வீராக. இதை நன்றாக அறிய வேண்டுமென்று என் மனம் மிகவும் குதூஹலப்படுகின்றது. 

யோகேச்வரரே! கார்யங்களைச் செய்யும்பொழுது வேர்வை முதலியவை ப்ரத்யக்ஷமாய் உண்டாக நாம் காண்கின்றோம். மிகவும் ச்ரமப்பட்டாயென்று உலகத்தில் ஜனங்கள் வழங்குவதும் உண்மையாகவே தெரிகின்றது. அப்படியிருக்க அது உண்மையன்றென்று நீர் மொழிந்தீர். நீர் சொன்னதின் கருத்தை என் மனம் எளிதில் அறியமுடியாமல் ப்ரமிக்கின்றது. ஆகையால் இதை விவரித்துச் சொல்வீராக.

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 27 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 15 

இது மட்டுமல்ல கூரத்தாழ்வான், ஆளவந்தார், பராசர பட்டர் ஆகியோர் தங்களை நீசர் என்று சொல்லிக் கொண்டு பகவானைப் ப்ரார்த்திக்கின்றனர். அதை எடுத்துத் தன் குற்றங்களாகச் சொல்லிக் கொள்கிறார்.

शुद्धात्मयामुनगुरूत्तमकूरनाथ भट्टाख्यदेशिकवरोक्तसमस्तनैच्यम्।
अध्यास्त्यसन्ङुचितमेव मयीह लोके तस्माध्यतीन्द्र! करुणैव तु मद्गतिस्ते ॥ (15)

க்ஷுத்தாத்மயாமுந குரூத்தமகூரநாத பட்டாக்ய
தேசிகவரோக்தஸமஸ்தநைச்யம் 
அத்ய அஸ்தி அஸங்குசிதம் ஏவ மயீஹ லோகே
தஸ்மாத்யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே || (15)

தேவரீருடைய கருணையேதான் எனக்குக் கதி. 

க்ஷுத்தாத்மயாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிகவர - குற்றமற்றவர்களான யாமுனாசார்யரென்னும் ஆளவந்தார், ஆத்ம குணம் நிறைந்தவர்களில் மிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வான், அவருடைய திருக்குமாரரான பராசரபட்டர் (பூர்வாசார்யர்களில் மிகப் பெருமை வாய்ந்தவர்கள் உயர்ந்தவர்கள்) இவர்களெல்லோரும் குற்றம் இருக்கு, குற்றம் இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறர்கள். ஆனால் என்னிடம் தான் குற்றம் அதிகம் இருக்கிறது. நான் சொல்லிக்கொள்வதோ என்னைப் போல பக்திமான் யார் இருக்கிறார்களென்று. எனைப்போல பிழை செய்வாருண்டோ? 

உக்த ஸமஸ்த நைச்யம் – இவர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் குற்றங்கள் நிறைய இருப்பதாகவும், நீசன், நீசன் என்று என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே.

அத்ய அஸங்குசிதம் மயி இஹ லோகே ஏவ (அஸ்தி) - (இவர்கள் சொல்லிக்கொள்கிற குற்றங்கள் எல்லாம்) இன்றும் இங்கேயும் துளிக்கூட குறையாமல் என்னிடம் இருக்கின்றது. தேடவே வேண்டாம். என்னிடமே எல்லாம் இருக்கிறது. யார் யாரெல்லாம் என்ன நைச்யம் சொல்லிப் போயிருக்கிறார்களோ அது அத்தனையும் என்னிடத்தில் இருக்கிறது. இங்கே இருக்கிறது. இன்றே இருக்கிறது என்கிறார். வட்டிக்கு விட்டா அசல் கூடுமா கூடாதா? யாமுனாசாரியார் காலமெங்கே. கூரத்தாழ்வான் காலமெங்கே ராமானுஜர் காலமும், அதற்கு முந்தைய காலமும். ஆகையினாலே அதிகமாகவே கூடிய குற்றங்கள் என்னிடம் இருக்கிறது. ராமானுஜர் பார்வைக்குக் குற்றமே தெரிவதில்லை. குற்றங்கள் இல்லையே என்கிறார். நன்றாகப் பாரும் என்னிடமே எல்லாக் குற்றங்களும் நிறைவற இருக்கிறது. 

ராமானுஜருடைய திருவடிகளையே ஆஶ்ரயித்து இருங்கள் நல்ல கதி கிடைக்கும்.