திங்கள், 18 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 349

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்

(இப்புராணத்தில் சொன்ன விஷயங்களின் சுருக்கமும், பாகவத மஹிமையும் முதலியவை)

 ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:- அவரவர் விரும்பும் புருஷார்த்தங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பவனாகையால் பரம தர்ம ஸ்வரூபனும் (சிறந்த அற வடிவானவனும்), அளவிறந்த மஹிமை உடையவனுமாகிய பரமபுருஷனுக்கு, நமஸ்காரம். தர்ம மர்யாதைகளை உபதேசாதிகளால் நிலை நிறுத்தி நடத்துபவரும், மஹானுபாவருமான பாதராயண முனிவருக்கு நமஸ்காரம். நன்மைக்கு ஹேதுவான பெருமையுடைய பகவத் பக்தி ரூபமான தர்மத்திற்கு நமஸ்காரம். தர்மோபதேசம் செய்பவனான, நான்முகனுக்கு நமஸ்காரம். நாரதர், ஸ்ரீசுகர் முதலிய அந்தணர்களுக்கு நமஸ்காரம் செய்து, பூர்வர்களின் (முன்னோர்களின்) உபதேச பரம்பரையால் இடைவீடின்றி நடைபெற்று வந்தவைகளும், கீழ் இந்த ப்ரபந்தத்தில் நிரூபிக்கப்பட்டவைகளுமான பாகவத தர்மங்களைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்; கேட்பீர்களாக. 

அந்தணர்களே! நீங்கள் எதைப்பற்றி என்னை வினவினீர்களோ, எது மனுஷ்ய ஜன்மம் பெற்ற ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் கேட்பது முதலியவைகளால் ஆதரிக்கத் தக்கதோ, அத்தகையதும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சரித்ரங்களை எடுத்துரைப்பதும், மிகவும் அற்புதமுமான இந்தப் புராணத்தை உங்களுக்குச் சொன்னேன். இப்புராணத்தில் பாபங்களை எல்லாம் போக்குபவனும், தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தை (உலகியல் கட்டை) அறுப்பவனும், இந்த்ரியங்களுக்கு நியாமகனும் (நியமிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), பக்தர்களுடைய அனிஷ்டங்களை (தீமைகளைப்) போக்கி, இஷ்டங்களை (விருப்பங்களை) நிறைவேற்றுபவனுமாகிய ஸ்ரீமந்நாராயணன், நேரே நிருபிக்கப்படுகிறான். 

வேதாந்தங்களில் மறைத்துக் கூறப்படுபவனும், ஜகத்தில் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) காரணனும், பரப்ரஹ்மமென்று பெயர் பெற்றவனுமாகிய பரமபுருஷனை இப்புராணம் நன்றாக நேரே நிரூபித்துச் சொல்லுகின்றது. இதில் 

(முதல் ஸ்கந்தத்தில்) ஸாதுக்களாகிய நீங்கள் என்னை இப்புராணத்தைப் பற்றி வினவின உபாக்யானமும் (சரித்ரமும்), ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறிகையாகிற ஜ்ஞானமும், பரமாத்மனுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதிகளை (பெருமை, ஆளுமை, சொத்து) உள்ளபடி அறிகையாகிற விஜ்ஞானமும் கூறப்பட்டன. பிறகு, பக்தியோகமும், அதற்கு அங்கமான வைராக்யமும், பரீக்ஷித்தின் பிறவி முதலிய உபாக்யானமும் (சரித்ரமும்), நாரத மஹர்ஷியின் வ்ருத்தாந்தமும் (சரித்ரமும்), ராஜர்ஷியாகிய பரீக்ஷித்து ப்ராஹ்மண சாபத்தினால் ப்ராயோபவேசம் (இறக்கும் வரை உண்ணா நோன்பு) செய்ததும், 

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 348

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பதினோறாவது அத்தியாயம்

(மஹாபுருஷனுடைய அங்க உப அங்கங்களான அஸ்த்ர (ஆயுதங்கள்) பூஷணாதிகளை (ஆபரணங்கள்) நிரூபித்தலும், த்வாதச ஆதித்ய (12 ஆதித்யர்கள்) வ்யூஹ வர்ணனமும்) 

சௌனகர் சொல்லுகிறார்:- எல்லாம் அறிந்தவர்களில் சிறந்தவரான உம்மை, நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி வினவுகிறோம். புராணம், பஞ்சராத்ரம் முதலிய ஸமஸ்த சாஸ்த்ரங்களுடைய உண்மையும் உமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், நீர் இந்த விஷயத்தை எங்களுக்குச் சொல்லவேண்டும். பகவதாராதன ரூபமான பாஞ்சராத்ராதி சாஸ்த்ரங்களின் உண்மையை அறிந்து, அவ்வாறே அனுஷ்டிக்கின்ற பெரியோர்கள், கேவல சுத்த ஸத்வமயமான திவ்யமங்கள விக்ரஹம் உடையவனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனுமாகிய பகவானுடைய ஆராதனத்தில், பாணி (கை), பாதாதி (கால்) அங்கங்களையும், ஹ்ருதயம் முதலிய உப அங்கங்களையும், ஸுதர்சனம் முதலிய ஆயுதங்களையும், கிரீடம் முதலிய ஆபரணங்களையும், எந்தெந்த தத்வங்களுக்கு அபிமானி தேவதைகளாக எப்படி த்யானிக்கிறார்களோ, அதையெல்லாம் எங்களுக்கு நிரூபித்துச் சொல்வீராக. 

பகவதாராதன ரூபமான கர்ம யோகத்திற்கு இது வேண்டியதாகையால், நாங்கள் இதை அறிய விரும்புகிறோம். ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸார (உலகியல்) துக்கங்களை அனுபவிக்கின்ற ஜீவன், அங்க உப அங்காதி கல்பனையோடு கூடிய இக்கர்மயோகத்தில் திறமை உண்டாகப் பெறுவானாயின், ஜன்ம- ஜரா- மரணாதி ரூபமான ஸம்ஸார துக்கங்களைக் கடந்திருக்கையாகிற முக்தியைப் பெறுவான்.

ஸூத புராணிகர் சொல்லுகிறார்:- ஆசார்யர்களை நமஸ்கரித்து ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடைய அங்க, உப அங்கங்களால் அபிமானிக்கப்பெற்ற அவனுடைய விபூதிகளை (சொத்தை, பெருமையைச்) சொல்லுகிறேன். ப்ரஹ்மதேவன், நாரதர் முதலிய பூர்வாசார்யர்கள் இந்த விபூதிகளை (சொத்தை, பெருமையை) வேதத்தினின்றும், பஞ்சராத்ர சாஸ்த்ரத்தினின்றும் அறிந்து கொண்டார்கள். மாயை என்னும் பெயருடைய ப்ரக்ருதி, மஹத்து, அஹங்காரம், பஞ்சபூதங்கள், காலம் ஆகிய இவ்வொன்பது தத்வங்களாலும் இவற்றின் விகாரங்களான (மாறுபாடுகளான) பதினொரு இந்த்ரியங்கள் பஞ்ச தன்மாத்ரங்கள் (பஞ்ச பூதங்களின் நுட்பமான நிலை) இவைகளாலும், இந்த ப்ரஹ்மாண்டம் நிர்மிக்கப்பட்டதென்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. மற்றும், ஜீவாத்மாக்கள் நிறைந்த இந்த ப்ரஹ்மாண்டத்தில், மூன்று லோகங்களும் புலப்படுகின்றன. இத்தகையதான இந்த ப்ரஹ்மாண்டத்திற்குப் பரமபுருஷனுடைய திவ்யமங்கள விக்ரஹம் அபிமான தேவதையாகையால், இதை அவனுடைய திவ்யமங்கள விக்ரஹமாகச் சொல்லுகிறார்கள். 

புதன், 13 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 347

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

(ருத்ரன் மார்க்கண்டேயருக்கு வரங்கொடுத்தல்)

ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:- அம்மார்க்கண்டேய முனிவர், நாராயணனென்று ப்ரஸித்தி பெற்ற பரமபுருஷன் காட்டின அவனுடைய யோகமாயையின் வைபவத்தை இவ்வாறு அனுபவித்து, அம்மாயையைத் தாண்டுவதற்கு அந்தப் பரமபுருஷனையே சரணம் அடைந்தார்.

மார்க்கண்டேயர் சொல்லுகிறார்:- ஸ்ரீஹரீ! (தன்னைப் பற்றினவர்களின் பாபங்களைப் போக்குகையால் ஹரியென்று பெயர் பெற்றவனே!) தன்னையே சரணமாகப் பற்றினவர்களுக்கு அபயம் கொடுப்பதாகிய உன் பாதமூலத்தை நான் சரணம் அடைந்தேன். தேவர்களும் கூட எவனுடைய மாயையினால் மதியை (புத்தியை) இழந்து, மனம் கலங்கி மோஹிக்கிறார்களோ (மயங்குகிறானோ), அத்தகையனான உன்னுடைய மாயையைக் கடப்பதற்கு, நான் உன்னையே சரணம் அடைகின்றேன்.

ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:– அப்பொழுது, தன்னுடைய ப்ரமதகணங்களால் (சேவகர்களால்) சூழப்பட்டு பார்வதியுடன் வ்ருஷப (காளை) வாஹனத்தின் மேல் ஏறி, ஆகாயத்தில் திரிகின்ற மஹானுபாவனான உருத்திரன், பரமபுருஷனிடத்தில் மனவூக்கம் உற்றிருக்கின்ற அம்முனிவரைக் கண்டான். பிறகு, பார்வதி அம்மஹர்ஷியைக் கண்டு, கிரீசனைக் குறித்து, “மஹானுபாவனே! இம்முனிவர் தேஹம் (உடல்), இந்த்ரியம் (புலன்), மனம் இவையெல்லாம் சிறிதும் சலியாதபடி அடக்கி, காற்றில்லாத பொழுது, ஜலமும், மீன்களின் கூட்டமும் அசையாதிருக்கப்பெற்ற மாஹாஸமுத்ரம் (பெரும் கடல்) போன்றிருக்கிறார். இவரைக் கிட்டிச் (அருகில்) சென்று காண்போம். நீ விரும்பி ஸித்திகளை (முழுமையான பலன்களை) எல்லாம் கொடுப்பவனல்லவா? ஆகையால், இம்முனிவர் எதை விரும்பித் தவம் செய்கிறாரோ, அந்த ஸித்தியை (பலனை) நீயே இவர்க்குக் கொடுப்பாயாக” என்று மொழிந்தாள். 

உருத்திரன் சொல்லுகிறான்:- இவர் ப்ரஹ்மரிஷி. இவர் இஹலோக (இந்த உலக) ஸுகங்களையாவது (இன்பங்களையாவது), பரலோக (பிற உலக) ஸுகங்களையாவது எவற்றையும் விரும்புகிறவரல்லர். ஆயிரம் சொல்லியென். இவர், அழிவற்ற பரமபுருஷனான பகவானிடத்தில் அனன்ய ப்ரயோஜனமான (பகவானைத் தவிர வேறு எந்த பலனையும் விரும்பாத) பக்தி கைகூடப் பெற்றவர். (ஒரு ப்ரயோஜனத்தையும் (பலனையும்) எதிர்பாராமல், பகவானிடத்தில் நிலை நின்ற பக்தியுடையவர்கள், எதையும் விரும்ப மாட்டார்கள்). 

பவானி! ஆயினும் ஸாதுவாகிய இம்முனிவருடன், ஸம்பாஷணம் (உரையாடல்) செய்வோம். (“அவ்வளவு மாத்ரத்தினால் என்ன ப்ரயோஜனம் (பலன்)? என்கிறாயோ?” சொல்லுகிறேன் கேள்.) ப்ராணிகளுக்கு, ஸத்புருஷர்களோடு ஸமாகமம் (தொடர்பு) நேருமாயின், இதுவே அவர்களுக்குப் பரம லாபமாம்.

ஸ்ரீஸூத புராணிகர்  சொல்லுகிறார்:- ஸத்புருஷர்களுக்குக் கதியும், ஸர்வ வித்யா நிர்வாஹகனும் (எல்லா வித்யைகளையும் நியமிப்பவனும்), ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஈச்வரனும், மஹானுபாவனுமாகிய அவ்வுருத்திரன் இவ்வாறு மொழிந்து, அம்மஹர்ஷியிடம் சென்றான். அம்முனிவர், அந்தக்கரண (மனதின்) வ்ருத்திகளை (எண்ணங்களை) எல்லாம் அடக்கி, பரமபுருஷனிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி, அவனையே த்யானித்துக் கொண்டிருக்கையால், ஒன்றான ஜகதீச்வரனும், ஸமஸ்த ஜகத்திற்கும் அந்தராத்மாவுமாகிய பரமபுருஷனுடைய அம்சமாகையால் அத்தன்மைகளெல்லாம் அமையப்பெற்ற பார்வதியும் பரமேச்வரனுமாகிய அவ்விருவரும் எதிரில் வந்து நின்றிருப்பதையும், தன் தேஹத்தையும் மற்றுமுள்ள ப்ரபஞ்சத்தையும் அறியாதிருந்தார். 

மஹானுபாவனாகிய கிரீசனும் அதை அறிந்து, பகவத் உபாஸனத்தினால் (பகவானை த்யானிப்பதால்) தனக்கு ஏற்பட்டிருக்கின்ற பரகாய ப்ரவேச ஸாமர்த்யமாகிற (வேறு ஒருவது உடலில் புகும் திறமையாகிற)  சக்தியினால் காற்று ரந்தரத்தில் (த்வாரத்தில்) ப்ரவேசிப்பது போல், அம்முனிவருடைய ஹ்ருதய ஆகாசத்தில் (இதயத்தில்) ப்ரவேசித்தான். 

வெள்ளி, 8 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 346

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஒன்பதாவது அத்தியாயம்

(மார்க்கண்டேயர் பகவானுடைய மாயையைக் காண வேண்டுமென்று விரும்ப, அவ்விருப்பத்தைப் பகவான் நிறைவேற்றுதல்)

ஸுதர் சொல்லுகிறார்:– ப்ருகு வம்சத்தை மேன்மைப்படுத்தும் மஹானுபாவரே! நரனை நண்பனாகவுடைய நாராயணன், மிகுந்த மதியுடைய மார்க்கண்டேயரால் இவ்வாறு நன்கு துதிக்கப் பெற்று, ஸந்தோஷம் அடைந்து, அவரைக் குறித்து மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:– ஓ, ஓ! மார்க்கண்டேயரே! நீர் மனவூக்கத்துடன் தவம், வேதமோதுதல், இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்) இவற்றைக் குறைவற அனுஷ்டித்து, என்னிடத்தில் அழிவில்லாத பக்தியைச் செய்ததனால் ஸித்தி பெற்றீர் (முழுமை அடைந்தீர்); ப்ரஹ்ம ரிஷிகளில் சிறந்தவரும், ஆகிவிட்டீர். நீர் ஒரு ப்ரயோஜனத்தையும் (பயனையும்) விரும்பாமல், நைஷ்டிக ப்ரஹ்மசர்ய (ப்ரஹ்மசர்யத்திலிருந்து வழுவாமல் நிலை நிற்கும்) வ்ரதத்தை அனுஷ்டித்ததற்கு நாங்கள் அனைவரும் ஸந்தோஷம் அடைந்தோம். உமக்கு நன்மை உண்டாகுக. வரம் கொடுக்கிறவர்களில் சிறந்த என்னிடத்தினின்று உமக்கிஷ்டமான வரத்தை வேண்டிக் கொள்வீராக.

மார்க்கண்டேய ரிஷி சொல்லுகிறார்:– தேவதைகளுக்கெல்லாம் தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் நியாமகனே (நியமிப்பவனே)! தன்னையே சரணமாக அடைந்தவர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனே! ஆச்ரிதர்களை (அடியார்களைக்) கைவிடாதவனே! உனக்கு ஜயம் உண்டாகுக. நீ எனக்குப் புலப்பட்டாயே (தெரிந்தாயே) இந்த வரமே எனக்குப் போதும். (இதற்கு மேல் நான் விரும்ப வேண்டியது ஒன்றும் இல்லை. ப்ரஹ்மதேவன் முதலியவர்களும் கூட மனத்தை யோகத்தினால் பரிசுத்தம் செய்து எவனுடைய அழகான பாதார விந்தங்களைக் காண வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அத்தகைய நீ என் கண்களுக்குப் புலப்படாய். இதற்கு மேற்பட்ட வரம் என்ன இருக்கின்றது?) ஆயினும், உன்னுடைய ஆச்சர்ய சக்தியைக் காண விரும்புகிறேன். ப்ரஹ்மாதி லோக பாலர்களோடு கூடிய இவ்வுலகமெல்லாம் உன்னுடைய ஆச்சர்ய சக்தி ரூபமான மாயையினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட (படைக்கப்பட்ட) தேவர், திர்யக்கு (விலங்கு), மனுஷ்யர், ஸ்தாவரம் (மரம்,செடி) என்னும் பேதத்தை (வேற்றுமையைக்) காண்கின்றது. அத்தகைய மாயையைக் காண விரும்புகிறேன். அதை எனக்குக் காட்டுவாயாக.

செவ்வாய், 5 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 345

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்

(மார்க்கண்டேயர் தவம் செய்தலும், அவர் காமாதிகளால் (காதல் ஆசை) மயங்காதிருத்தலும், நர-நாராயணர்களை ஸ்தோத்ரம் செய்தலும்)

சௌனகர் சொல்லுகிறார்:- ஸூதரே! நீர் நெடுநாள் ஜீவித்திருப்பீராக. நல்லியற்கை உடையவரே! பிறருடைய கார்யங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையரே! பேச வல்லவர்களில் சிறந்தவரே! நாங்கள் இன்னம் என்ன கேட்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதையும் எங்களுக்குச் சொல்வீராக. அபாரமான அஜ்ஞான அந்தகாரத்தில் (அறியாமையாகிற இருட்டில்) அழுந்தி உழல்கின்ற ஜந்துக்களை நீர் அதினின்று கரையேற்றுவிக்கின்றீர். (ஆகையால், நீர் நெடுநாள் வளர்ந்த வாழ்நாளுடையவராகி எங்களைப் போன்றவர்களின் அஜ்ஞானத்தை (அறியாமையைப்) போக்கிக் கொண்டிருப்பீராக). 

ஜனங்கள் மார்க்கண்டேய மஹர்ஷியைச் சிரஞ்சீவியென்று சொல்லுகிறார்கள். இவர் கல்பாந்தத்திலும் (கல்ப முடிவிலும்) கூட மரணம் அடையாமல், மிகுந்திருந்தாரல்லவா. மற்றும், இவர், “எவன் இந்த ஜகத்தையெல்லாம் கல்பாந்தத்தில் விழுங்கினானோ அத்தகைய பகவானையும் கண்டாரல்லவா? பார்க்க வம்ச ச்ரேஷ்டரான அந்த மார்க்கண்டேயர், இதே கல்பத்தில் எங்கள் வம்சத்தில் பிறந்தவர். இந்தக் கல்பத்தில், நைமித்திகம், ப்ராக்ருதம் முதலிய ப்ரளயங்களில் எவ்விதமான ப்ரளயமும் இதுவரையில் ப்ராணிகளுக்கு நேரிடவில்லை. இப்படியிருக்க, அவர் ப்ரளயத்தில் மிகுந்திருந்தாரென்பது எவ்வாறு பொருந்தும், மற்றும், அவர் ஒருவரே ப்ரளய ஆர்ணவத்தில் (ஊழி வெள்ளத்தில்) திரிந்து கொண்டிருந்து, ஓர் ஆலிலையின் மேல் சயனித்துக்கொண்டிருக்கிற சிறிய சிசு ரூபியான (குழந்தை வடிவான) பரமபுருஷனைக் கண்டாரென்றும் சொல்லுகிறார்கள். 

ஸூதரே! இவ்விஷயத்தில் எங்களுக்குப் பெரிய ஸம்சயமாய் (ஸந்தேஹமாய்) இருக்கின்றது. ஆகையால், அந்த வ்ருத்தாந்தத்தை (சரித்ரத்தைக்) கேட்க வேண்டும் என்று எங்களுக்கு மிகவும் குதூஹலம் (உத்ஸாஹம்) உண்டாயிருக்கின்றது. அதைச் சொல்லி, எங்கள் ஸம்சயத்தை (ஸந்தேஹத்தைப்) போக்குவீராக. நீர் யோகிகளில் சிறந்தவர். ஆகையால், எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கும் (நேராகப் பார்க்கும்) திறமையுடையவர்; அன்றியும், புராணங்களிலும் நல்ல அறிஞரென்று நன்கு புகழப்பட்டவர்.

ஸுதர் சொல்லுகிறார்:- மஹர்ஷீ! நீர் கேட்ட இவ்விஷயம் உலகங்களின் பாபங்களை எல்லாம் போக்கவல்லது. ஏனென்றால், இந்த வ்ருத்தாந்தத்தில் கலி மலங்களை (கலி யுகத்தின் அழுக்கை) எல்லாம் போக்க வல்லதாகிய ஸ்ரீமந்நாராயணனுடைய கதை, பெரும்பாலும் அமைந்திருக்கின்றது. (இதைச் சொல்லத் தொடங்கினோமானால், ஸ்ரீமந்நாராயணனுடைய கதைகளையே பெரும்பாலும் சொல்ல வேண்டியதாய் வரும். ஆகையால், இந்த வ்ருத்தாந்தம் மிகவும் பாவனமாய் (தூய்மைப்படுத்த வல்லதாய்) இருக்கும்). 

திங்கள், 4 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 344

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஏழாவது அத்தியாயம்

(அதர்வ வேதத்தின் விபாகத்தைக் கூறுதல்)

ஸுதர் சொல்லுகிறார்:- அதர்வ வேதத்தை அறிந்த ஸமந்தர் என்பவர் தன் சிஷ்யரான கபந்தரென்பவருக்குத் தான் அத்யயனம் செய்த அதர்வ வேத ஸம்ஹிதையை உபதேசித்தார். அக்கபந்தர் அந்த அதர்வ ஸம்ஹிதையை இரண்டு சாகைகளாகப் (கிளைகளாகப்) பிரித்துப் பத்யரென்னும் சிஷ்யர்க்கு ஒரு சாகையையும், வேததர்சர் என்னும் சிஷ்யர்க்கு ஒரு சாகையையும் உபதேசித்தார்.

ப்ரஹ்மரிஷியே! சௌல்காயனி, ப்ரஹ்மபிலி, மௌத்கலர், பிப்பலாயனர் என்னும் இந்நால்வரும் ப்ரஸித்தர்கள் அல்லவா? அவர்கள் வேததர்சருடைய சிஷ்யர்கள். பத்யருடைய சிஷ்யர்களையும் சொல்லுகிறேன்; கேட்பீராக. 

குமுதர், சுனகர், ஜாஜலி என்னும் இம்மூவரும் பத்யருடைய சிஷ்யர்கள். (வேததர்சர் தன்னுடைய ஸம்ஹிதையை நான்கு பாகங்களாகப் பிரித்துத் தன் சிஷ்யர்கள் நால்வர்க்கும் உபதேசித்தார். பத்யர், தன் ஸம்ஹிதையை மூன்று பாகங்களாகப் பிரித்துத் தன் சிஷ்யர்கள் மூவர்க்கும் உபதேசித்தார்). அவர்களில் ஜாஜலி அதர்வ வேதத்தை நன்றாக உணர்ந்தவர். பப்ருவும், ஆங்கிரஸ கோத்ரத்தில் பிறந்த ஸைந்தவாயனரும் சௌனகருடைய சிஷ்யர்கள்.(அந்த சௌனகர், தன் ஸம்ஹிதையை இரண்டு சாகைகளாகப் பிரித்துத் தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்க) அவ்விருவரும் அவ்விரண்டு சாகைகளை அவரிடத்தினின்று பெற்றார்கள். பப்ரு, ஸைந்தவாயனர் ஆகிய அவ்விருவருடைய சிஷ்யர்களான ஸாவர்ணி, நக்ஷத்ரகல்பர், சாந்திகல்பர் ஆகிய இவர்களும் காச்யபர்களும் ஆங்கிரஸர்களும் அதர்வ வேதத்தின் சாகைகளைப் பிரித்து ப்ரவர்த்திப்பித்தார்கள் (கற்பித்தார்கள்). முனிவரே! இவ்வாறு வேத ஸம்ஹிதா விபாகத்தைச் (பிரிவைச்) சொன்னேன். இனிமேல் பௌராணிகர்களைச் சொல்லுகிறேன், கேட்பீராக.