பாடல்10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்
பொருள்: கிருஷ்ணனின் தரிசனத்திற்காக நோன்பு நோற்று அந்த இன்பத்திலேயே மூழ்கியிருக்கும் தலைவியே! உன் வாசல் கதவை திறக்காதிருப்பதின் மர்மம் என்ன? உள்ளிருந்துகொண்டே ஏன் பேச மறுக்கிறாய்? நறுமணமுள்ள துளசியை அணிந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணன், நமது நோன்பை ஏற்று அருள்தரக் காத்திருக்கிறார். ஒரு காலத்தில் எமனிடம் சிக்கி வீழ்ந்த, கும்பகர்ணனைவிட நீ துõக்கத்தில் பெரிய ஆளாக இருக்கிறாய். அவன் உனக்கு தனது தூக்கத்தை பரிசாகத் தந்துவிட்டுப் போய்விட்டானோ? சோம்பல் கொண்டவளே! கிடைத்தற்கரிய ஆபரணமாக எங்களுக்கு வாய்த்தவளே! துõக்கம் தெளிந்து உடனே கதவைத்திற.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக