திங்கள், 17 டிசம்பர், 2007

பாடல்4

ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்

ஆளியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந் தோளுடையப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்,

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள்: கடல்போல் பரந்து விரிந்திருக்கும் கம்பீரமான தோற்றம் உள்ள மழைதேவதையே! நீ, ஒரு சொட்டு தண்ணீரைக்கூட உன்னிடம் வைத்துக்கொள்ளாதே. கடலில் மூழ்கி நீரை அள்ளிக்கொண்டு ஆரவாரத்துடன் வானத்தை நோக்கிச் செல்! காலம், நேரம் முதலிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் எம்பெருமானாகிய நாராயணனின் திருமேனி போல் உன் உடலை கருப்பாக்கிக் கொள். அந்த பத்மநாபனின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் போல் மின்னலை வெட்டு. அவனது பாஞ்சஜன்யம் என்னும் வலம்புரி சங்கு ஒலிப்பதுபோல இடியை முழக்கு. அவனிடமுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல மழையைப் பொழி. இவ்வுலகில் எல்லோருக்கும் நல்வாழ்வைக் கொடு. இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் தினமும் நீராடி மகிழும் வகையில் புத்தம்புது நீரைத் தரும் வகையில் தாமதிக்காமல் பெய்வாயாக!
மார்கழியில் மழை பெய் கிறதே... ஐப்பசி, கார்த்திகையில் அல்லவா அடைமழை பெய்திருக்க வேண்டும் என்று நாம் இப்போது பெய்யும் மழையைப் பார்த்து பேசிக் கொள்கிறோம். ஆண்டாள், பெருமாளிடம் மார்கழி மாதத்தில் நாங்கள் நீராடி விரதமிருக்க புத்தம் புதுதண்ணீர் வேண்டும் என கேட்கிறாள். எனவே, இப்போது தமிழகத்தில் பெய்யும் மழை ஆண்டாளின் அருட்கொடை என்றே கொள்ள வேண்டும்.

மழைதேவதையே! ஒரு சொட்டு தண்ணீரைக்கூட உன்னிடம் வைத்துக்கொள்ளாதே. கடலில் மூழ்கி நீரை அள்ளிக்கொண்டு வானத்தை நோக்கிச் செல்! காலம், நேரம் முதலிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் எம்பெருமானாகிய நாராயணனின் திருமேனி போல் உன் உடலை கருப்பாக்கிக் கொள். அவனது கை யிலுள்ள சக்கரம் போல் ஒளிவீசும் மின்னலை வீசு. அவன் ஊதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு ஒலிப்பதுபோல இடி முழக்கு. அவனிடமுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல மழையைப் பொழி. எல்லோருக்கும் நல்வாழ்வைக் கொடு. இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் தினமும் நீராடி மகிழும் வகையில் புத்தம்புது தண்ணீரைக் கொடு என்கிறாள் ஆண்டாள்.




webdunia

கோப கன்னிகைகள் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழிய வேணுமென்று மநோரதித்தவாறே, பர்ஜன்ய தேவதை ஓடி வந்து அவர்களை வணங்கி மழை பொழியும் வகையை நியமித்தருள வேணுமேன்று ப்ரார்த்திக்க, இவர்களும் நியமிக்கிறார்கள் ஸமுத்ரம் போல் கம்பீரமான தன்மை படைத்தவனே, மழைக்கு நிர்வாஹகனே, மண்டலாகாரமான வர்ஷத்திற்கு நியாமகனே என்றும் கொள்ளலாம். புண்யாத் மாக்களைக் கைக்கொண்டு பாபாத்மாக்களையும் காக்குமியல்பினளான பிராட்டியைப் பின்பற்றி உள் ஒளதார்யத்தில் ஒன்றையும் குறைக்காதே மழை பொழியவேணும். மஹா ஸமுத்ரத்தின் நடுவில் புக்குத் தண்ணீரை முகந்து கொண்டு, உன் சப்தத்தால் நாட்டார் வாழும் படி முழங்கிக் கொண்டு ஆகாசத்திலேற வேண்டும்.ஸ்ருஷ்டிகாலத்தில் கருணையாகிற நீர் நிரம்பிய பகவான் திருமேனி மாதிரி உன் மேனி கறுத்திருக்க வேண்டும். ( மெய் கறுத்து என்பதால் அகவாயில் கருணையில்லை என்பது ஸ்பஷ்டம் ) பலமுள்ள அல்லது விசாலமான அழகிய தோள் படைத்தவனாய் திருநாபியில் தாமரையைத் தாங்கினவரான பகவானுடைய கையில் உள்ள சக்கரத்தாழ்வான் மாதிரி மின்னவேண்டும். ஒருவனுக்கு வெகு காலம் குழந்தை இல்லாமலிருந்து பிறகு பிறந்தால், ஸந்தோஷமிருந்தாலும் தன் கர்ம பீர்யத்தால் அதை வெளிக்காட்டிக் கொள்ளான். அவனைச் சேர்ந்தவர்கள் பலவாறாக அதை ப்ரகாசப்படுத்துவார்கள். அதே போல் ஸர்வேச்வரனுக்கும் வெகுகாலம் குழந்தை இல்லாமலிருந்த திருநாபிக் கமலத்தில் ப்ரஹ்மாவாகிற குழந்தைபிறந்தார். பகவான் தன் கம்பீரஸ்வபாவத்தால் ஸந்தோஷத்தை வெளிக்காட்டவில்லை. ஆனால் பகவானைச் சேர்ந்த ஸுதர்சனாழ்வான் ஸந்தோஷத்தால் அப்போது மிகவும் ப்ரகாசித்தார். அது போல் நீயும் ப்ரகாசிக்க வேணும் என்று கருத்து. இது பத்மநாபன் கையில் ஆழி போல் என்பதால் கிடைக்கக் கூடிய பொருள். ப்ரதி கூலரி மனத்தைப் பிளக்கக் கூடியதும் அனுகூலர்க்கு ஆனந்த ஜனகமுமான சப்தத்தையுடைய பாஞ்சஜன்யம் போல் நீயும் சப்திக்க வேண்டும். பாஞ்ச ஜன்யம் பாரதயுத்தத்தில் ஒரு ஸமயம் முழங்கிப் பின்பு நின்று விட்டது. நீ தொடர்ந்து முழங்க வேண்டும். தேவதாந்தரங்களைப் போல் விளம்பிக்காமல் சார்ங்கம் பொழிந்த பாணவர்ஷம் போல் நீ உடனே பொழிய வேண்டும். பாணவர்ஷத்தால் உலகமழிந்தது. உன் வர்ஷத்தால் உலகம் வாழவேண்டும். நாங்களும் எங்கள் முயற்சி ஸபலமாயிற்றென்று மகிழ்ந்து மார்கழி நீராடவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக