பாடல்17
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்,
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
பொருள்: ஏழைகளுக்கு ஆடைகளையும், தண்ணீரையும், உணவையும் அவர்கள் திருப்தி அடையும்வரை தர்மம் செய்கின்ற எங்கள் தலைவனே! நந்தகோபனே! எழுவாயாக. பூங்கொடிபோன்றவளும், எங்கள் குலக்கொழுந்தும், குலவிளக்கும், தலைவியுமான யசோதையே! எழுவாயாக. விண்ணையும் மண்ணையும் அளந்தவனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான கண்ணனே! எழுவாயாக. தங்கத்தால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த திருவடிகளைக் கொண்ட செல்வச்சீமானாகிய பலதேவனே! நீயும் உன் தம்பி கண்ணனும் உடனே எழுந்தருளுங்கள். உங்களைத் தரிசிப்பதற்காக காத்திருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக