திங்கள், 28 அக்டோபர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 64

மூன்றாவது ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்
(வராஹ பகவான் ஹிரண்யாக்ஷனை ஸம்ஹாரம் செய்தல்)
மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த ப்ரஹ்மதேவன் மொழிந்த வார்த்தை நிர்த்தோஷமும் அம்ருதம்போல் மிக்க மதுரமுமாயிருந்தது. ஸ்ரீபகவான் அந்த வார்த்தையைக் கேட்டு “ஸர்வ ஸம்ஹாரகனான எனக்கும் சத்ரு பலத்தினின்று பயம் சொல்லுகிறானே” என்று சிரித்து ப்ரீதியை உட்கொண்டதாகிய கடைக் கண்ணோக்கத்தினால் அவ்வசனத்தை அங்கீகரித்தான். ப்ரஹ்மதேவனுடைய க்ராணேந்தயத்தினின்று தோன்றின அவ்வராஹ பகவான், அப்பால் ஒன்றுக்கும் பயப்படாதவனும் எதிரே நின்று ஸஞ்சரிக்கின்றவனுமாகிய அவ்வஸுரன் மேல் கிளம்பி கதையினால் கன்னத்தின் கீழ் ப்ரதேசத்தில் அடித்தான். அவ்வஸுரன் அந்த கதை தன்மேல் வருவதற்கு முன்னமே அதைத் தன் கதையால் அடித்துத் தள்ளினான். அங்ஙனம் அடிக்கப்பெற்ற அந்த கதை பகவானுடைய ஹஸ்தத்தினின்று நழுவிப் பெருங்கோஷத்துடன் கீழே விழுந்தது. விழும்பொழுது அந்த கதை ஜ்வலித்துக்கொண்டு ப்ரகாசித்தது. அந்த கதை பகவானுடைய ஹஸ்தத்தினின்று நழுவி விழுந்தமை அனைவர்க்கும் ஆச்சர்யமாயிருந்தது. அப்பொழுது அவ்வஸுரன் பகவானை அடிக்க அவகாசம் நேரப்பெற்றும் ஆயுதமற்றிருக்கின்ற அந்த பகவானை அடிக்கவில்லை. அதற்குக் காரணமென்னவெனில், அவ்வஸுரன் யுத்தத்தில் ஆயுதமில்லாதவர்களை அடிக்கலாகாதென்னும் தர்மத்தை வெகுமதித்திருந்தான். ஆகையால் அவன் பகவானை அடிக்காமல் வெறுமனே எதிர்பார்த்தான். அது பகவானுக்கு மிகவும் கோபத்திற்கிடமாயிருந்தது. அங்ஙனம் பகவானுடைய கதை அடிபட்டு விழுந்ததைக் கண்டு யுத்தம் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் வருந்தி ஹாஹாகாரம் செய்தார்கள். அப்பொழுது ஸமர்த்தனாகிய பகவான் அவ்வஸுரன் ஆயுதமில்லாதவனை அடிக்கலாகாதென்ற தர்மத்தை எதிர்பார்த்திருந்தமைக்கு அவனை வெகுமானித்தான், உடனே பகவான் தன்னுடைய சக்ராயுதத்தை நினைத்தான். அப்பொழுது அந்தச் சக்ராயுதம் நினைத்த மாத்ரத்தில் ஜ்வலித்துக்கொண்டு மிக்க பரபரப்புடன் பகவானிடம் வந்து சேர்ந்தது. அக்காலம் திதியின் புதல்வனென்று வழங்கப்பெற்றவனும் தன்னுடைய ப்ருத்யர்களில் தலைமையுள்ளவனாய் இருந்தவனுமாகிய அவ்வஸுரன்மேல் உறைந்துகொண்டு பெருவேகத்துடன் பகவானிடம் வருகின்ற ஸ்ரீஸுதர்சன சக்ரத்தைப் பார்த்து அந்த யுத்தப்ரதேசத்தில் ஆகாசத்தில் திரிகின்ற ப்ராணிகள் அதன் ப்ரபாவத்தை அறிந்தவராகையால் “இவ்வஸுரனை வதிப்பாயாக. உனக்கு க்ஷேமம் உண்டாகுக” என்றவை முதலிய பலவகையான வசனங்களை மொழிந்தார்கள். அவ்வஸுரன், தாமரை இதழ் போன்ற கண்களுடையவனும் சக்ராயுதம் தரித்திருப்பவனுமாகிய பகவான் எதிரே நிற்பதைக் கண்டு கோபத்தினால் இந்த்ரியங்களெல்லாம் கலங்கப்பெற்று ரோஷத்தினால் பெருமூச்செறிந்துகொண்டு தன் உதட்டைக் கடித்துக்கொண்டான். பயங்கரமான கோரைப் பற்களையுடைய அவ்வஸுரன் கண்களால் தஹிப்பவன் போல் பார்த்துக்கொண்டு எதிர்த்தோடி வந்து பகவானைக் குறித்து “இப்பொழுது நீ அடியுண்டு மாண்டாய்” என்று மொழிந்து கொண்டே தன் கதையால் பகவானை அடித்தான் யஜ்ஞமூர்த்தியாகிய ஆதிவராஹபகவான் வாயுவோடொத்த வேகமுடைய அந்த கதை வருவதற்கு முன்னமே சத்ருவாகிய அவ்வஸுரன் பார்த்துக்கொண்டிருக்கையில் அதைத் தனது இடக்காலால் அவலீலையாகத் தடுத்தான். அப்பால் அவனைப் பார்த்து “ஆயுதம் எடுத்துக் கொள்வாயாக. முயற்சி செய்வாயாக. நீ அவஸ்யமாய் ஜயிக்கவேண்டுமென்று விரும்புகின்றாயல்லவா? வெறுமனே இருந்தால் எப்படி? கார்யத்தை நடத்துவாயாக” என்று மொழியவும் மொழிந்தான். இங்ஙனம் மொழியப் பெற்ற அவ்வஸுரன் தடைபட்டு விழுந்த கதையை எடுத்துக்கொண்டு அதனால் மீளவும் பகவானை அடித்துப் பெருங்கோஷத்துடன் கர்ஜித்தான். ஸ்ரீபகவான் அங்ஙனம் அஸுரனால் ப்ரயோகிக்கப்பட்டு வருகின்ற கதையைக் கண்டு சிறிதும் பயமின்றி இருந்தபடியே இருந்து கருத்மான் ஸர்ப்பத்தைப் பிடித்துக் கொள்வதுபோல், ஸமீபத்தில் வந்த அக்கதையை அவலீலையாகப் பிடித்துக்கொண்டான். இவ்வாறு தன் பௌருஷம் தடைபட்டிருக்கையில், அவ்வஸுரன் கர்வம் தொலைந்து ஒளி மழுங்கப்பெற்று “இதோ உன் கதையை வாங்கிக்கொள்வாய்” என்று பகவான் கொடுப்பினும் அதை வாங்கிக்கொள்ள விருப்பமுறாதிருந்தான். ஆனால் அவன் என் செய்தானென்னில், மூன்று நுனிகளையுடையதும் ஜ்வலிக்கின்ற அக்னிபோல் தன் கார்யத்தை நிறைவேற்றுவதில் துடிப்பதுமாகிய சூலத்தை யஜ்ஞஸ்வரூபியும் தன் ஸங்கல்பத்தினால் வராஹ உருவம் கொண்டவனுமாகிய பகவான் மேல் ப்ரயோகிக்கும் பொருட்டு எடுத்துக்கொண்டான், அவ்வஸுரன், ப்ரஹ்மவித்தான அந்தணனைக் குறித்து அபிசாரம் செய்வதுபோல் (சூன்யன் வைத்தல் முதலியவை), அந்த பகவானை அச்சூலத்தினால் அடிக்க விரும்பினான். அந்த பகவானோ என்றால், யஜ்ஞஸ்வரூபி; யாகங்களில் கொடுக்கும் ஹவிஸ்ஸுக்களை நேராகவும் இந்த்ராதி தேவதைகள் மூலமாகவும்  தானே புஜிப்பவன்; யாகபலன்களை நிறைவேற்றிக் கொடுப்பவன்; தன் ஸங்கல்பத்தினால் அப்ராக்ருதமான திவ்ய வராஹ உருவங் கொண்டவன், அத்தகைய பகவானிடத்தில் இச்சூலம் என் செய்ய முடியும்? ப்ரஹ்ம ஸ்வரூபத்தை உணர்ந்து ஸர்வ ப்ரகாரத்தாலும் அந்தப் பரமபுருஷனையே தஞ்சமாக நினைத்திருக்கும் ப்ராஹ்மணன் விஷயத்தில் அபிசாரம் முதலியவை எங்ஙனம் பயன்படமாட்டாவோ, அங்ஙனமே இச்சூலம் முதலியவை பகவானிடத்தில் பயன்படமாட்டா. ஆயினும் அம்மூடன் அதை அறியாமல் இதனால் இவனை வதித்து விடலாமென்று நினைத்துப் பேராசையுடன் சூலத்தை எடுத்துக் கொண்டான். அஸுரர்களனைவரிலும் மஹாசூரனாகிய அந்த ஹிரண்யன் ஜ்வாலைகள் மேலெழப்பெற்று ஆகாயத்தினிடையில் ஜ்வலிக்கின்ற அந்த த்ரிசூலத்தை வீர்யம் உள்ளவளவும் சுழற்றி பகவான் மேல் ப்ரயோகித்தான். முன்பு கருடன் ப்ரயோகித்த இறகை இந்த்ரன் வஜ்ராயுதத்தினால் சோதித்தாற்போல், பகவான் கூரிய நுனியுடைய தன் சக்ராயுதத்தினால் அந்த த்ரிசூலத்தைச் சோதித்தான். அவ்வஸுரன் தான் ப்ரயோகித்த சூலமும் பகவானுடைய சக்ராயுதத்தினால் அறுப்புண்டமை கண்டு ரோஷம் வளர்ந்தவனாகி எதிர்த்து வந்து கர்ஜித்துக் கொண்டு ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமாகிய பகவானுடைய மார்பில் மிகவும் உறுதியான தன் முஷ்டியால் அடித்து, உடனே அந்தர்த்தானம் அடைந்தான் (கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தான்). வாராய் விதுரனே! இங்ஙனம் அவ்வஸுரன் முஷ்டியினால் அடிக்கையில், அடியுண்ட ஆதிவராஹ பகவான், பூமாலையால் அடிக்கப்பெற்ற யானை போல் சிறிதும் சலிக்கவில்லை. அவ்வஸுரன் அந்தர்த்தானம் அடைந்தபின்பு யோகமாயைகளுக்கு (ஆச்சர்ய சக்திகளுக்கு) சாதனாகிய ஸ்ரீபகவான்மேல் மாயைகளைப் பலவாறு ப்ரயோகித்தான். அந்த மாயைகளைப் பார்த்து ப்ரஜைகளெல்லோரும் பயந்து ஜகத்திற்கெல்லாம் ப்ரளயம் சேர்ந்ததென்று நினைத்தார்கள். அவ்வஸுரனுடைய மாயையால் பயங்கரமான வேகத்தையுடைய காற்றுகள் வீசத் தொடங்கித் தூட்களைக் கிளப்பிப் பேரிருளை விளைத்தன. க்ஷேபணமென்னும் யந்த்ர விசேஷங்களால் எறியப்பெற்றவைபோல் திசைகளினின்று கற்கள் அபாரமாய் வந்து விழுந்தன. மேகங்கள் மின்னல்களோடும் இடிகளோடும் கூடி துர்க்கந்தமான சீ முதலியவற்றையும் மல மூத்ரங்களையும் மயிர்களையும் எலும்புகளையும் அடிக்கடி வர்ஷித்தன. அம்மேகங்கள் குவியல் குவியலாக ஆகாசம் முழுவதும் நிறைந்தன. அதனால் ஆகாயத்தில் நக்ஷத்ரக் கூட்டங்கள் எவையும் புலப்படவில்லை. பர்வதங்கள் பலவகை ஆயுதங்களைப் பெய்து கொண்டு புலப்பட்டன, அங்ஙனமே ராக்ஷஸ ஸ்த்ரீகளும் அரையில் அம்பரமின்றி அம்மணங்களாகிச் சூலாயுதங்களை ஏந்தித் தலைமயிர்களை விரித்துக்கொண்டு புலப்பட்டன. ஹிம்ஸிக்கும் தன்மையுள்ள யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் காலாட்களும் குதிரைமேல் ஏறிச் சண்டை செய்யும் வீரர்களும் ரதத்திலிருந்து யுத்தஞ் செய்யும் மஹா வீரர்களும் யானைமேல் நின்ற போர்வீரர்களும் தோன்றி “குத்து, வெட்டு, கிழி, கொல்லு” என்பவை முதலிய பயங்கரமான சொற்களைப் பெய்தார்கள். த்ரிபாத்விபூதியென்கிற பரமபதத்திற்கு நாதனாகிய பகவான் அம்மாயைகளைக் கண்டு அவற்றைப் பாழ் செய்யும் பொருட்டுத் தனக்கு மிகவும் ப்ரியமான ஸுதர்சனாஸ்த்ரத்தை ப்ரயோகித்தான். அப்பொழுது திதியானவள் “ஜகத்ரக்ஷகனான பகவான் அவதரித்து உன் பிள்ளைகளை வதிக்கப்போகின்றான்” என்று காச்யபர் மொழிந்த வசனத்தை நினைத்துக் கொண்டாள். என் புதல்வர்களுக்கு என்வருமோவென்று பயப்படுகின்ற அந்த திதியின் மனத்தில் சீக்ரம் நடுக்கம் உண்டாயிற்று. அவளுடைய ஸ்தனத்தினின்று ரத்தம் பெருகிற்று. அப்பொழுது பகவானுடைய ஸுதர்சனாஸ்த்ரத்தினால் அவ்வஸுரனுடைய மாயைகளெல்லாம் பாழாயின. அங்ஙனம் தன் மாயைகளெல்லாம் பாழாகக் கண்ட அவ்வஸுரன் மீளவும் எதிரே வந்து ரோஷத்துடன் கேசவனை அணைக்க முயன்று புஜங்களின் இடையில் அமைத்து நெருக்கி அணைக்கையில், அம்மஹானுபாவன் தன் புஜங்களினிடையினின்று வெளியில் வந்து நிற்கக்கண்டான். தான் செய்த ப்ரயத்னம் வீணானமையால் கோபத்துடன் அவ்வஸுரன் பகவானை முஷ்டிகளால் அடித்தான். ஸ்ரீபகவான் அங்ஙனம் அடித்துக் கொண்டிருக்கின்ற அவ்வஸுரனை, இந்த்ரன் த்வஷ்டாவின் புதல்வனாகிய விஸ்வரூபனை அடித்தாற்போல், காது மூலையில் அடித்தான். அவ்வாறு பகவானால் அவலீலையாக அடிக்கப் பெற்ற அவ்வஸுரன் சரீரம் சுழலப்பெற்றுக் கண்கள் புதுங்கி வெளிவந்து புஜங்களை உதறி விரித்துக் கொண்டு காற்றினால் வேரில் அறுப்புண்ட பெரியவ்ருக்ஷம் போல் கீழே விழுந்தான். அவன் பூமியில் விழுந்தும் அணுகமுடியாத பேரொளியுடையவனாயிருந்தான். பயங்கரமான கோரைப் பற்களுடையவனும் உதட்டைக் கோபத்தினால் கடித்துக் கொண்டிருப்பவனுமாகிய அவ்வஸுரனை அங்கு வந்திருந்த ப்ரஹ்மாதிகள் பார்த்து இங்ஙனம் ப்ரசம்ஸித்தார்கள்.  
ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- ஆ! என்ன ஆச்சர்யம்! இப்படிப்பட்ட மரணம் எவனுக்கு நேரும்? இப்படி பகவான் கையால் எவன் மரணம் பெறுவான்? யோகிகள் அசேதனமான ப்ரக்ருதியின் பரிணாமமாகிய தேஹத்தினின்று விடுபடவேண்டுமென்று விரும்பி (ஸம்ஸார நிவ்ருத்தியின் பொருட்டு) ஸமாதியோகத்தினால் எவனை ஏகாந்தத்தில் தியானிக்கின்றார்களோ, அப்படிப்பட்ட பகவானுடைய பாதத்தினால் அஸுர ஸ்ரேஷ்டனாகிய இந்த ஹிரண்யாக்ஷன் அடியுண்டு அந்த பகவானுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே சரீரத்தைத் துறந்தான். ஆ! இப்படிபட்ட மரணம் மற்றொருவர்க்குக் கிடைக்கத் தக்கதோ? இந்த ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் இந்த பகவானுடைய ப்ருத்யர்களே; சாபத்தினால் அஸுர ஜன்மத்தை ப்ராப்தரானார்கள்; இன்னும் சில ஜன்மங்களில் பகவானுடைய ஸ்தானத்தைப் பெறுவார்கள்” என்று அவ்வஸுரனை ப்ரசம்ஸித்தான். அப்பால் தேவதைகள் பகவானை ஸ்தோத்ரம் செய்தார்கள் . 
தேவதைகள் சொல்லுகிறார்கள்:- ஸமஸ்தயாகங்களும் அழியாமல் நடப்பதற்கு ஹேதுவாயிருக்கின்ற (யாகங்களை நடத்தும் ஸ்வபாவனான) உனக்கு அடிக்கடி நமஸ்காரம், நீ ஜகத்தை ரக்ஷிக்கும் பொருட்டு ரஜஸ் தமஸ்ஸுக்களால் தீண்டப்பெறாமல் சுத்தஸத்வமயமான மூர்த்திகளைக் கேவலம் தன் ஸங்கல்பத்தினால் ஏற்றுக்கொள்கின்றனே. அப்படிப்பட்ட உனக்கு அடிக்கடி நமஸ்காரம். உலகங்களை ஹிம்ஸித்துக்கொண்டிருந்த இவ்வஸுரன் தெய்வாதீனமாய் உன்னால் வதிக்கப்பட்டான். வாராய் ஜகதீசனே! நாங்கள் உனது பாதாரவிந்தங்களில் பக்தி உண்டாகப் பெற்றமையால் ஸந்தோஷம் அடைந்தோம். உன்னிடத்தில் பக்தி உண்டாகுமாயின், அது அவரவர் விரும்புகிற எல்லா நன்மைகளையும் நிறைவேற்றிக்கொடுக்கும். ஆனது பற்றியே நாங்கள் சத்ரு முடியப்பெற்று ஸுகித்தோம். 
மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் அவ் ஆதி வராஹபகவான், பிறர்க்குப் பொறுக்கமுடியாத பராக்ரமமுடைய ஹிரண்யாக்ஷனைக் கொன்று ப்ரஹ்மாதிகளான தேவதைகளால் துதி செய்யப்பெற்று என்றும் உத்ஸவங்கள் மாறப்பெறாமல் நித்யோத்ஸவமாயிருப்பதாகிய தன் வைகுண்ட லோகத்தை அடைந்தான். விதுரனே! இது “ஒருவர்க்கும் செய்ய முடியாத கார்யம். இது பிறர்க்கு எவ்வளவு வருந்தியும் செய்யமுடியாது. இதைப் பகவான் செய்தான்” என்று ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. ஏனென்னில், சொல்லுகிறேன் கேள். வாராய் விதுரனே! வராஹ உருவம்கொண்ட ஸ்ரீஹரியின் சரித்ரத்தை உனக்கு நான் எங்ஙனம் அனாயாஸமாகத் தொடங்கி மொழிந்தேனோ, அங்ஙனமே ஸ்ரீவராஹபகவான் ஆழ்ந்த பராக்ரமமுடைய ஹிரண்யாக்ஷனை யுத்தத்தில் அவலீலையாகவே வதித்தான். அவன் ஹிரண்யாக்ஷனை வதித்தபடியே எனக்கு என்குரு மொழிந்தார். நானும் என் குருவினிடம் கேட்டபடியே சிறிதும் சோராமல் உனக்குமொழிந்தேன்.  
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வாராய் பரீக்ஷித்து மன்னவனே! மஹாபாகவதனாகிய (பகவத் பக்தர்களில் மேன்மையுற்றவனாகிய) ஸ்ரீவிதுரன் இங்ஙனம் மைத்ரேயமுனிவர் மொழிந்த பகவத் கதையை (பகவத்கதை உள்ளடங்கப் பெற்ற ஸ்வாயம்புவ மனுவின் கதையைக்) கேட்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தான். புண்யசீலர்களும் மிகுந்த புகழுடையவர்களுமாகிய மற்றவர்களுடைய கதையைக் கேட்கினும் ஸந்தோஷம் விளையும். ஆயின் ஸ்ரீவத்ஸ லக்ஷ்மாவான (ஸ்ரீவத்ஸமென்கிற அடையாளத்தையுடைய) ஸ்ரீஹரியின் கதையைக் கேட்கின் ஸந்தோஷம் விளையுமென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? முன்பு தன்னினத்தில் தலைமையுள்ள ஓர் யானையானது தன்னைச் சேர்ந்த பெண்யானைகள் வருத்தி வீரிலிடும்படி முதலையென்னும் ஜலஜந்துவால் பிடியுண்டு விடுவித்துக் கொள்ள முடியாமல் வேறுகதியற்று “ஆதிமூலனே!” என்று தன்பாதாரவிந்தங்களை த்யானிக்கையில், இந்த ஸ்ரீபகவான் விரைந்தோடி வந்து அந்த யானையை முதலையினிடம் பிடியுண்டு வருந்துகையாகிற ஆபத்தினின்று விடுவித்தான். அவன் வேறுகதியின்றி மனத்தில் கபடமற்றுத் தன்னைப் பணியும் மனிதர்களால் ஸுகமாக ஆராதிக்கத் தகுந்தவன்; கெடுமனமுடைய மற்றவர்க்கு வருந்தியும் ஆராதிக்க முடியாதவன். அப்படிப்பட்ட பகவானைப் பிறர் செய்த நன்றியை அறியுந்தன்மையுள்ள எவன் தான் பணியமாட்டான்? க்ருதக்னரைத் தவிர ( க்ருதக்னர் பிறர் தனக்குச் செய்த உபகாரத்தை மறக்கிறவர்.) மற்றெல்லோரும் பணிவார்களென்பதில் ஸந்தேஹம் இல்லை. ஜகத்தை ரக்ஷிக்கும் பொருட்டு வராஹ உருவம் கொண்ட பகவான் செய்த இந்த ஹிரண்யாக்ஷவதம் மிகவும் அற்புதமானது. ஆயினும் அந்த பகவானுக்கு இது லீலையேயன்றி ஓர் வருத்தமன்று. இப்படிப்பட்ட இந்த ஹிரண்யாக்ஷ வதத்தை எவன் கேட்கிறானோ, எவன் பிறர்க்குச் சொல்லுகிறானோ, எவன் இதை அபிநந்திக்கிறானோ, அவன் பாபங்களில் “இனி இதுக்கு அவ்வருகில்லை” என்னும்படி மஹாபாபமாகிய ப்ரஹ்ம ஹத்யையினின்றுங்கூட விரைவில் விடுபடுவான். இந்த ஹிரண்யாக்ஷ வதமென்னும் பகவத் சரித்ரமானது மிகுந்த புண்யத்தை விளைவிக்கக்கூடியது; ஆனதுபற்றியே மிகவும் பரிசுத்தமானது; தனத்தையும் “ஸம்பாதித்துக் கொடுக்க வல்லது; புகழையும் விளைவிக்கும்! ஆயுளையும் வளர்க்க வல்லது; அன்றியும், அவரவர் விரும்பும் புருஷார்த்தங்களுக்கெல்லாம் விளை நிலமாயிருக்கும்; யுத்தத்தில் ப்ராணன்களுக்கும் இந்திரியங்களுக்கும் திறமையை வளர்க்கும். வாராய் மன்னவனே! இதைக் கேட்பவர்களுக்கு தேஹாவஸானத்தில் ஸ்ரீமந்நாராயண ப்ராப்தி உண்டாகும். இதுவே இதற்கு முக்யமான பலன். 
பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று. 

சனி, 26 அக்டோபர், 2019

நல்லொழுக்கத்துடன் சரணடைக! - தெம்பரை V. நாராயணன்

நான், எனது என்ற அகம்பாவத்தை (அறியாமை) நீக்கி, அறிவு பூர்வமாக செய்த பாவங்களுக்கு வருந்தி, மீண்டும் அப்பாவங்களைச் செய்யாமல் பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானை சரணடைவதே, முழுமயான சரணாகதியாகும். (Absolute surrender) இக்கருத்தையே, அதாவது பாபங்களுக்கு ஆட்படாமல், நரக வேதனைக்கு ஆட்படாமல், நல்லொழுக்கத்துடன் எம்பெருமானை சரணமடைய வேண்டும் என்பதை ஆழ்வார்கள் பாசுரங்களின் மூலம் அறிந்து, மகிழ்வோம். மனத் தூயமையுடன் செய்வதே உண்மையான சரணாகதியாகும். மனம் தூய்மை கெடுவதற்குக் காரணம் காமம், கோபம், லோபம், பயம், த்வேஷம், மதம், மாத்ஸர்யம் முதலியவைகளே ஆகும் என்று ஆசார்யர்கள் கூறுகின்றனர். பஞ்சமாபாவங்களால் பரமனை அடைய முடியாது. இதனை திருமங்கையாழ்வார் பாசுரத்தின் மூலம் அறியலாம்.

சூதினை பெருக்கி களவினைத் துணிந்து 
  சுரிகுழல் மடந்தையர் திறத்துக் 
காதலே மிகுத்து, கண்டவா திரிந்த 
தொண்டனேன், நமன்தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்; வேலை 
வெண் திரை அலமரக் கடைந்த 
நாதனே ! வந்து, உன் திருவடி அடைந்தேன் 
நைமிசாரண்யத்துள் எந்தாய் !

வெண்மையான மிகப் பெரிய அலைகளுடைய பாலாழியைக் கடைந்து அமரர்களைக் காத்த பெருமானே, திருநைமிசாரண்யத்தில் சேவை ஸாதிப்பவனே - என் தந்தையே - சூதாடுவதையே தொழிலாகக் கொண்ட நான், நீண்ட அழகான கூந்தலை உடைய பெண்களிடத்திலே மோகங்கொண்டு அவர்களுக்கு அடிமை செய்தேன். இப்பொழுது வருந்தி, யம படர்கள் அளிக்கப் போகும் துன்பத்தையெண்ணி, நிலை குலைந்து உன் திருவடியை அடைந்தேன். உனக்கே அடைக்கலமானேன்.

இனி ஆழ்வாரின் மற்றோரு பாசுரத்தைக் காண்போம்

வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
பிறர் பொருள், தாரம் என்று இவற்றை 
நம்பினார் இறந்தால், நமன்-தமர் பற்றி 
எற்றிவைத்து, எரி எழுகின்ற 
செம்பினால் இயன்ற பாவையை, பாவீ 
தழுவுஎன மொழிவதற்கு அஞ்சி
நம்பனே - வந்து உன் திருவடி அடைந்தேன் 
நைமிசாரண்யத்துள் எந்தாய்.”

நல்ல மணத்தைப் பரப்புகின்ற நீண்ட கூந்தலையுடைய கட்டிய மனைவியை விட்டுப் பிறிந்து, பிறர் பொருள், செல்வம், அவர்களுடைய மனைவியையும் விரும்புபவர்கள் இறந்தால், எமபடர்கள் அவர்களை இழுத்துச் சென்று, கொடிய நரகத்தில், நெருப்பிலே காய்ச்சிய, செம்பினால் செய்யப்பட்ட ஓர் பெண்பாவையைக் காட்டி, மனைவிக்கு துரோகம் செய்த பாவியே, இந்தப் பாவையைத் தழுவுவாயாக, என்று பிடரியைப் பிடித்து தள்ளி தண்டனை கொடுப்பார்கள். இந்த வேதனைக்கும், கொடும் சொற்களுக்கும் அஞ்சிய நான், நைமிசாரண்யத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமானே, என் தந்தையே, கங்கையைக் கொணர்ந்த உன் திருப்பாதக் கமலங்களை, நம்பிக்கை கொண்டு, சரண் அடைந்தேன்.

இவ்வாறாக ஆழ்வார் ஒழுக்கத்தை வலியுறுத்தி, மனத் தூய்மையுடன் எம்பெருமானிடம் சரணமடைய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.

நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா புரட்டாசி 2014


ஶ்ரீமத் பாகவதம் - 63

மூன்றாவது ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்

(ஹிரண்யாக்ஷ ஹிரண்யகசிபுக்களின் உற்பத்தியும், அவர்களில் ஹிரண்யாக்ஷனுடைய ப்ரபாவமும்.) 

மைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் விதுரனே! அனந்தரம் துர்மதனாகிய (கொடிய கொழுப்புடையவனாகிய) அவ்வஸுரன் அங்ஙனம் வருணன் மொழிந்ததைக் கேட்டுத் தனக்கு எதிரே நின்று யுத்தம் செய்யவல்லவன் ஒருவன் உளனென்று தெரிந்தமையால் மனக்களிப்புற்றவனாகி, அந்தப் பரமபுருஷனுடைய பெருமையைப் பொருள் செய்யாமல், நாரதர் மூலமாய் அந்த பகவானுடைய மார்க்கத்தை அறிந்து விரைவுடன் பாதாளத்தில் ப்ரவேசித்தான். அவ்விடத்தில் வராஹ உருவங்கொண்டு பர்வதம்போல் நிகழ்கின்றவனாகிக் கோரையின் நுனியால் பூமியை மேலுக்கெடுக்கின்ற பரமபுருஷனைக் கண்டான். அவன் எவ்விடத்திலும் வெற்றிபெறுந்தன்மையன். தாமரை மலர்போன்று சிவந்த ஒளியுடைய தன் கண்ணோக்கத்தினாலும் தன் தேஹகாந்தியாலும் அம்மஹாபுருஷன் ஹிரண்யாக்ஷனுடைய தேஜஸ்ஸையெல்லாம் பறித்தான். அவ்வஸுரன் அந்த வராஹ பகவானைக் கண்டு “காடுகளில் திரிகின்ற மிருகம் அன்றோ இங்குப் புலப்படுகின்றது” என்று பரிஹாஸம் செய்தான். அப்பால் அந்த பகவானைப் பார்த்து அவ்வஸுரன் இங்கனம் மொழிந்தான்.

ஹிரண்யாக்ஷன் சொல்லுகிறான்:- அறிவில்லாத மூடனே! இப்படி வருவாயாக: பூமியை விடு. பாதாளத்தில் வாஸம் செய்பவராகிய எங்களுக்கு இந்த பூமியை ப்ரஹ்மதேவன் கொடுத்தான். இல்லையாயின், இந்த பூமி பாதாளத்தில் இறங்கிவர நேராதல்லவா ? அடா தேவாதமனே! நான் பார்த்துக் கொண்டிருக்கையில் நீ இந்த பூமியுடன் க்ஷேமமாகத் திரும்பிப்போகமாட்டாய். பன்றியின் உருவம் கொண்டவனே! உன்னைப் பொசுக்கிவிடுவேன், எமது சத்ருக்களாகிய தேவதைகள் உன்னை இங்ஙனம் பாழாகும் பொருட்டே வளர்த்தார்களாயென்? நீ (கண் மறைவில்) பரோக்ஷத்தில் ஜயிப்பவன்; மாயையால் அஸுரர்களை ஹிம்ஸிக்கின்றாய். அட அறிவுகெட்ட மூடனே! நீ மாயையே பலமாகக் கொண்டவன்; பௌருஷம் அற்பமாய் இருக்கப்பெற்றவன். இப்படிப்பட்ட உன்னைக் கொன்று என்னுடைய நண்பர்களின் சோகத்தைப் போக்குகின்றேன். எமது புஜத்தினின்று விடுபட்ட கதையால் நீ தலை சிதறப்பெற்று மாண்டுபோகையில், மூடர்களான எந்த “ரிஷிகளும் எந்த தேவதைகளும் உனக்கு இப்பொழுது பூஜை செய்கின்றார்களோ, அவர்களெல்லோரும் அவலம்பமற்று (வேரறுந்த வ்ருக்ஷங்கள் போல்) தாமே பாழாய் விடுவார்கள்” என்றான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த பகவான் சத்ருவாகிய அந்த அஸுரனுடைய வெசவுகளாகிற ஈட்டிகளால் பீடிக்கப்பட்டவனாயினும் கோரையின் நுனியிலிருக்கின்றவளும் பயப்படுகின்றவளுமாகிய பூமிதேவியைப் பார்த்துச் சத்ருவின் துர்ப்பாஷணைகளால் விளையும் வருத்தத்தைப் பொறுத்துக்கொண்டே, பெண் யானையுடன் கூடின யானையானது மகரமீனால் அடிக்கப்பட்டு வெளிக்கிளம்பிப் போவதுபோல், ஸமுத்ர மத்யத்தினின்று வெளிக்கிளம்பிப் போனான். அங்ஙனம் ஜலத்தினின்று வெளிக்கிளம்புகின்ற பகவானை அவ்வஸுரன், யானையை மகரமீன் துரத்துவதுபோல், பின்தொடர்ந்து துரத்திக்கொண்டு பயங்கரமான தன்கோரைகள் நன்கு வெளியாகும்படி வாயைத் திறந்து அப்பொற்குழலன் இடியின் கோஷம் போன்ற பேரொலியுடன் இங்ஙனம் மொழிந்தான்.

ஹிரண்யாக்ஷன் சொல்லுகிறான்:- வெட்கமில்லாத அஸத்துக்களுக்கு எதுதான் செய்யத்தகாத கார்யம்.? “இதைச் செய்தால் நம்மை ஜனங்கள் பரிஹஸிப்பார்கள் இது நிந்தைக்கிடமான கார்யம். ஆகையால் நாம் இதைச் செய்யலாகாது. செய்தால், நம்மை எல்லோரும் பழிப்பார்கள்” என்று வெட்கப்படுந் தன்மையர்க்கன்றோ சில கார்யம் சிந்தைக்கிடமென்று பரிஹரிக்கத்தக்கதாகும். வெட்கமில்லாதவர்க்குச் செய்யத்தகாத கார்யம் எதுவுமே இல்லை. அவர்கள் நிந்தைக்கிடமான கார்யங்களையும் செய்வார்கள்” என்றான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த பகவான் அவ்வஸுரன் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அவனைப் பொருள் செய்யாமல் ஜலத்தின் மேல் ஸஞ்சாராயோக்யமான இடத்தில் பூமியை வைத்து அந்த பூமியில் தன் பலமாகிய ஆதாரசக்தியை ஸ்தாபித்தான். அப்பொழுது அம்மஹா புருஷனை ப்ரஹ்மதேவன் ஸ்தோத்ரம் பண்ணிக்கொண்டிருந்தான். தேவதைகள் அவன்மேல் புஷ்பங்களை இறைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவ்வஸுரன் அந்த பகவானைப் பின்தொடர்ந்து வந்தான். அவன் ஸ்வர்ணமயமான ஆபரணங்களை அணிந்து பெரிய கதையை ஏந்திக்கொண்டு ஸ்வர்ணமயமான கவசம் தரித்து ஜ்வலித்துக் கொண்டிருந்தான். அவ்வஸுரன் துர்ப்பாஷணைகளால் அடிக்கடி ஸ்ரீவராஹ பகவானுடைய மர்மங்களைப் பீடித்துக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்தான். அக்காலம் அந்த வராஹபகவான் கடுங்கோபமுடையவனாகிச் சிரித்துக்கொண்டு பரிஹாஸத்துடன் பேசினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அஸுரனே! எம்மைக் காட்டில் ஸஞ்சரிக்கின்ற மிருகமென்று யாது மொழிந்தனையோ, அது வாஸ்தவமே. ஆனால் உங்களைப் போன்ற காய்களைத் தேடும் பொருட்டு நாங்கள் மிருக வேஷம் பூண்டோம். ம்ருத்யுவின் பாசங்களால் கட்டுண்டிருக்கின்ற நீ தன்னைத்தானே அமங்களகரமாகப் புகழ்ந்துகொள்வதை வீரர்கள் கொண்டாட மாட்டார்கள். பாதாளவாஸிகளான உங்கள் பூமியை நாங்கள் எடுத்துக்கொண்டுபோக வந்தோமல்லவா? பூமி உங்களுடையதென்பதில் ஸந்தேஹம் உண்டோ? (புத்திகெட்டவனே! இந்த பூமியை எங்களுடையதென்று ஏன் வீணாகப் பிதற்றுகிறாய். பூமிக்கும் உங்களுக்கும் என்ன ஸம்பந்தம்?) நாங்கள் வெட்கமற்று உங்கள் பூமியை எடுத்துக் கொண்டுபோக வந்தோம். நீ எங்களைக் கதையால் அடித்துத் துரத்துகின்றாய். ஆயினும் எந்த ப்ரகாரத்தினாலாவது யுத்தத்தில் எதிர் நிற்கின்றோம். பலிஷ்டனாகிய உன்னுடன் விரோதத்தை ஏறிட்டுக் கொண்ட பின்பு நாங்கள் எங்குப் போவோம். எங்குப் போயினும் உன்னிடத்தினின்று தப்பித்துக்கொள்ள வல்லரல்லோம். (அறிவு கெட்ட மூடனே! நீயன்றோ வெட்கமில்லாமல், பூமி எங்களுடையதென்று பிதற்றுகின்றாய். நங்கள் வெட்கமற்றவரல்லோம். கதையால் எங்களைத் துரத்திவிடுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனை. நீயே எம்மால் துரத்தப்பெற்று ஓடப்போகின்றனை, இதைத் திடமாக நெஞ்சில் நினைத்துக்கொள். யுத்தத்தில் உன்னைக்காட்டிலும் மேலாகவே நாங்கள் முயல விரும்புகின்றோம். விருப்பம் மாத்ரமே அன்று; கார்யத்திலும் பின்வாங்கமாட்டோம். பலிஷ்டர்களாகிய எங்களுடன் விரோதித்துக் கொண்டு நீ எங்குப்போய்த் தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றனை? எங்குப் போயினும் தப்பித்துக்கொள்ள வல்லனல்லை). நீ பதாதிகளின் கூட்டத்தில் தலைமையுள்ள வீரர்களைக்காட்டிலும் மேலானவன், அத்தகைய நீ ஏன் வெறுமனே இருக்கின்றாய்? நீ எம்மைப் பரிபவிக்க வேண்டுமென்று மனத்தில் கருதுகின்றனையல்லவா. உன் விருப்பத்தை ஈடேற்றுவதற்கு ப்ரயத்னிப்பாயாக. நீ சங்கையின்றி எம்மை வதித்து உனது நண்பர்களின் கண்ணீரைத் துடைக்கப் பார்ப்பாயாக. எவன், தான் செய்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றாதிருப்பானோ, அவன் ஸபைக்குத் தகுந்தவனல்லன். அவன் பத்து ஜனங்கள் சேர்ந்த ஸபைக்கு வருவானாயின், “இவன் ப்ரதிஜ்ஞை செய்து அதை நிறைவேற்ற முடியாமல் நின்றான்” என்று நிந்திப்பார்கள். ஆகையால் நீ செய்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றுவாயாக. (நீ வீரர்களில், சேர்ந்தவனேயல்லை. உனக்குச் சிறிதும் வீரமில்லை. நீ வீணாக எம்மைப் பரிபவிக்க வேண்டுமென்று நினைக்கின்றனையன்றி அது உனக்கு ஸாத்யமன்று. என்னைக்கொன்று உன்னுடைய நண்பர்களின் கண்ணீரைத் துடைக்கப் பார்க்கின்றனையல்லவா. பயப்படும் தன்மையுள்ள உனக்கு அது எப்படி கைகூடும்? நீ வீண் ப்ரதிஜ்ஞை செய்து அது நிறைவேற்றுந் திறமையற்றிருக்கின்றமையால் ஸபைக்குத் தகுந்தவனல்லை. இப்பொழுது என் கையில் மாண்டு, செய்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றாமல் நிந்தைக்கிடமாகப் போகின்றனை)” என்றான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் பகவான் அவ்வஸுரனைத் திரஸ்கரித்துக் கோபத்தினால் மிகவும் பரிஹாஸஞ் செய்தான். இதைக் கேட்ட அவ்வஸுரனும் தூண்டப்பெற்ற சிறந்த ஸர்ப்பம்போல் பெருங்கோபத்தை ஏற்றுக் கொண்டான். அங்ஙனம் கோபாவேசமுற்ற ஹிரண்யாக்ஷன் கோபத்தின் மிகுதியால் பெருமூச்செறிந்துகொண்டிருந்தான்; அன்றியும், இந்திரியங்களெல்லாம் கலங்கப்பெற்றான். அத்தகையனாகிய அந்த ஹிரண்யாக்ஷன் ஸமீபத்தில் வந்து பலம் உள்ளவளவும் கதையினால் பகவானை அடித்தான். அந்த ஸ்ரீபகவானும் சத்ருவாகிய அஸுரன் தன்மார்பில் விடுத்த கதையின் வேகத்தைப் பரிஹரித்துக் கொண்டான். அவன் அந்த கதை வேகத்துடன் தன்மேல் விழவரும்பொழுது தான் இருந்த இடத்தினின்று கொஞ்ச தூரம் குறுக்கே சென்று, யோகம் கைபுகுந்த மஹாயோகியானவன் ம்ருத்யுவைத் தடுப்பது போல், அந்த கதையைத் தன் மேல் படவொட்டாமல் தடுத்தான். அவ்வஸுரன் அந்த கதை குறிதவறிக் கீழ்விழுவதற்கு முன்னமே அதை எடுத்துக் கொண்டு மீளவும் அடிக்கடி சுழற்றிக்கொண்டிருந்தான். அதுகண்டு அவ்வஸுரன்மேல் மிகவும் கோபாவேசமுற்ற பகவான் கோப வேகத்தினால் உதட்டைக் கடித்துக்கொண்டு அவனை எதிர்த்து ஓடினான், அனந்தரம் ஸமர்த்தனாகிய பகவான் தன்கதையால் சத்ருவை வலப்பக்கத்தில் அடித்தான். வாராய் கல்லியற்கையுடைய விதுரனே! அவ்வஸுரன் கதாயுத்தத்தில் வல்லமையுடையவன். ஆகையால் தன் வலத்தோளில் பாயும்படி ஸ்ரீஹரி ப்ரயோகித்த கதை தன்மேல் விழுவதற்கு முன்னமே அதைத் தன் கதையால் அடித்தான். இங்ஙனம் ஹிரண்யாக்ஷன் ஸ்ரீஹரி ஆகிய இருவரும் கோபமும் பரபரப்பும் வளரப் பெற்று ஒருவரையொருவர் ஜயிக்க வேண்டுமென்னும் விருப்பத்துடன் பெரிய கதைகளால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். அந்த ஸ்ரீவிஷ்ணுவும் அஸுரனும் ஆகிய இருவரும் ஒருவர்மேல் ஒருவர் பொறாமையுடன் கூரான கதைகளால் அங்கங்களை அடித்துக் கொண்டிருக்கையில், அடிபட்ட இடங்களினின்று ரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. அவர்கள் அந்த ரத்தத்தின் நாற்றத்தை மோந்து மேன்மேலும் கோபம் வளரப்பெற்று பூமியின் நிமித்தமாக ஒருவரையொருவர் ஜயிக்கவேண்டுமேன்னும் விருப்பத்தினால் கதாயுத்தத்தில் ஏற்பட்ட அற்புதமான பலவகை நடைகளில் ஸஞ்சரிப்பவராகி, மதித்த வ்ருஷபங்கள் போல் யுத்தம் செய்தார்கள். அவர்களுடைய யுத்தமானது மிகவும் விளக்கமுற்றிருந்தது. யஜ்ஞமூர்த்தியாகிய பகவான் தன் ஸங்கல்பத்தினால் வராஹ உருவம் கொண்டவன். அம்மஹானுபாவனுக்கு அவ்வஸுரனைக் கொல்வது ஒரு பொருளன்று ஆயினும் “இவன் ஒருக்கால் கொழுப்படங்கி வணங்கி வருவானோ என்னவோ” என்னும் சங்கையினால் பொழுது போக்கிக்கொண்டிருந்தான். அதற்குக் காரணம் அவனிடத்தில் அனுக்ரஹமேயன்றி வேறில்லை. அவ்வஸுரனோன்றால் சிறிதும் வணங்காமல் சண்டை செய்வதிலேயே செருக்குடையவனாயிருந்தான். வாராய் குருகுலாலங்காரனே! ஸ்ரீவிதுரனே! பகவான் யஜ்ஞங்களால் ஆராதிக்கப்படுகின்றவனும் யஜ்ஞங்களை நடத்துகின்றவனும் யஜ்ஞத்திற்குரிய த்ரவ்ய ஸ்வரூபனுமாகையால் யஜ்ஞ ஸ்வரூபனென்றும் யஜ்ஞமூர்த்தி என்றும் கூறப்படுவான். அம்மஹானுபாவனும் ஹிரணயாக்ஷனும் பூமியின் நிமித்தமாக அங்ஙனம் யுத்தம் பண்ணிக்கொண்டிருக்கையில், அந்த யுத்தத்தைப் பார்க்க விரும்பி ப்ரஹ்மதேவன் மரீசி முதலிய ரிஷிகளால் சூழப்பெற்று அவ்விடம் வந்தான். தேவக்கூட்டங்களுக்குத் தலைவனும் ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவனுமாகிய ப்ரஹ்மதேவன் அவ்விடம் வந்து, அவ்வஸுரன் மிகுமதங்கொண்டு பயமற்று எவ்விதத்திலும் ப்ரதிசெய்ய முடியாமல் எதிராளியின் செயல்களையெல்லாம் தடுப்பவனாகிப் பொறுக்க முடியாத பராக்ரமமுடையவனாயிருப்பதையும் கண்டு ஆதிவராஹ ஸ்வரூபியாகிய ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து இங்ஙனம் மொழிந்தான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- வாராய் தேவாதி தேவனே! இந்த திதியின் புதல்வன் உனது பாதமூலத்தைப் பற்றின தேவதைகளுக்கும் ப்ராஹ்மணர்களுக்கும் பசுக்களுக்கும் நிரபராதிகளான மற்றுமுள்ள ப்ராணிகளுக்கும் நிஷ்காரணமாக உபத்ரவம் செய்கின்றான். அந்த தேவாதிகள் இவன் செய்யும் உபத்ரவத்தைத் தடுக்க முயற்சி கொள்வார்களாயின், அவர்களை விரட்டி அவரவர் பொருள்களையும் ப்ராணன்களையும் பறிக்கின்றான். இவன் எம்மிடத்தினின்று வரம்பெற்றான். அந்த வரத்தின் மஹிமையால் தன்னெதிரில் நின்று சண்டை செய்யும் (சத்ரு) ப்ரதிபக்ஷி மற்றெவனும் இல்லாதவனானான். அதனால் கொழுத்தவனாகி இவன் தனக்கு ப்ரதிபக்ஷி எவனேனும் அகப்படுவனாயென்று உலகங்களெல்லாம் திரிகின்றான். விளையாடுந் தன்மையனே! இவன் பெரிய மாயாவி. இருந்தாற்போலிருந்து யானை குதிரை முதலிய சதுரங்க பலங்களையும் தன் மாயையினால் படைக்கவல்லவன். நமக்கு இப்படிப்பட்ட ஆச்சர்ய சக்தி உண்டென்று பெரும் கர்வங்கொண்டவன். மாவெட்டியை உதறித்திரியும் மதித்த யானை போன்றவன்; துர்ப்புத்தியுடையவன்; ஒன்றும் தெரியாத பாலகன் வாலைப் பிடித்து இழுப்பது முதலிய சேஷ்டைகளால், சீறிச்சினந்த ஸர்ப்பத்துடன் விளையாடுவதுபோல், இப்படிப்பட்ட இவ்வஸுரனுடன் விளையாட வேண்டாம். பயங்கரனாகிய இவ்வஸுரன் தனக்கு பலங்கொடுப்பதாகிய ஸந்த்யாகாலம் வரப்பெற்று ஆச்சர்யமான தன் மாயையைக்கொண்டு வளர்ந்து வருவதற்கு முன்னமே இவனை வதிப்பாயாக. நீ ஆஸ்ரிதர்களைக் கைவிடாதவனல்லவா. இப்படி இவனுடன் விளையாடிக் கொண்டிருப்பாயாயின், ஸந்த்யாகாலம் வரின், இவன் ஜயிக்க முடியாதவனாவான். இவ்வஸுரன் இயற்கையில் தானே பெரியமாயாவி. ஸந்த்யாகாலமும் ஸஹாயமாய்க்கூடுமாயின், இவனை எவர்க்கும் ஜயிக்கமுடியாதே. பிறகு இவன் பலம் வளர்ந்து உன் விஷயத்தில் ஏதேனும் பாபம் செய்வானாயின், நாங்கள் என் படக்கடவோம் ? நீ அங்ஙனம் எங்களைக் கைவிடலாகுமா? அச்சுதனே! ஆகையால் நீ இவனுடன் விளையாடிப்பொழுது போக்கிக் கொண்டிருக்கவேண்டாம். ஸந்த்யாகாலம் வருவதற்கு முன்னமே இவனை வதித்து விடுவாயாக. ப்ரபூ! ஸந்த்யாகாலம் உலகங்கட்கெல்லாம் ப்ரதிகூலமாயிருக்கும். இவ்வேளையில் உலகமெல்லாம் மதி மயங்கப்பெறும். இக்காலம் மிகவும் பயங்கரமாயிருப்பது. இப்படிப்பட்ட ஸந்த்யாகாலமானது இதோ ஸமீபித்து வருகின்றது. வாராய் ஸர்வாந்தர்யாமியும் ஸர்வஸ்வரூபனுமான பகவானே! இக்காலம் அஸுரர்களுக்கு ஜயத்தை விளைப்பது. ஆகையால் அந்த ஸந்த்யாகாலம் வருவதற்கு முன்னமே இவ்வஸுரனைக் கொன்று தேவதைகளுக்கு ஜயத்தை விளைவிப்பாயாக. இப்பொழுது அபிஜித்தென்னும் முஹுர்த்தம் வந்திருக்கின்றது. இது மத்யாஹ்ன முஹூர்த்தம். இது தகுந்த காலம். ஆகையால் உனது நண்பர்களாகிய எங்கள் க்ஷேமத்தின் பொருட்டு ஜயிக்க முடியாத இவ்வஸுரனைச் சீக்ரத்தில் வதிப்பாயாக. பகவானே! ஸனத் குமாராதி ரிஷிகளின் சாபத்திற்குப் பின்பு நீ இவர்களை அனுக்ரஹித்து “நானே உங்களை வதிக்கின்றேன்” என்று உன்னையே ம்ருத்யுவாக ஏற்படுத்தினாயல்லவா? தந்தையாகிய கச்யபரும் இவர்களுக்கு உன்னையே ம்ருத்யுவாக ஏற்படுத்தியிருக்கின்றார். இங்ஙனம் தனக்கு ம்ருத்யுவாக ஏற்பட்ட உன்னை இவ்வஸுரன் தெய்வாதீனமாய்த் தானே கிட்டினான். யுத்தத்தில் உன் பராக்ரமத்தைக் காட்டி மாயாவியான இவ்வஸுரனை வதித்து உலகங்களையெல்லாம் ஸுகித்திருக்கச் செய்வாயாக. 

பதினெட்டாவது அத்யாயம் முற்றிற்று.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

கோவிந்தா, தாமோதரா, மாதவா - ஸ்ரீ R. நரஸிம்ஹன், திருச்சி

எம்பெருமானுடைய ஸௌலப்ய, ஸௌசீல்ய, ஆச்ரித ஸம்ரக்ஷணாதி திவ்யாத்ம குணங்கள் ப்ரகாசித்தது ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில்தான். அவன் குறை ஒன்றில்லாத கோவிந்தன். கன்றுமேய்த்து இனிதுகந்த காளை. வத்ஸ மத்யகத பாலன். அர்ச்சையிலும் கோவிந்த நாமாவளியை ப்ரகடனம் செய்து திருவேங்கடமுடையானாக ஸேவை ஸாதித்தருளுகிறான். தேவர்கள் புடை சூழ நித்ய சூரிகளின் (இமையோர் தலைவன்) நாதன், ஆய்ப்பாடியில் கோவர்த்தனோத்தாரியாக கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொள்ளுகிறான். ஸந்த்யாவந்தனாதி நித்ய கர்மாக்களிலும் கோவிந்த நாமாவளி இடம் பெறுகிறது. அச்யுதா, அநந்தா, கோவிந்தா என்று உச்சரித்தால் எல்லா வ்யாதிகளும் பறந்தோடி விடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஆய்ப்பாடி கோபர்கள் ஒன்று கூடி கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்ய முற்பட்டபோது ஸ்ரீ கண்ணனோ, நந்தகோபருக்கு ஆலோசனை சொல்லி, யுக்தி மூலம் ஒப்புக்கொள்ளச் செய்து அன்ன கூட உத்ஸவம் செய்வித்தான். மலையுருவத்தில் தானே உட்கொண்டு எல்லாரையும் மகிழ்வித்தான். ஸ்ரீ கண்ணனது உண்மை சொருபத்தை மறந்த அவனது ஸேவகனான இந்திரன், கோபங்கொண்டு, மதிமயங்கி ஏழு நாட்களுக்கு கல்மழை பெய்வித்து கேடு விளைவித்தான். பக்தவத்ஸலனான ஸ்ரீ கண்ணனோ, கோவர்த்த மலையையே தனத இடது கை சிறு தளிர் விரல்களால் தாங்கி, ஆய்ப்பாடி ஜனங்களைக் காத்தருளினான். தனது தவறை உணர ஏழு நாட்களாயின இந்திரனுக்கு. தவறை உணர்ந்து, தெய்விகப் பசுவான ஸ்ரீ காமதேனுவின் பாலைக் கொண்டு ஸ்ரீ கண்ணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து “கோவிந்தன்’' என்கிற திருநாமத்தையும் வெளியிட்டு அபராத க்ஷமாபணம் செய்து கொண்டான். அன்று முதல் இந்நாளவும் இத்திருநாமம் மஹிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. திருவாய்பாடியில் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்தி தயிர் கடையும் போது அவர்கள் எழுப்பும் கோவிந்த, தாமோதர, மாதவ சப்தமானது எல்லாதிக்குகளிலும் உள்ள அமங்களத்தைப் போக்கியது. வீதியில் பால், தயிர், மோர், வெண்ணெய் விற்கும் ஆய்ச்சியர், அன்பினால் தன் தொழிலையும் மறந்து, கோவிந்தா, தாமாதரா, மாதவா என்றே கூவிக் கொண்டே செல்வது வழக்கம். பசுக்களை மேய்ப்பவன், நம்மாலும் அடையத் தகந்தவன், ஸர்வ சுலபனென்பதை இந்த நாமாக்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஸ்ரீ கண்ணனின் குறும்பத்தனம் நாளாக நாளாக அதிகரிக்க இதர பெண்பிள்ளைகள் யசோதையிடம் முறைபாட, அவளும் அவனை (எந்த கட்டுக்கும் உட்படாதவனை) தாம்பினால் கட்ட நினைத்தாள், முயற்சித்தாள். முடியவில்லை. கயிறு 4 அங்குலம் குறைவாகவே இருந்தது. தாயின் பரிச்ரமத்தைக் கண்ணனும் கண்டு இரங்கி கட்டுண்ண இசைந்தான். வயிற்றினில் தாய் கட்டிய தாம்பின் தழும்பு அவனை தாமோதரனாக்கியது. அதனைப் போற்றி இத்தழும்பு இன்றளவும் இருப்பதாகக் கூறுவர். ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய மாயன்’ அவன். பக்தபாராதீனன். குபேர புத்ரர்களான நளகூபன், மணிக்ரீவர்களுக்குச் சாபவிமோசனம். நமக்கு அவனது தாமோதர நாமம் கிடைத்தது.
“வங்கக் கடல் கடைந்த மாதவன்'' என்று ஸ்ரீநாச்சியார் அருளிச் செய்தவாறு அவன் லோகமாதாவான ஸ்ரீமஹாலக்ஷ்மியை ஸ்வீகரித்து 
வக்ஷ:பீடம் மதுவிஜயின: பூஷயந்தீம்
என்ற அளவில், தனது விசாலமான வக்ஷஸ்தலத்தில் அமர்த்திக் கொண்டு ஸ்ரீ மாதவன் ஆனான். விண்ணவர் அமுதுண, அவன் பெண்ணமுதுண்ட பிரான் ஆனான். இரவில் தூங்கும் போது ஸ்ரீ மாதவனை எண்ணுமாறு பெரியோர் பணிப்பர். மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று நாமம் பலவும் நவில வேண்டுமென ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த பிரகாரம், காடுகளுடு போய் கன்றுகள் மேய்த்து பூச்சூடி வருகின்ற தாமோதரன் கோவிந்தனான மாதவன். அவன் பேடை மயிற்சாயல் பின்னை மணாளன். பாவை நோன்பைத் தலைக்கட்டி முடியும் தருணம் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன்.
திருமலை - திருப்பதிக்கு வரும் பக்தர்கள், கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்த ராஜனையும், தில்லை நகர் திருச்சித்திரகூடத்தில் அருள்பாலிக்கும் கோவிந்த ராஜனையும் ஸேவிப்பது நாம் அறிந்ததே.
இவ்விதம் ஸ்ரீ கோவிந்த, தாமோதர, மாதவன் என்கிற திருநாம வைபவத்தை ஓரளவு சிந்தித்தோம். மற்றவை ஸ்ரீ ஆழ்வார்களது ஸ்ரீசூக்திகளிலும், ஸ்ரீ ஆசார்ய க்ருதிகளிலும் காணலாம். 
“வாச்யாய ஸர்வசப்தாநாம் ஸர்வவேதமயாய ச |
ப்ரபந்நார்த்திஹராய ஸ்ரீ கோவிந்தாயாஸ்து மங்களம் ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:
நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா புரட்டாசி 2014


ஶ்ரீமத் பாகவதம் - 62

மூன்றாவது ஸ்கந்தம் – பதினேழாவது அத்தியாயம்

(ஹிரண்யாக்ஷ ஹிரண்யகசிபுக்களின் பிறவியும், ஹிரண்யாக்ஷனுடைய ப்ரபாபவமும், அவன் திக்விஜயம் செய்தலும்)

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- தேவதைகள், இங்ஙனம் ப்ரஹ்மதேவன் தங்கள் வ்யஸனத்திற்குக் காரணம் இன்னதென்று சொல்லக்கேட்டு, “ஈஸ்வரன் க்ஷேமத்தை விளைவிப்பான்” என்ற வசனத்தினால் பயம் தீர்ந்தவராகி அனைவரும் ப்ரஹ்மலோகத்தினின்று ஸ்வர்க்கம் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு திதியோவென்றால், தன்பர்த்தாவான காஸ்யபர் “உன் பிள்ளைகள் மூன்று லோகங்களையும் தேவர்களையும் பரிதபிக்கச் செய்வார்கள்” என்று மொழிந்த வசனத்தை நினைத்து “என் குழந்தைகளுக்கு தேவதைகளால் என்ன பயம் நேரிடுமோ” என்று சங்கித்துக் கொண்டிருக்கையில், நூறாண்டுகள் நிரம்பின. அங்ஙனம் நூறாண்டுகள் நிரம்பின பின்பு அந்த திதி ஒரே காலத்தில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் பிறக்கும் பொழுது அவ்விடத்தில் ஸ்வர்க்கத்திலும் பூமியிலும் அந்தரிக்ஷத்திலும் உலகங்களுக்கு மிகவும் பயங்கரங்களான பற்பல உற்பாதங்கள் விழுந்தன. பர்வதங்களோடு கூடின பூமியின் ப்ரதேசங்களெல்லாம் நடுக்கமுற்றன. திசைகளெல்லாம் ஜ்வலித்தன. குறைக்கொள்ளிகளும் இடிகளும் விழுந்தன. உலகங்களுக்கு மேல் வரும் பீடையை அறிவிக்கின்ற தூமகேது முதலியவைகளும் தோன்றின. அப்பொழுது மிகவும் பயங்கரமான சுழற்காற்றுகள் வீசின. அவை சிறிதும் மேற்படமுடியாமல் கடினமான ஸ்பர்சமுடையவைகளாய் இருந்தன. மற்றும், அவை “பட்பட்” என்கிற த்வனிகளை விளைத்தன; பெருப்பெரிய வ்ருக்ஷங்களையும் வேரோடு பிடுங்கின. அவற்றிற்கு வெகுதூரம் மேற்கிளம்பின தூட்களே த்வஜங்கள் போல் தோன்றின. அப்பொழுது திடீரென்று மேகங்கள் கூட்டங்கூட்டமாய் ஆகாசத்தில் கிளம்பின. அம்மேகங்களில் மின்னற்கள் அட்டஹாஸம் செய்பவைபோல் மின்னின. அம்மேக ஸமூஹங்களால் ஆகாயத்தில் ஸுர்யன் முதலிய ஒளியுள்ள க்ரஹங்கள் எவையும் புலப்படவில்லை; எல்லாம் மறைந்தன. அதனால் ஆகாயம் முழுவதும் இருள் மூடப் பெற்றிருந்தது. ஆகையால் ஆகாயத்தில் அந்தந்த ஸ்தானங்கள் எல்லாம் சிறிதும் கண்ணுக்குத் தோற்றாதிருந்தன. ஸமுத்ரம் பேரலைகள் மேலெழப்பெற்று அவ்வலைகளால் இடையிலுள்ள மகரமீன் முதலிய ஜலஜந்துக்களெல்லாம் கலங்கப்பெற்று வருத்தமுற்றதுபோல் பெருங்கோஷமிட்டது. வாபீ கூப தடாகாதிகளும் நதிகளும் வாடிவதங்கின தாமரை மலர்களுடையவையாகிக் கலங்கின. சந்த்ர ஸுர்யர்கள் இருவரும் ராஹுவினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள், அவ்விருவர்க்கும் அடிக்கடி பரிவேஷங்கள் உண்டாயின. ஆகாயத்தில் மேகமில்லாமலே மேக கர்ஜனங்கள் உண்டாயின. பர்வத குஹைகளினின்று ரதகோஷங்கள் போன்ற பெரும் த்வனிகள் செவிப்பட்டன. க்ராமங்களின் இடையில் குள்ள நரிகள் முகங்களால் தீவரமான அக்னியைக் கக்கிக்கொண்டு அமங்களமாகச் சத்தமிட்டன. இங்கனமே நரிகளும் கோட்டான்களும் பயங்கரமான த்வனிகளைச் செய்தன. நாய்கள் கழுத்தை உயரத் தூக்கிக்கொண்டு ஆங்காங்கு ஸங்கீதம்போலும் ஊளையிடுவது போலும் பலவாறு குலைத்தன. கழுதைகள் கடினமான தமது குளம்புகளால் பூமியைக் குற்றிக்கொண்டு கீச்கீச்சென்னும் சபதங்களைச் செய்வதில் மிகவும் உத்ஸர்ஹமுடையவையாகி மதித்துக் கூட்டங்கூட்டமாய் ஓடின. பக்ஷிகள் இங்கனம் அமங்களமான சப்தங்களைக் கேட்டு பயந்து கூச்சலிட்டுக்கொண்டு தத்தமது கூடுகளினின்று வெளிக்கிளம்பி விழுந்தன. இடைச்சேரிகளிலும் அரண்யங்களிலுமுள்ள பசுக்கள் மலமூத்ரங்களை விட்டன. பசுக்கள் ரத்தங்களைக் கறந்து பயந்தன. மேகங்கள் சீயைப் பெய்தன. ஆங்காங்கு ஆலயங்களிலுள்ள தவப்ரதிமைகள் கண்ணீர் பெருக்கின. காற்றில்லாமலே மரங்கள் முறிந்து விழுந்தன குரு புதன் முதலிய சுபக்ரஹங்களையும் மற்றும் பல நக்ஷத்ரங்களையும் அங்காரகன் முதலிய மற்ற க்ரூர க்ரஹங்கள் பீடித்துக்கொண்டு கடந்து சென்றன. வக்ரகதியாகத் திரும்பிவந்து ஒன்றொடொன்று யுத்தம் செய்தன. இவையும் மற்றும் பல உத்பாதங்களும் உண்டாயின. ப்ரஹ்ம புத்ரர்களான மரீசி முதலியவர் தவிர மற்ற ப்ரஜைகள் எல்லோரும் அந்தந்த உத்பாதங்களின் பலன்களை அறியாதவராகையால் பயந்து ஜகத்தெல்லாம் பாழாய்ப் போகிறதென்று நினைத்தார்கள். ப்ரஹ்மபுத்ரர்களோ வென்றால் த்ரிகாலத்திலுமுள்ள வஸ்துக்களின் ஸ்வரூபத்தை அறிந்தவராகையால் பயப்படவில்லை. அங்கனம் பிறாத அவ்வஸுரர்கள் இருவரும் சீக்ரமாகத் தம்முடைய வௌருஷம் வெளியாகப்பெற்று இரும்புபோல் மிகவும் உறுதியாயிருக்கின்ற தேஹத்துடன் மேலான பர்வதங்கள் போல் வளர்ந்தார்கள். அவர்கள் ஸ்வர்ணமயமான கிரீடங்களின் நுனிகளால் ஆகாயத்தை அளாவிக் கொண்டிருந்தார்கள். தோள்வளைகளுடன் திகழ்கின்ற புஜங்களால் திசைகளைத் தகைந்தார்கள். பாதங்களால் அடிவைப்புகள் தோறும் பூமியை நடுங்கச் செய்தார்கள். இடையில் மிகவும் அழகான அரை நூல்மாலை அணிந்து ஸுர்யனை அதிக்ரமித்து ப்ரகாசித்தார்கள். கச்யபப்ரஜாபதி அவ்விருவர்களில் எவன் தன் தேஹத்தினின்று முதலில் பிறந்தானோ, அவனுக்கு ஹிரண்யகசிபுவென்று பேர் இட்டார். திதி எவனை முதலில் ப்ரஸவித்தாளோ, அவனுக்கு ஹிரண்யாக்ஷனென்று பேர் இட்டார். ஹிரண்யகசிபு தன் புஜபலத்தினால் கொழுத்தவனாக ப்ரஹ்மதேவனிடம் வரம் பெற்று எவ்விதத்திலும் மரணமற்றவனாகி லோகபாலர்களோடு கூடின மூன்று லோகங்களையும் தனக்கு வசப்படுத்திக்கொண்டான், ஹிரண்யகசிபுவின் தம்பியாகிய ஹிரண்யாக்ஷன் தமையனுடைய அன்பிற்கிடமாகித் தானும் தமையனிடத்தில் ப்ரீதியுடையவனாயிருந்தான். அவன் கதையைக் கையில் ஏந்திக்கொண்டு யுத்தஞ்செய்ய விருப்பமுற்று எங்கே யுத்தம் கிடைக்குமென்று தேடிக்கொண்டு ஸ்வர்க்கம் சென்றான். அந்த ஹிரண்யாக்ஷன் பிறர்க்குப் பொறுக்கமுடியாத மஹா பலமுடையவன். அவன் கால்களில் ஸ்வர்ணமயமான சிலம்புத் தண்டைகள் அணிந்திருந்தான். அவை அழகாய் ஒலித்துக்கொண்டிருக்கும். மற்றும், அவன் புஷ்பங்கள் பல்லவங்கள் (தளிர்கள்) முதலியவற்றால் தொடுக்கப்பெற்ற வைஜயந்தியென்னும் மாலையால் அலங்காரமுற்றிருப்பான். தோளில் பெரிய கதையைத் தரித்துக்கொண்டு மனோபலம் தேஹபலம் வரபலம் இவைகளால் கர்வமுற்று எவ்விதத்திலும் தடுக்கமுடியாதவனும் எங்கும் பயமற்றவனுமாய் இருப்பான். அவனைக் கண்டு தேவதைகள் பயந்து கருடனைக் கண்ட ஸர்ப்பங்கள்போல் மறைந்தார்கள். அஸுர ச்ரேஷ்டனாகிய அந்த ஹிரண்யாக்ஷன், தன் தேஜஸ்ஸினால் இந்த்ரனோடு கூடத் தேவர்களெல்லோரும் மறைந்திருப்பதை அறிந்து மதித்து அவர்களைக் காணாமல் மிகவும் ஸிம்ஹநாதம் செய்தான். அப்பால் அந்த ஹிரண்யாக்ஷன் ஸ்வர்க்கத்தினின்று திரும்பி விளையாட விரும்பி ஆழ்ந்திருப்பதும் பயங்கரமான அலைகளின் த்வனியுடையதுமாகிய ஸமுத்ரத்தில் ப்ரவேசித்து மஹா பலமுடையவன் ஆகையால் யானைபோல் அதைக் கலக்கினான். அங்ஙனம் அவன் ஸமுத்ரத்தில் இழிந்தவுடனே வருணனுடைய ஸேனா ஜனங்களாகிய ஜல ஜந்துக்களெல்லாம் பயந்து மதிமயங்கி, அவ்வஸுரன் அவைகளை உபத்ரவஞ் செய்யாதிருப்பினும் அவனுடைய தேஜஸ்ஸினால் பரிபவிக்கப்பட்டுக் கூட்டங் கூட்டமாய் வெகுதூரம் ஓடிப்போயின. மிகுந்த பலமுடைய அவ்வஸுரன் அனேக வர்ஷங்கள் வரையிலும் ஸமுத்ரத்தில் உலாவிக் காற்றினால் கிளப்பப்பெற்ற பெருப்பெரிய அலைகளை, இரும்பினால் செய்யப்பட்ட தன் கதையினால் அடிக்கடி அடித்துக்கொண்டிருந்தான். இப்படியிருக்கையில் அவன் ஒருக்கால் அந்த ஸமுத்ரத்திலுள்ள விபாவரியென்கிற வருண பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தான். அந்த விபாவரியென்னும் பட்டணத்தில் அஸுரர்களின் லோகமாகிய பாதாளத்தைப் பாதுகாப்பவனும் ஜல ஜந்துக்களுக்கு அதிபதியுமாகிய வருணனைக் கிட்டிச் சிறிது நகைத்து அவனை வஞ்சிக்கும் பொருட்டு அற்பன் போல் நமஸ்காரஞ் செய்து “வாராய் அதிராஜனே! வருணா! எனக்கு யுத்தம் கொடுப்பாயாக” என்றான். மீளவும் அவன் அவ்வருணனைப் பார்த்து அவனுக்கு யுத்தத்தில் விருப்பத்தை விளைவிப்பவனாகி இங்ஙனம் மொழிந்தான்.

ஹிரண்யாக்ஷன் சொல்லுகிறான்:- நீ லோகபாலர்களில் மேலானவன்; பெரும்புகழுடையவன். வீணாகக் கொழுத்துத் தங்களைத் தாமே பெரிய வீரர்களென்று நினைத்திருக்கும் துஷ்டர்களுடைய வீர்யத்தைப் போக்கடிக்குந் தன்மையன், “நான் இத்தகையனென்று நீ எப்படி நிச்சயித்தாய்” என்கிறாயோ? ப்ரபூ! நீ முன்பு ஸமஸ்த தைத்யர்களையும் தானவர்களையும் ஜயித்து ராஜஸூய யாகத்தினால் தேவனை ஆராதித்தாயல்லவா” என்றான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த வருணபகவான், மதம் வளரப்பெற்றவனும் தனக்கு த்வேஷியுமாகிய அஸுரன் இங்ஙனம் மொழிந்ததைக் கேட்டு நன்கு வஞ்சிக்கப்பெற்றவனாகிப் பெருங்கோபம் உண்டாகப்பெற்றான். ஆயினும், அவன் அந்தக் கோபத்தைத் தன் புத்தியால் அடக்கிக்கொண்டு அவ்வஸுரனைக் குறித்து இங்ஙனம் மொழிந்தான்.

வருணன் சொல்லுகிறான்:- வாராய் அஸுரனே! நாம் சண்டை செய்யும் விருப்பம் நீங்கப்பெற்றவர். அஸுர ச்ரேஷ்டனே! யுத்தத்தில் ஸமர்த்தனாகிய உன்னை எவன் யுத்தத்தில் ஸந்தோஷிக்கச் செய்வானோ, அப்படிப்பட்டவன் பரமபுருஷனைத் தவிர மற்ற எவனும் எனக்குப் புலப்படவில்லை. நீ யுத்தமார்க்கங்களில் மிகவும் வல்லமையுடையவன், உனக்குத் தகுமாறு யுத்தங்கொடுத்து ஸந்தோஷப்படுத்த வல்லவன் எவனும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பரமபுருஷன் ஒருவன் மாத்திரம் உனக்குத் தகுந்த யுத்தங்கொடுத்து உன் விருப்பத்தை நிறைவேற்றி உன்னை ஸந்தோஷப்படுத்துவான், ஆகையால் அந்தப் பரமபுருஷனிடம் போவாயாக. “அவன் யார்” என்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக. உன்னைப் போன்ற மனஸ்விகள் எந்தப் புருஷனை ஸ்தோத்ரஞ் செய்கின்றார்களோ, அவனே அந்தப் பரமபுருஷனாவான். அவன் மஹாவீரன். அத்தகையனான அந்தப் பரமபுருஷனைக் கிட்டி கர்வமெல்லாம் தொலைந்து வீரர்கள் மாண்டு சயனிக்கும்படியான யுத்தபூமியில் நாய் நரிகளால் சூழப் பெற்றவனாகிச் சயனிப்பாய். “உன்னைப்போல் அவனும் சண்டைசெய்வதில் விருப்பமற்றிருப்பானாயின், என் செய்யலாம்” என்கிறாயோ? அந்த பகவான் உன்னைப்போன்ற துஷ்டர்களை அழிக்கும்பொருட்டும் ஸத்புருஷர்களை, அனுக்ரஹிக்கும் பொருட்டும் வராஹாதி அவதாரங்களைக் கொள்கின்றான். ஆகையால் அவன் விஷயத்தில் நீ அங்ஙனம் சங்கிக்க இடமில்லை. நீ அவனிடம் சென்று உன் விருப்பம் நிறைவேறப் பெறுவாய்” என்றான். 

பதினேழாவது அத்தியாயம் முற்றிற்று.

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

ஆண்டாள் கூறும் நப்பின்னை பிராட்டி யார்? - வேளுக்குடி கிருஷ்ணன்

திருப்பாவையில் 18, 19, 20 ஆகிய மூன்று பாசுரங்களிலும் நப்பின்னைப் பிராட்டி பற்றி ஆண்டாள் அழைக்கிறாள். ‘உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் என்று பதினெட்டாம் பாட்டு. ‘குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை  என்று 19ஆம் பாசுரம். ‘செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் என்று 20ஆவது பாசுரம். இப்படி மூன்று பாடல்களில் நப்பின்னைப் பிராட்டியை பற்றி ஆண்டாள் அழைக்கிறாளே அவள் யார்? யாருடைய அவதாரம்? அவளுடைய பின்புலம் என்ன? கண்ணனை அவள் கல்யாணம் பண்ணிக் கொண்டதாக எங்கு கூறப்பட்டுள்ளது? இது கேள்வி.

பதில்

பகவானுடைய மூன்று முக்கியமான தேவிமார்கள் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி. அவர்களுள் நீளாதேவியுடைய அவதாரம்தான் நப்பின்னைப் பிராட்டி. ஸ்ரீதேவியினுடைய அவதாரம் சீதா ருக்மணி ஆகியோர். பூதேவியுடைய அவதாரம் ஆண்டாள். நீளாதேவி நாச்சியாரின் அவதாரம் நப்பின்னை

நீளா என்பது தேவியின் திருநாமம். அவளுக்கு ஒரு வர்ணமும் உண்டு ஒரு கலர். Hue. ஶ்ரீ மகாலட்சுமி செவப்பா இருப்பது தெரியும், ‘மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் என்று பாசுரம். அதே பூமாதேவி கரும்பச்சை வர்ணத்தில் இருப்பாள் எங்களுடைய ஆண்டாள் நிறம் அதுவே. அதுக்கு அடுத்தது நீளாதேவி, ஆங்கிலத்தில் இண்டிகோ அப்படினு ஒரு கலர் சொல்வோம் கிட்டதட்ட ஊதா நிறம் மாதிரி என்று வச்சுக்கோங்க. அந்த நிறத்தோடு தான் நீளாதேவி இருப்பார். அவளுடைய அவதாரம்தான் நப்பின்னை பிராட்டி

இந்த ஒவ்வொரு நாச்சியாருக்கும் ஒவ்வொரு கோயிலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மகாலட்சுமிக்கு திருவெள்ளரை என்ற திவ்யதேசம், புண்டரீகாக்ஷ பெருமாள். அது ஸ்ரீரங்கத்துக்கு அருகிலேயே இருக்குற க்ஷேத்திரம். அதுக்கப்புறம் அனைவரும் அறிந்தது பூமாதேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள். மூன்றாவது நீளாதேவிக்கு திருநறையூர் நாச்சியார் கோவில் கும்பகோணத்துக்கு அருகில். இப்படி மூன்று நாச்சியார்களுக்கு மூன்று இடங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை என்று ஆழ்வார் பாடுகிறார். இதிலே ஆயர் குலப் பெண்ணாகப் பிறந்தவள் தான் நப்பின்னை

கண்ணனுடைய தாய் யசோதை, யசோதைக்கு உடன்பிறந்தவர் கும்பர் என்று பெயர் பெற்றவர். அந்த கும்பருடைய மகள் தான் நப்பின்னை. அவளும் ஆய் குலப்பெண். பகவான் பிறந்ததே சத்திரியனாக இருக்க, அதற்குத் தகுந்த பீஷ்மகரருடைய பெண்ணான ரூக்மிணியை கல்யாணம் பண்ணிக் கொண்டார். அவன் மதுராவிலிருந்து கோகுலத்துக்கு போய் ஆய் குலத்தில் வளர்ந்த படியால், அந்த கோபக்குமராத்தியாய், ஒரு கோபனுடைய பெண்ணாக இருந்த நப்பின்னையை கல்யாணம் பண்ணிக் கொள்கிறார். ஆனால் கண்ணன் 8 பேரை கல்யாணம் பண்ணிக் கொண்டது யாருயாரு எதுஎது என்று பாகவத புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது, அதுல நப்பின்னை என்கிற பெயர் வராது. ஆனால் மற்றொரு பெயருக்குரிய கதையும் நப்பின்னையுடைய கதையும் ஒன்றாக இருக்கும்

நப்பின்னையை கல்யாணம் பண்ணிக்கொள்ள அவர் தந்தை ஒரு சுயம்வரம் வைத்தார். அதிக பலம் வாய்ந்த ஏழு காளை மாடுகள். அந்த ஏழையும் யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு என் பெண்ணை கொடுப்பேன் என்று வைத்தார். கண்ணன் அந்த ஏழு காளை மாடுகள் பேரில் குதித்தார். அவற்றை அடக்கி, நப்பின்னையை கல்யாணம் பண்ணிக் கொண்டார். இதே சரித்திரம் பாகவதத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நப்பின்னை என்கிற பேர் மட்டும் கையாளப்படவில்லை மற்றபடி கதை இதே.

ஸ்ரீ மகாலட்சுமியை விட பூமாதேவிக்கு கருணை அதிகம் பொறுமை அதிகம், அவளையும் விட நீளாதேவிக்கு எல்லார் பேர்லயும் அன்பு பாசம். ‘உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர் மடமகள்என்று ஆழ்வார் பாடுகிறார்

வராக பெருமானை சரணமாக பற்ற வேண்டுமானால் அதற்கு பூமாதேவியை முன்னாடி பற்ற வேண்டும். அதே ராமாவதாரத்தில் சரணாகதி பன்னுவதென்றால் ஸ்ரீதேவி நாச்சியாரின் அவதாரமான சீதையும் முன்னிட வேண்டும். கிருஷ்ணா அவதாரத்தை பற்ற வேண்டுமானால் நீளாதேவியின் அவதாரமான நப்பின்னையை பற்ற வேண்டும். அதனாலதான் கண்ணனையே வேண்ட வந்த ஆண்டாள் திருப்பாவையில் முதலில் நப்பின்னையை பிரார்த்தித்து பின்னால் கண்ணனிடத்தே செல்கிறார்.

ஶ்ரீமகாலட்சுமி தாயார் யாரிடத்திலாவது குற்றத்தை பார்த்தால் குற்றமிருக்கிறது, ஆனால் யார் தான் குற்றம் புரியாதவர்கள் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் என்று கூறுவளாம். ஆனால் பூமாதேவியோ, அவர் குற்றமே புரியவில்லையே என்று சொல்லுவளாம். நீளாதேவி குற்றம் என்ற ஒன்று உலகத்தில் கிடையாது என்று சொல்லி விடுவாளாம். அப்படியென்றால் அடுத்தடுத்து கருணையில் மிக்கவர்கள். இவர்கள் அனைவரும் போட்டியிட்டுக் கொண்டு ஜீவாத்மாக்கள் ஆன நம்மை ரக்ஷிக்கின்றனர்

நாமும், முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியான கண்ணனை, நப்பின்னை நங்காய் திரு, அவள் திருவடிகளைப் பற்றி கிருஷ்ணானுபவத்தை அடைய பிரார்த்திப்போம்.

நன்றி - என்பணி ஆடியோ.