பாடல்23
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே, நீபூவைப்பூ வண்ணா! உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திலிருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
பொருள்: இந்த பாடலை கண்ணனின் வளர்ப்புத்தாய் யசோதை பாடுவதுபோல ஆண்டாள் வடிவமைத்திருக்கிறாள். மழைக்காலத்தில் மலைக்குகையில் பதுங்கி படுத்துறங்கும் வீரம் மிக்க சிங்கம் உறக்கம் தெளிந்து எழுகிறது. நெருப்புப்பொறி பறக்கும் கண்களை திறக்கிறது. தனது ரோமத்தை சிலிர்த்து, உடலை உதறி, சோம்பல் முறித்து, பெருமை பொங்க நிமிர்ந்து கர்ஜிக்கிறது. குகையிலிருந்து தோரணையுடன் வெளியே வருகிறது. அந்த சிங்கத்தைப் போல், நீல வண்ண கண்ணனே! நீயும் உன் இருப்பிடத்திலிருந்து நாங்கள் காத்திருக்கும் இடத்திற்கு எழுந்தருள்வாயாக. பூப்போன்றவனே! அழகிய வேலைப்பாடுகள் அமைந்த இந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்து எங்களது கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வைப்பாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக