சனி, 16 ஜனவரி, 2021

வேதம் கேட்கவேண்டும் - முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாசாரியார்

வேதம் புரியாது என்பார்கள். ஆனால், அதை கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம். வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது.

அதர்வண வேதம் சொல்கிறது....

ஒருவர் கோயிலுக்குப் போய் பகவானைச் சேவிக்கிறார். பகவான் இவரை அனுக்ரஹித்தாரா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?!


கோயிலில் ஓரிடத்தில் வேத பாராயணம் நடக்கிறது. அந்த வேத சப்தத்தைக்கேட்டு அங்கே போய் அவர் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறார். எப்போது வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வேத பாராயணத்தைக் கேட்கிறாறோ அப்போது பகவான் அவரைப் பார்த்து விட்டான் என அர்த்தம்.


ந்ருஸிம்ஹ அவதாரத்தின் முன்பு பகவான் சொன்னான் 'யதா வேதேஷூ' என்று. எவன் வேகத்தை நிந்திக்கிறானோ, அவனுக்கு நற்கதி கிடைக்காது என்று அர்த்தம். 


வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாமல் ஒருவர் ஹோமம் பண்ணினாலும் பலன் கிடைக்குமா என்று சிலருக்கு சந்தேகம். பலன் கிடைக்கும் என்கிறது வேதம்.


ப்ரம்மச்சாரி பையன் தன் உபநயனத்தின்போது (பிக்ஷாடணம்) - பிச்சை எடுக்கக் கற்றுக் கொள்கிறான். ஒவ்வொரு வீட்டின் முன்பும் 'பவதி பிஷாந்தேஹி' என்கிறான். அதன் அர்த்தம் அவனுக்குத் தெரியாது. ஆனால், அந்த வீட்டுப் பெண்மணி அவன் பாத்திரத்தில் அரிசியை இடுகிறாள். பாத்திரம் நிறைகிறது. இவனுக்கு அர்த்தம் தெரியாமல் போனாலும் அந்த பெண்மணிக்கு தெரிந்ததால் பிட்ஷை கிடைத்தது. அது போல், வேத மந்திரத்துக்கு நமக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும் தேவதைகளுக்குத் தெரியும். அவர்கள் ஓடி வந்து நாம் கொடுப்பதை ஸ்வீகரித்து நம்முடைய அபீஷ்டத்தை பூர்த்தி பண்ணுவார்கள். 


முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாசாரியார் உரையிலிருந்து... - கௌசல்யா


நன்றி - தீபம் ஜூன் 2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக