திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்30

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.

பொருள்: அழகுமிக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவளும், குளிர்ந்த தாமரை மலர்களால் ஆன மாலையை அணிந்தவளும், பெரியாழ்வாரின் திருமகளுமான ஆண்டாளாகிய நான், முப்பது பாசுரங்களைக் கொண்ட தமிழ் மாலையான திருப்பாவையை பாடியிருக்கிறேன். இதில் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் வழங்கியவனும், மாதவனும், கேசவனுமான கண்ணபிரானின் புகழைப் சொல்லியிருக்கிறேன். அவனை சந்திரபிம்பம் போன்ற அழகிய முகம் கொண்டவர்களும், அழகிய ஆபரணங்கள் அணிந்தவர்களுமான கோபியர்கள் மார்கழியின் முப்பது நாளும் வணங்கச் சொல்வார்கள். அந்தத் திருவரலாற்றை இந்தத் திருப்பாவையில் சொல்லியிருக்கிறேன். இம்மாதத்தில் இதை தவறாமல் பாடுவோர், மலைகள் போன்ற தோள்களையும், சிவந்த கண்களையும், அழகிய முகத்தையும், செல்வத்தையும் உடைய திருமாலின் திருவருள் பெற்று ஆனந்தம் அடைய வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக