பாடல்20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பன்ன மென்முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்.
பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டால்கூட அதைத் தடுப்பதற்காக அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்றுவிடும் கண்ணனே! எழுவாயாக. பக்தர்களை காக்கவும், தீமையை அழிக்கவும் வல்லவனே! நேர்மை கொண்டவனே! உன் அடியார்களின் எதிரிகளுக்கு பயம் என்ற காய்ச்சலை கொடுப்பவனே! நல்ல குணம் உள்ளவனே! எழுவாயாக. குவிந்த மார்பு, பொற்கலசம் போன்ற வாய், பவளச் செவ்வாய், நுண்ணிய இடையை உடைய நப்பின்னை பிராட்டியே! மகாலட்சுமி போன்றவளே! நீயும் எழுவாய். எங்கள் நோன்பிற்குத் தேவையான விசிறியும் கண்ணாடியும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இந்தக் கணத்திலேயே உன் அருளால் எங்களை நீராட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக