திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்24

அன்று இவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையா எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்


பொருள்: மகாபலியின் ஆணவத்தை அடக்குவதற்காக உலகத்தையே அளந்தவனே! உன் திருவடிகளுக்கு எங்கள் வணக்கம். தென்னிலங்கைக்கு சென்று ராவணனை தோற்கடித்தவனே! உன் திறமையை போற்றுகிறோம். சகடாசுரன் என்ற அரக்கனை உதைத்தவனே! உன் புகழ் என்றும் வளர வாழ்த்துகிறோம். கன்றின் வடிவாக வந்த அசுரனை வீசி எறிந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறேன். கோவர்த்தன மலையை குடையாக எடுத்தவனே! உன் மங்களகரமான குணம் எங்களுக்கும் வேண்டுமென வேண்டுகிறோம். பகைவர்களை அழிக்கும் உன் வேலுக்கு மங்களம் உண்டாகட்டும். உனது வீர சரிதத்தை நாங்கள் இவ்வளவு நேரமும் பாடினோம். எங்கள் பிரார்த்தனையை ஏற்று நாங்கள் எந்நாளும் மகிழ்ந்திருக்க அருள் தர மன்றாடி வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக