பாடல்27
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூட, நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
பொருள்: கட்டுப்படாதவர்களை வெல்லும் குணம் கொண்ட கோவிந்தனே! நாங்கள் உனது சன்னதியில் உள்ளம் குளிர கூடியிருக்கிறோம். எங்கள் விரதத்தை ஏற்று இவ்வுலக மக்கள் பாராட்டும்படியாக நீயும் உன் மனைவி நப்பின்னை பிராட்டியும் இணைந்து எங்களுக்கு சூடகம், தோள்வளை, தோடு, கர்ணப்பூ பாடகம் என சொல்லப்படும் காலில் அணியும் அணிகலன் ஆகியவற்றை தாருங்கள். நீங்கள் தரும் பட்டாடைகளை நாங்கள் உடுத்திக் கொள்வோம். அதன்பிறகு கையில் நெய் வழிய பால்சோறு சாப்பிடுவோம். உன்னைப் பாடுவதையே எங்கள் கடமையாக எண்ணுகிறோம். இத்தனை நாளும் இருந்த விரதத்திற்கு பலனாக உன் அருளை வேண்டுகிறோம். இதுவே நாங்கள் பெற விரும்பும் சன்மானம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக