பாடல்12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்: கறப்பதற்கு ஆளில்லாததால் மடுக்கள் வலி எடுக்க இளங்கன்றுகளைக் கொண்ட
எருமைகள் அங்குமிங்கும் கதறியபடி ஓடுகின்றன. தங்கள் கன்றுகளை மனதில் நினைத்து, அவை தங்களிடம் பால் குடிப்பதுபோல கற்பனை செய்துகொள்கின்றன. அந்த நினைவிலேயே பாலைச் சொரிகின்றன. அப்படிப் பெருகிய பால் வீட்டு முற்றத்தில் தேங்கி, சேறாக மாறியது. இப்படி பால் பொழியும் கோகுலத்தில் ஏராளமான செல்வத்தை உடைய கோபால குலத்தைச் சேர்ந்தவனின் தங்கையே! எங்கள் தலையில் பனி கொட்டுகிறது. ஆனாலும், உனக்காக உன் வீட்டின் முன்பு காத்து நிற்கிறோம். நமது கண்ணபிரான் தென்திசையிலுள்ள இலங்கைக்கு அரசனான ராவணனை "தர்மாவேசம்' என்ற கோபத்தால் கொன்றொழித்தான். ராமபிரான் என்று பெயர் தாங்கினான். அப்படிப்பட்ட இறைவனை நாங்கள் புகழ்ந்துபாடியும் நீ வாய் திறக்காமல் இருக்கிறாயே! எல்லாரும் எழுந்துவிட்டனர். உனக்கு மட்டும் என்ன உறக்கம்? இனியாவது எழுந்திரு.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்: கறப்பதற்கு ஆளில்லாததால் மடுக்கள் வலி எடுக்க இளங்கன்றுகளைக் கொண்ட
எருமைகள் அங்குமிங்கும் கதறியபடி ஓடுகின்றன. தங்கள் கன்றுகளை மனதில் நினைத்து, அவை தங்களிடம் பால் குடிப்பதுபோல கற்பனை செய்துகொள்கின்றன. அந்த நினைவிலேயே பாலைச் சொரிகின்றன. அப்படிப் பெருகிய பால் வீட்டு முற்றத்தில் தேங்கி, சேறாக மாறியது. இப்படி பால் பொழியும் கோகுலத்தில் ஏராளமான செல்வத்தை உடைய கோபால குலத்தைச் சேர்ந்தவனின் தங்கையே! எங்கள் தலையில் பனி கொட்டுகிறது. ஆனாலும், உனக்காக உன் வீட்டின் முன்பு காத்து நிற்கிறோம். நமது கண்ணபிரான் தென்திசையிலுள்ள இலங்கைக்கு அரசனான ராவணனை "தர்மாவேசம்' என்ற கோபத்தால் கொன்றொழித்தான். ராமபிரான் என்று பெயர் தாங்கினான். அப்படிப்பட்ட இறைவனை நாங்கள் புகழ்ந்துபாடியும் நீ வாய் திறக்காமல் இருக்கிறாயே! எல்லாரும் எழுந்துவிட்டனர். உனக்கு மட்டும் என்ன உறக்கம்? இனியாவது எழுந்திரு.
கருத்துரையிடுக