திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்


பொருள்: மை தீட்டிய பெரிய கண்களை உடைய நப்பின்னை பிராட்டியே! உன் இல்லத்தில் நான்குபுறமும் குத்துவிளக்குகள் எரிகின்றன யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மீது
மிருதுவான பஞ்சணை விரித்து உன் மார்பில் தலைவைத்து, உன் கணவன் கண்ணபிரான் துõங்கிக் கொண்டிருக்கிறான் அவனை விட்டு பிரியும் சக்தி இல்லாததால், அவனை எழுப்பாமல் இருக்கிறாய் ஒரு கணம்கூட அவனைப் பிரியமாட்டாய் என்பது எங்களுக்குத் தெரியும் ஆனாலும் எங்கள் தரிசனத்திற்காக அவனை எழுப்பு அப்படிச் செய்யாமல் இருந்தால் உன்னுடைய நற்குணத்துக்கு (கிருபை) அது பொருந்தாத செயலாகும் அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக