வெள்ளி, 29 அக்டோபர், 2004

முதலில் பெரியாழ்வாரைப் பற்றிப் பார்ப்போம்....

திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர் என்னும் சோழிய பிராமனர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும் பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது. அதுவே பின்னாளில் பெரியாழ்வார் என்றும் பட்டர் பிரான் என்றும் போற்றி புகழப்பட்டார். இவரது ஆண்டுக் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இவர் நன்கு படித்து, திருமாலுக்குத் தொண்டு செய்யும் எண்ணம் கொண்டு பலவகைப்பட்ட மலர்ச்செடிகளை வைத்து, அம்மலர்களால் அழகிய மாலைகள் தொடுத்து திருமாலிற்கு சாற்றிப் பெருவசம் அடைந்தார். இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44 திருமொழிகளாகப் பாடினார். இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும் மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் பாடிய தலங்கள்

1. திருவரங்கம்

2. திருவெள்ளறை

3. திருப்பேர்நகர்

4.கும்பகோணம்

5. திருக்கண்ணபுரம்

6. திருச்சித்திரக்கூடம்

7. திருமாலிருஞ்சோலை

8. திருக்கோட்டியூர்

9. திருவில்லிப்புத்தூர்

10. திருக்குறுங்குடி

11. திரு வேங்கடம்

12. அயோத்தி

13. சாளக்கிராமம்

14. பத்ரிநாத்

15. தேவப்ரயாகை

16. துவாரகை

17. மதுரா

18. ஆய்ப்பாடி

19. திருப்பாற்கடல்

20. பரமபதம்.

இனி இவரின் பாடல்களை பார்ப்போம்.



பெரியாழ்வார் திருமொழித் தனியன்கள்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்தது



குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்

நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக

ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்

த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி



பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

இருவிகற்ப நேரிசை வெண்பா



மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று, ஒருகால்

சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்

கிழியறுத்தா னென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே, வந்து



பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று

ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய

வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்

பாதங்கள் யாமுடைய பற்று.



பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.





(அரங்கனுக்கு மாமனாரும், அந்தனர்க் குலத்தலைவருமான பெரியாழ்வாரை வணங்குகிறேன். பெரியாழ்வாருக்கு விஷ்ணுசித்தர், விட்டு சித்தர், பட்டர்பிரான் என்ற பெயர்களும் உண்டு. இவரின் மகள்தான் ஆண்டாள்.)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக