வியாழன், 30 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 22 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்


ஸ்லோகம் – 12 – பகுதி - 2 

பெரிய திருமலை நம்பிகளுக்கு இரண்டு மருமகன்கள். அதில் ஒருவர் ராமானுஜர். மற்றொருவர் கோவிந்தப் பெருமாள் என்ற எம்பார். ராமானுஜர் எம்பாரைக் கூப்பிட்டு விசாரித்தார். வாஸ்தவம்தான் நீர் சொல்வது. சொல்றபடி கேட்டுப்பார்க்கிறேன், நடக்குமா என்று தெரியாது. என்று சொல்லிவிட்டுப் போனார். அன்று இரவு கழிந்தது. கணவனும் மனைவியும் பகவத் விஷயத்தை ராத்திரி முழுக்கப் பேசினார்கள். திரும்ப வந்த கோவிந்த பெருமாளிடம் என்ன என்று ராமானுஜர் கேட்டார். காம ஶுகத்தை அநுபவிக்க நான் ஒன்றே ஒன்றை எதிர்பார்த்தேன். அது தான் இருட்டு. ராத்திரி முழுக்க இருளைத் தேடினேன், தேடினேன். இருளே கிடைக்கவில்லை. உள்ளும் புறமும் பகவான் பிரகாசமாய் வியாபித்து இருக்கையால் இருளே எனக்குக் கிடைக்கவில்லை. லோகம் முழுக்க எனக்கு வெளிச்சம்தான் கண்ணில் படுகிறது. எங்கே காமஸுகம் அனுபவிக்க? என்றார். ஸ்ரீ ராமானுஜர் “இனி உமக்கு இல்லறம் ஆகாது. நீர் சந்யாசம் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி த்ரிதண்டத்தையும், காஷாயத்தையும் கொடுத்து சந்யாசம் வழங்கிவிட்டார். எம்பார் என்ற தாஸ்ய நாமம் வழங்கிவிட்டார். உள்ளும் புறமும் பகவான் வியாபிக்கிறார் என்றால் இருட்டு எங்கிருந்து வரும்? 

“பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக்கண்டேன்” முதலாழ்வார் பாசுரம். நாரணனைக் கண்டால்தான் பகலையே நாங்கள் கண்போம். பகவான் ரொம்ப பிரகாசமாய் இருக்கிறார். 

குருகைக் காவலப்பன் என்று ஒரு ஆசார்யர். அவர் நாதமுனிகளின் சத் சிஷ்யர். கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊர். ரொம்ப ஆச்சர்யமான ஸன்னதி. குருகைக் காவலப்பன் பெரிய யோகி. அவரிடம் போய் ஒரு சிஷ்யர் “எங்களுக்கு பகவானை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. உமக்கு ஏதானும் ரஹஸ்யம் தெரிந்தால் சொல்லிக்கொடுமே? நீர் யோகத்தில் நித்யம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர். எங்களால் முடியவில்லை” என்று கேட்டார். அந்த ஸ்வாமி பதில் கேள்வி கேட்டார், “அவரை மறப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் நீங்கள் சொல்லிக்கொடுங்கள், ஞாபகம் வைப்பதற்கு வழி நான் அப்புறம் சொல்லிக் கொடுக்கிறேன்” என்றார். எல்லா இடத்திலும் ஜனங்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களை பார்ப்பதற்கு எனக்கு வழி சொல்லிக் கொடுங்கள் என்றால் எப்படிச் சொல்வது. பகவான் உள்ளேயும் புறமும் இருக்கும்போது தெரியாவிட்டால் நம் குற்றம். தெரிந்துதான் தீரவேண்டும்.

ஆனால் நான் என்ன பண்ணினேன். கண்தெரியாதவனுக்கு எதிரே உள்ளவன் தெரியாததுபோலே பகவான் உள்ளும் புறமும் வியாபித்து இருந்தாலும் பார்க்க சக்தியில்லாதவனாயிருக்கிறேன். 

அந்த: புர:ஸ்திதம் இவ அவீக்ஷமாண: ஸந் – அந்த பகவான் என் கண்ணிலே படாமலே அடியேன் துன்பப்பட்டேன். கண் மயங்கிப் போயிருந்ததாலே, கண்ணில் புரை நோய் வந்திருந்ததென்றால், கண்ணாடி அழுக்குப் படிந்து இருந்ததென்றால் எதிரே இருப்பவர் தெரியவில்லை. ஆனால் எனக்கும் கண் இருக்கிறது. காமத்துக்கு வசப்பட்டு மயங்கிக் கிடக்கிறது. குடிக்கக்கூடாததை ஒருவர் குடித்துவிட்டார். கண் தெளிவாகவா தெரியும்? வசப்பட்டுவிட்டோம் என்றால், ஒரு நசையில் இருந்தால் கண் தெரியாதே. காமதசையில் தவித்தேன். அதனால்தான் மோஹித்துப் போனேன். கண்ணை மறைத்து விட்டது. அதனால் தான் பகவானைத் தெரியவில்லை

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 19 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

பெரியாழ்வாரும் பிள்ளைத்தமிழும்

எம்பெருமானுக்கு எத்தனையோ பேர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். ஆனால், “ஐயோ! எம்பெருமானுக்கு என்னாகுமோ, இந்த இருள் தருமாஞாலத்திலே” என்று வயிறு பிடித்து, பரிவு விஞ்சப் பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார்.

விஷ்ணுசித்தரான அவர் இந்தப் பொங்கும் பரிவாலே பெற்றார் “பெரியாழ்வார்” என்ற பெயர் என்பார் உபதேசரத்தின மாலையில் சுவாமி மணவாள மாமுனிகள்.

திருப்பல்லாண்டுக்கும், திருப்பாவைக்கும் வைணவ மரபிலே ஒரு தனி ஏற்றம் உண்டு. இரண்டுமில்லாது தினசரி வழிபாடு நிறைவு பெறாது.

பெரியாழ்வாருடைய திருநாமம் விஷ்ணு சித்தர். இதுவும் காரணப் பெயர்தான். விஷ்ணுவை சதா சர்வ காலமும் தன் சித்தத்தில் வைத்துப் போற்றுபவர் என்பதால் இந்தத் திருநாமம்.

பகவான் விஷ்ணுவின் சித்தத்தில் சதா இவர் இருப்பதால் விஷ்ணு சித்தர் என்று நயமுரைப்பாரும் உண்டு. காரணம் என்னையே நினைக்கும் பக்தன் என்னுடைய உயிருக்கு நிகரானவன் என்று கீதையில் பகவான் கண்ணன் கூறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட பல சிறப்புகளைப் பெற்ற பெரியாழ்வார் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் கருடாத்மாவாகிய கருடனுடைய அம்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார்.

இவர் பகவானுக்குச் செய்த தொண்டு இரண்டு பிரிவாக அமைந்தது. ஒன்று பாமாலை சூட்டினார். இரண்டாவது பூமாலை சூட்டினார்.

இதில் மகிழ்ந்த பூதேவி நாச்சியார் தனது வைகுந்த வான் போகத்தைத் துச்சமென எண்ணி பெரியாழ்வாரின் திருமகளாய் - ஆடிப்பூரத்தில் ஆண்டாளாக - இவர் நந்தவனத்தில் அவதரித்தார். 

கோதை என்ற பெயரால் வளர்த்து (கோதை என்பதற்கும் மாலை என்று பொருள் உண்டு) பூமாலையோடும் பாமாலையோடும் சேர்த்து கோதையையும் பகவானுக்குக் கொடுத்து பகவானுக்கே மாமனாரானார்.

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 21 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 12


ஸ்ரீ ஸ்வாமி மணவாள மாமுனிகளால் ராமானுஜர் விஷயமாக அருளிச்செய்தது யதிராஜ விம்ஶதி. அதிலே எம்பருமானாருடைய திருவடிகளே பரம ப்ராபகம். அதுவே நமக்கு மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்க வல்லது. நம்மிடம் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் அற்றுப்போனதாலே உய்வதற்கு ஒரே வழி அவருடைய திருவடிகளைப் பற்றுவதே என்று சொல்லிக்கொண்டு வருகிறார். அதிலே ராமானுஜருக்கு ஏற்பட்ட வைபவங்கள், அவருடைய சிஷ்யர்களுடைய அருமை பெருமைகள் இவற்றை எல்லாம் கூறி வந்தவர், அவருடைய திருவடிகளைப் பற்றுவதற்கு நமக்கு ஒருவிதத்திலும் தகுதியில்லை

அனைத்துக் குற்றங்களுக்கும் இருப்பிடமாக உள்ளேன். ஒரு நன்மைகூட இல்லை. இதை எல்லாவற்றையும் ஸ்வாமியிடத்திலேயே விண்ணப்பித்து, அவருடைய நிர்ஹேதுகமான க்ருபை ஒன்றுதான் அடியேன் கடைத்தேறுவதற்கு வழியாகும் என்று கூறிக்கொண்டு வருகிறார். 

பகவானும் அநுக்ரஹிக்கிறார். ஆசார்யனும் அநுக்ரஹிக்கிறார். இருவரும் ஒரு காரணத்தாலே அனுக்கிரஹிக்கிறதில்லை. ஆனால் பகவானிடத்தில் ஸ்வாதந்த்ரியம் நிரம்பியிருக்கிறபடியாலே நமக்கு சந்தேகமும் வரும், பயமும் விலகாது. ஆசார்யர் பரதந்திரராக இருக்கிறபடியால் அவர் நம்மை ஸம்சாரத்தில் வைக்க மாட்டார். முக்தியை அளிப்பார் என்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது. இதனால்தான் பகவானைப் பற்றுவது ப்ரதம பர்வ நிஷ்டை என்றும், ஆசார்யரைப் பற்றுவது சரமபர்வ நிஷ்டை என்றும் கொண்டாடப்படுகிறது. ப்ரதம பர்வ என்றால் முதல்படி. சரமபர்வ என்றால் கடைசிப்படி. கூரத்தாழ்வான், முதலியாண்டான் போன்றோர் எல்லாம் திருவரங்கம் கோயிலுக்குள் சென்று பகவானையும் தரிசிப்பார்கள். ராமானுஜரிடம் அதிக பக்தியோடு இருப்பார்கள். 

இப்படி இவர்கள் பகவானையும் ஆசார்யனையும் ஆஶ்ரயிப்பதை பார்த்த வடுக நம்பிகள் சிரித்துக் கூறுவராம் இது என்ன இருகரையைப் பற்றி இருக்கிறீர்கள். உங்களிடம் ஒரு கரையைப் பற்றினால் மோக்ஷம் கிடையாது என்று பகவான் சொன்னாரா? எம்பெருமானையும் பற்றி எம்பெருமானாரையுமா பற்ற வேண்டும்? ஒருவரைப் பற்றியிருந்தால் போதாதோ என்கிற அளவுக்கு வடுகநம்பியினுடைய நிஷ்டை. ஆனால் அது புரிவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஆசார்யனிடத்தில் பக்தியில்லாது போய்விட்டால் பகவான் மோக்ஷம் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை. அதனால்தான் 

புதன், 29 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 20 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 11

पापे क्रुते यदि भवन्ति भयानुतापलज्जाः पुनः करणमस्य कथं घटेत ।
मोहेन मे न भवतीह भयादिलेशः तस्मात् पुनः पुनरघं यतिराज कुर्वे ॥ (11)

பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே || (11)

யதிராஜ பாபே க்ருதே ஸதி – யதிராஜரே – பாவம் செய்யப் பட்டப்போது, 
ஒருவர் பாபத்தைச் செய்துவிட்டாரானால், இன்ன இன்ன வந்தது என்றால் ப்ராயசித்தம் செய்துவிடலாம். என்ன என்றால் 
1. பாபம் பண்ணிவிட்டோமே என்கிற பயம். 
2. அநுதாபம் – செய்துவிட்டோமே இனி செய்யக்கூடாது என்று அநுதாபப்படுதல். 
3. லஜ்ஜா – வெட்கப்படுவது. 
4. பிராயசித்தம் பண்ண வேண்டும். அதற்காக என்ன பிராயசித்தம் என்று தேடவேண்டும். பாபம் பண்ணி விட்டோமென்றால் இந்த நான்கும் வரவேண்டும். இனி பாபத்தைச் செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும். ஆனால் எனக்கோ இதில் ஏதாவது வந்ததா என்றால் ஒன்றும் வரவேயில்லை. 

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 18 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

திருக்கோட்டியூர் நம்பிகளும் எம்பெருமானாரும்

வைணவ குருபரம்பரை நாதமுனிகளிடம் இருந்து துவங்குகிறது. நாதமுனிகளுக்குப் பிறகு வைணவ தரிசனத்தைக் கட்டிக் காத்தவர் சுவாமி ஆளவந்தார். பெயருக்கு ஏற்ப வைணவத்தை ஆளவந்தவர் அவர்.

ஆளவந்தார் தன்னுடைய பல சிஷ்யர்களுள் ஐந்து பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு ஸம்பிரதாயத்தில் உள்ள ஸகல அர்த்த விசேஷங்களையும் கற்றுக் கொடுக்குமாறு நியமித்தார். அந்த ஐந்து பேரில், ரஹஸ்யத்ரயத்தினுடைய (திருமந்திரம், த்வயம், சரம சுலோகம்) அர்த்த விசேஷங்களைக் கற்றுக் கொடுக்குமாறு திருக்கோட்டியூர் நம்பியை நியமித்தார்.

திருக்கோட்டியூர் நம்பிகள் வைபவம் அற்புதமானது. ஒவ்வொரு வைணவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. ஆசார்யர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும், அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் கவனித்தாலே போதும்; நாம் பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதை "மேலையார் செய்வன" என்று ஆண்டாளும் “முன்னோர் மொழிந்த மொழி முறை தப்பாது” என்று மணவாள மாமுனிகளும் சொல்லியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்கோட்டியூர் நம்பி ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கியவர். வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், காச்யப கோத்திரத்தில், திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக, சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில், குருசேகர் எனும் இயற்பெயரில் அவதரித்தார். கோஷ்டிபுரீசர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. ஆளவந்தார் பிறந்து பதினோரு வருடங்களுக்குப் பின் பிறந்தவர். இராமாநுஜரிடம் அளவு கடந்த அன்பு கொண்டவராக விளங்கியவர். எப்போது எல்லாம் இராமாநுஜரைக் காண வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போதெல்லாம், “நான் கோயிலுக்கு சென்று வருகிறேன்” என்று வீட்டில் சொல்லிவிட்டு, இராமாநுஜரை சந்திக்கத் திருவரங்கம் சென்று விடுவாராம். தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும், தேவகிப்பிராட்டி எனும் ஒரே மகளையும் இராமாநுசருக்குச் சீடர்களாக்கியவர்.

திருக்கோட்டியூர் நம்பி தன் ஆசார்யரான ஆளவந்தாரிடம் கற்று கொண்ட ரஹஸ்யத்ரயத்தினுடைய (திருமந்திரம், த்வயம் மற்றும் சரம சுலோகம்) அர்த்த விசேஷங்களையே எப்பொழுதும் த்யானித்துக் கொண்டே இருப்பார். யாரிடமும் பேசாமல் யாருக்கு என் சொல்கேன் என்று இருந்தவர்.

திருக்கோட்டியூரில் வசிக்கும் ஒருவருக்கும் இவருடைய பெருமைகள் தெரியாது. ஸ்ரீராமாநுஜருக்கு பெரிய நம்பிகள் மூலம் இவருடைய பெருமைகள் தெரிந்ததால், மிகவும் ரஹஸ்யமான மந்திர அர்த்த விசேஷங்களைக் கற்றுக் கொள்வதற்காக 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு நடந்தே சென்றார் என்பது வரலாறு.

ஸ்ரீகண்ணபிரான் கீதையில் அருளிச் செய்த சாரமான வார்த்தை “சரம சுலோகம்”. “ஸர்வதர்மான் பரித்யஜ்ய…” எனத் தொடங்கும் சரம சுலோகத்தின் பொருளை அறிவதற்காகத் திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு நடைப்பயணமாகச் சென்றார் பகவத் ராமாநுஜர். ஸ்ரீ இராமாநுஜர் திருக்கோட்டியூர் சென்று அங்கே இருக்கும் கோயிலான சௌம்ய நாராயணப் பெருமாளைச் சேவித்து விட்டு, நம்பியின் திருமாளிகை (வீடு) எங்கே என்று விசாரித்து அதனை நோக்கித் தண்டனிட்டுக் கொண்டே சென்று நம்பிகளிடம் தனக்கு உபதேசம் வேண்டி நிற்க, நம்பியோ "இன்னொரு சமயம் பார்க்கலாம்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 19 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 10

हा हन्त हन्त मनसा क्रियया च वाचा योहं चरामि सततं त्रिविधापचारान् ।
सोहं तवाप्रियकरः प्रियक्रुद्वदेव कालं नयामि यतिराज! ततोस्मि मूर्खः ॥ (10)

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: || (10)

இப்படித்தான் காலக்ஷேபம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப்பார்த்தாலே தெரிந்துவிடும்.

யதிராஜ – யதிராஜரே, 

ய: அஹம் – எத்தகைய அடியேன், 

மநஸா வாசா க்ரியயா ச – மனத்தாலும், வாக்காலும், செயலாலும்,

த்ரிவித அபசாராந் – மனம், மொழி, மெய், இந்த மூன்றாலும் இத்தனை நாள் பண்ணிக் கொண்டிருப்பது அபசாரங்களையே. மூன்று மூன்றாகப் பார்க்க வேண்டியது தான். காலம் மூன்று: நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம். மனம், வாக்கு, காயம் என்று மூன்று உள்ளது, அபசாரம் மூன்று: பகவதபசார, பாகவதாபசார, அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்கள் உள்ளது., மனத்துக்கு மூன்று காலம், ஒவ்வொரு காலத்திலும் மூன்று வித அபசாரங்களும். அதுபோல மொழிக்கும், மெய்க்கும். 27 அபசாரங்கள். கணக்கே தெரியாமல் போய்விட்டது ஸ்வாமி. மூன்று வித கரணங்களாலே, மூன்று காலங்களில், மூன்றுவிதமான அபசாரப்பட்டிருக்கின்றேன். 

திங்கள், 27 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 17 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

நம்மாழ்வாரும் திருமலையப்பனும்


ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் தலையானவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் என்கிற திருநாமம் அவர் ஒருவருக்கே உண்டு. அது அவருடைய ஏற்றத்தால் ஏற்பட்டது.


"நம்பெருமாள் நம்மாழ்வார் நம்பிள்ளை நஞ்சீயர் என்பர் அவரவர் தம் ஏற்றத்தால்" என்று உபதேசரத்தின மாலையில் (உ.ர.மா.50) மணவாளமாமுனிகள் குறிப்பிடுகின்றார்.


நம்மாழ்வார் அவதரித்த நட்சத்திரம் விசாகம். மாதம் வைகாசி, திருத்தலம் திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி), நான்கு வேதங்களுக்கு நிகராக நான்கு நூல்களைப் பாடி இருக்கிறார். அப்படி பாடிய நூல்களில் சிறந்தது சகல வேத சாரமான திருவாய்மொழி. இதற்கு இணையான ஒரு நூல் இல்லை.


“உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு?” என்று திருவாய்மொழியின் ஏற்றத்தையும், ஆழ்வார் ஏற்றத்தையும் இரண்டு பாசுரங்களால் விவரிக்கின்றார் மணவாள மாமுனிகள்.


நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியும் அதன் உரையும் பகவத் விஷயம் என வழங்கப்படுகிறது. திருவாய்மொழி துவய மஹா மந்திரத்தின் விரிவு என்றே ஆசாரியர்கள் விளக்கியருளியிருக்கின்றனர்.

துவய மகா மந்திரம் 25 எழுத்துகளால் ஆனது. இரண்டு வாக்கியங்கள். தகுதி உடையோருக்கும், தக்க நெறி உடையவருக்கும் மட்டுமே சொல்ல வேண்டும் என்றார் திருக்கோட்டியூர் நம்பி. ராமாநுஜருக்கு இம்மஹா மந்திரத்தைத் தரும் போது தகுதியற்ற யாருக்கும் இதனை சொல்லி விடாது இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டார். மந்திர ரத்னமான துவய அனுசந்தானமே உயிருக்கு ஒரே பாதுகாப்பு என்பது இராமாநுஜரின் உறுதியான நிர்ணயம்.


எவனொருவன் இவ்வுலக பந்தத்திலிருந்து விடுபட்டு, வாழ்ந்து, அவ்வுலகமாகிய மோட்சத்தை அடைய விரும்புகின்றானோ அவனுக்கு முமூட்சு என்று பெயர். அதாவது மோட்சத்தில் விருப்பம் உடையவன். அதற்குத் தடையாக இருப்பது மற்ற உலக ஆசைகள்.


அதனால் தான் வேறு ஆசைகளைக் கொடுக்காதே; “மற்றை நம் காமங்கள் மாற்று” என்று பகவானிடம் வேண்டினாள் ஆண்டாள். அவனுக்கு வேறு பற்றுக்கள் கூடாது. எம் பெருமானே புகல் என்று பற்ற வேண்டும். தனக்கு அவன் மோட்சம் தருவான் என்ற நம்பிக்கை வேண்டும். அதை அடையும் எண்ணம் வேண்டும். அதுவரை திவ்ய தேசங்களைச் சேவிக்க வேண்டும். அங்கங்கே பாகவதர்களோடு சேர்ந்து பகவத் விஷய அனுபவம் பெற வேண்டும். வேதகப்பொன் அல்லவா இவர்கள் தொடர்பு. இந்த பாகவத அனுபவம் அவன் குறைகளைப் போக்கி குணங்களை ஒளிபெறச் செய்யும்.


எல்லாவற்றுக்கும் மேலாக ஆசாரியனிடத்தில் அபிமானம் வேண்டும். “ஆசாரிய அபிமானமே உத்தாரகம்”. இப்படி இருக்கும் அதிகாரிக்குதான் மூல மந்திரங்கள் மூன்றும் வசப்படும். அது வசப்பட்டால்தான் வானம் (மோட்சம்) வசப்படும்.

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 18 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 9


नित्यम् त्वहं परिभवामि गुरुं च मन्त्रं तद्देवतामपि न किन्चिदहो बिभेमि ।
इत्थं शठोSप्यशठवद्भवदीयसङ्घे ह्रुष्टश्चरामि यतिराज! ततोSस्मि मूर्खः ॥ (9)


நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாம் அபி ந கிஞ்சித் அஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீயஸங்கே
ஹ்ருஷ்டஸ்சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க:|| (9)


திரும்பவும் அப்படியே சொல்கிறார்:


யதிராஜ! – யதிராஜரே, 


அஹம் மூர்க்க: அஸ்மி – அடியேன் மூர்க்கனாக இருக்கிறேன். ஏற்கனவே உம்மிடம் பிரார்த்தித்தேன் அல்லவா? திருமந்திரத்தில் நிஷ்டை வரவேண்டும். அநந்யார்ஹ ஶேஷத்வம், அநந்யார்ஹ போக்யத்வம், அநந்ய ஶரணத்வங்கள் என்று பிரார்த்தித்தேன். அப்படியென்றால் என்னிடம் ஒன்று இருந்திருக்க வேண்டும். “மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்த்ர ப்ரதே குரௌ இஷுபத்திஸ் சதா கார்யா தாஹிப்ரதம ஸாதனம்” என்று சொல்வர். மந்திரத்திலும் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ரப்ரதானான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால் அது கார்ய கரம் என்று பிள்ளைலோகாசாரியாரின் ஸ்ரீஸுக்தி. திருமந்திரத்திலும், திருமந்திரத்துக்கு உள்ளீடான வஸ்து நாராயணனிடத்திலும், மந்திரத்தை உபதேசம் பண்ணியிருக்கிற ஆசார்யரிடத்திலும் நிரம்ப ப்ரேமம் இருக்க வேண்டும். இந்த திருமந்திரம், நாராயணன், ஆசார்யன் ஆகிய மூன்று பேரிடம் நமக்கு பக்தி இருந்தால்தான் காரியமே நடக்கும். 


ஆகவேதான் பெரிய திருமொழியில் முதல் பத்தில் திருமங்கையாழ்வார் நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம், நாராயணா என்னும் நாமம் என்று திரும்ப திரும்ப சொல்கிறார். அடுத்த பத்து: திருப்பிரிதி திவ்ய தேசம். 


வாலிமாவலத்து ஒருவனது உடல்கெட*வரிசிலை வளைவித்து* அன்று
ஏலம் நாறு தண் தடம்பொழில் இடம்பெற* இருந்த நல் இமயத்து**
ஆலிமாமுகில் அதிர்தர அருவரை அகடுற முகடேறி*
பீலிமாமயில் நடஞ்செயும் தடஞ்சுனைப் பிரிதி சென்றடை நெஞ்சே. 1-2-1

தொடங்கி பத்து பாசுரம் மந்திரத்துக்கு உள்ளீடான நாராயணனை திருப்பிரிதியில் ஸேவித்துவிட்டார். 

அடுத்து மூன்றாம் பதிகம், நாலாம் பதிகம் திருபதரிகாசிரமம். 

முற்ற முத்துக் கோல் துணையா*முன்னடி நோக்கி வளைந்து*
இற்ற கால்போல் தள்ளி மெல்ல* இருந்து அங்கு இளையா முன் **
பெற்ற தாய்போல வந்த பேய்ச்சி* பெருமுலையூடு* உயிரை
வற்ற வாங்கியுண்ட வாயான் * வதரி வணங்குதுமே. 1-3-1

பதரிகாஸ்ரமப் பெருமாள்தான் திருமந்திரம் உபதேசம் பண்ணிய ஆசார்யன். வரிசையா மூன்று பதிகம். மந்திரத்தை முதல் பதிகத்திலும், மந்திரத்திற்கு உள்ளீடான நாராயணனை இரண்டாவது பதிகத்திலும், மந்திரம் உபதேசித்த ஆசார்யனை பதரிவிஶால் பெருமானை மூன்றாம் பதிகத்தில் சொன்னார். பெரிய திருமொழி ஆரம்பித்த விதமே இப்படித்தான்.

ஆனால் நான் என்ன செய்தேன் தெரியுமா? நீர் செய்த காலக்ஷேபம் எல்லாம் நன்றாகக் கேட்டேன். மந்திரத்தை, தேவதையை, மற்றும் ஆசார்யனை அவமதித்தேன். ஆனாலும் உம் முன்னாடி வந்து நிற்கிறேன்.

ஶ்ரீமத் பாகவதம் - 118

ஐந்தாவது ஸ்கந்தம் – பத்தாவது அத்தியாயம்

(ஜடபரதன் ரஹோகண மன்னவனுக்குத் தத்வோபதேசம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பால் ஸிந்து தேசங்களுக்கும் ஸௌவீர தேசங்களுக்கும் ப்ரபுவாகிய ரஹோகண மன்னவன் கபில முனிவரிடம் தத்வங்களை அறிய விரும்பி அவர் இருக்குமிடம் தேடிப்போய்க் கொண்டிருக்கையில் வழியில் இக்ஷமதியென்னும் நதியின் கரையில் பல்லக்குத் தூக்க ஆள்வேண்டித் தேடும் ஸமயத்தில், பல்லக்கு எடுப்பவர்களின் தலைவன் ஆங்கிரஸருடைய புதல்வனாகிய ஜடபரதனைத் தெய்வாதீனமாய்க் கண்டு, “இவன் உடம்பெல்லாம் பருத்து யௌவன (வாலிப) வயதும் அமைந்திருக்கிறான். இவனுடைய அங்கங்களெல்லாம் கட்டுத் தளராமல் உறுதியாயிருக்கின்றன. ஆகையால் இவன் வ்ருஷபம் (எருது) போலும் கழுதைபோலும் பாரம் சுமக்கவல்லவன்” என்று ஆலோசித்து முன்னமே வெட்டிக்குப் பிடித்துக் கொண்டவர்களோடு இவனையும் பலாத்காரமாகப் பிடித்துச் சேர்த்துக்கொண்டான். அம்மஹானுபாவன் பல்லக்குத் தூக்கத் தகாதவனாயினும் அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். அந்த ப்ராஹ்மண ச்ரேஷ்டனாகிய ஜடபரதன் ஜந்துஹிம்ஸை (ப்ராணிகளுக்கு துன்பம்) வாராமைக்காக ஒரு பாணத்தளவு தூரம் பூமியைப் பார்த்துக்கொண்டே மெதுவாக நடந்தானாகையால் ஜடபரதரது நடை மற்றவரது நடையோடு ஒத்திருக்கவில்லை. அதனால் பல்லக்கும் அடிக்கொருதரம் கோணலாகப்போக ஆரம்பித்தது. ரஹோகண மன்னன் அதை ஆலோசித்துப் பல்லக்குத் தூக்கும் புருஷர்களைப் பார்த்து ஓ பல்லக்கு எடுக்கிறவர்களே! நன்கு நடப்பீர்களாக. ஏன் பல்லக்கை இங்கனம் கோணலாய்த் தூக்கிக்கொண்டு போகிறீர்கள்?” என்றான். அவர்கள் அம்மன்னவன் அதட்டிச் சொன்ன வார்த்தையைக் கேட்டுத் தண்டிப்பானென்று பயந்து அவனைக் குறித்து “மன்னவனே! நாங்கள் மன ஆக்கத்தவறுதலின்றி உனது கட்டளைக்குட்பட்டு நன்றாகவே சுமக்கின்றோம். பின்னையென்னவெனில், இவன் இப்பொழுதே தூக்க வந்தவனாயினும் வேகமாய் நடக்கமாட்டாதிருக்கின்றான். இவனோடுகூட எங்களால் தூக்கமுடியாது” என்றார்கள். அவர்கள் இங்கனம் மன இரக்கத்திற்கிடமாக மொழிந்த வசனத்தைக்கேட்ட மன்னவன், ஒருவனுடைய தோஷம் அவனுடைய ஸம்பந்தத்தினால் மற்றெல்லோர்க்கும் உண்டாகிறதென்று நிச்சயித்துப் பெரியோர்களைப் பணிந்து படித்தவனாயினும் இயற்கையில் ஏற்பட்ட ரஜோகுணத்தினால் பரவசனாகிச் சிறிது கோபங்கொண்டு ப்ரஹ்மதேஜஸ் வெளித்தோற்றாமல் உள்ளே அடங்கியிருப்பவரும் நீறுபூத்த நெருப்புப் போன்றவருமாகிய அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து “அப்பா! வாஸ்தவம் (உண்மையில்) நிரம்பவும் இளைப்புற்றிருக்கின்றாய்; வெகு நேரமாய் நீயொருவனே நெடுந்தூரம் பல்லக்குச் சுமந்து வந்தாயல்லவா? மற்றும், நீ மிக்க பருமனில்லாமல் இளைத்திருக்கின்றாய். அன்றியும், உன்னுடம்பெல்லாம் கட்டுத் தளர்ந்து உறுதியற்றிருக்கின்றன. அதுவுமன்றிக் கிழத்தனத்தினால் வருந்தியிருக்கின்றாய். நண்பனே! உன்னோடு கூடத்தூக்குகிற மற்ற இவர்களெல்லோரும் நெடுந்தூரம் நடக்காமல் ஸுகமாகவே இருக்கின்றனர்” என்று பலவாறு பரிஹாஸத்துடன் (கிண்டலுடன்) விரட்டிச் சொல்லினும், கர்மத்தினால் பரிணமித்த பஞ்சபூதங்களும் சப்தாதி விஷயங்களும் செயல்களும் இந்திரியங்களும் மனமும் வாஸனையும் அமைத்து எப்பொழுதும் ஒருவாறாய் இல்லாமல் மாறிக்கொண்டேயிருப்பதும் அவயவங்களின் சேர்க்கையாலே ஏற்பட்ட ஒரு ஆகார விசேஷமாயிருப்பதும் (உருவமயிருப்பதும்) சரம (கடைசி) சரீரமுமாகிய தேஹத்திலும் அதைத்தொடர்ந்த மற்றவைகளிடத்திலும் நானென்றும் என்னுடையதென்றும் விளையும் பொய் எண்ணங்களின்றிப் பரப்ரஹ்ம ஸாயுஜ்யத்தை (சேர்த்தியை) அடைய ஸித்தமாயிருப்பவராகையால் அவர் அவன் சொன்னதை ஒன்றும் பொருள் செய்யாமல் முன்போலவே பல்லக்கைச் சுமந்து கொண்டு நடந்தார். மீளவும் தன் பல்லக்கு முன்போல் கோணலாய்ப் போவதைக் கண்டு ரஹோகண மன்னன் மிகவும் கோபித்து அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து “இதென்ன? அடே! நீ ஜீவித்திருந்தும் செத்தாற் போலிருக்கின்றாய். என்னைப் பொருள் செய்யாமல் ப்ரபுவாகிய எனது கட்டளையைக் கடந்து நடக்கின்றாய். யமன் ப்ராணிகளைத் தண்டிப்பதுபோல், நீ உன்னுடைய இயற்கையில் நின்று நன்றாக வேலை செய்யும்படி மன ஆக்கமற்றிருக்கிற உன்னை நான் தண்டிக்கிறேன்” என்றான். ரஜோகுணமும் தமோகுணமும் தொடரப்பெற்றுத் தன்னை மன்னவனென்றும் பண்டிதனென்றும் நினைத்துப் பெருமதங்கொண்டு பாகவதர்களையெல்லாம் அவமதிக்கின்ற அவ்வரசன் இங்கனம் பொருளற்ற பல பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருக்கையில், பரப்ரஹ்மத்தை ஸாக்ஷாத்கரித்தமையால் ப்ரஹ்மஸ்வரூபியும் மஹானுபாவருமாகிய அவ்வந்தணர் ஸமஸ்த பூதங்களுக்கும் நன்மையையே நினைக்கும் மனமுடையவராகையால் யோகேச்வரர்களின் நடத்தையில் பரிசயப்படாத (பழக்கமில்லாத) மதியுடைய அம்மன்னவனைப் பார்த்துப் புன்னகை செய்துகொண்டு சிறிதும் கர்வமின்றி மேல்வருமாறு மொழிந்தார்.

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 16 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

மதுரகவியாழ்வாரின் ஆசார்ய நிஷ்டை


எந்த உயர்ந்த அர்த்தங்களும் பரதெய்வத்தை மதித்து வணங்குவதைப் போல் குருவையும் மதித்து வணங்குபவனுக்கே சொல்லப்பட வேண்டும். குருவை தெய்வமாகக் கொள்ள வேண்டும். தைத்திரீய உபநிஷத் “ஆச்சார்ய தேவோ பவ” என்கிறது.


குரு தான் பிரம்மம். குருதான் மேலான வழி. குரு தான் மேலான வித்தை. குருதான் மேலான பொருள். குருதான் அடையத்தக்கவன். குருதான் மேலான செல்வம். குருதான் எல்லாம். இதுவே ஆசாரிய சிஷ்டை. பகவானைப் பற்றி உபதேசம் செய்வதால் எம்பெருமானைக் காட்டிலும் சிறந்தவன்.


ஆசாரியனே சிறந்தவன்! :


வேதங்கள், தேவதைகளிடம் பக்தி செய்யச் சொல்வதை விட, ஆசார்யனிடம் பக்தி செய்ய வேண்டுவதையும், அவன் காட்டிக் கொடுக்கும் பரதெய்வத்திடம் பக்தி செய்ய வேண்டுவதையுமே அதிகம் வலியுறுத்தின. யார் ஆசாரியன் என்றொரு கேள்வி. 


அம்பொன் அரங்கற்கும், ஆவிக்கும், 
சம்பந்தங்காட்டி, தடை காட்டி, 
உம்பர் திவம் (பேறு) என்னும் வாழ்வுக்கு 
சேர்த்த நெறி (உபாயம்) காட்டுபவன் ஆசாரியன். (விளாஞ்சோலைப் பிள்ளை வாக்கு)


பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் பாலம் அமைப்பவன் குரு. இதயத்தில் உள்ள அஞ்ஞான இருட்டை விரட்டி அடிப்பவன் குரு.


ஈஸ்வர சம்பந்தம் நல்லதுதான். ஆனால் அது பந்தம், மோட்சம் இரண்டுக்கும் பொதுவாக இருக்கும். ஆனால் ஆசாரிய சம்பந்தம் என்பது மோட்சத்துக்கு ஹேதுவாக இருக்கும் என்கிறது ஸ்ரீவசன பூஷணம். 


ஆசாரிய அபிமானமே மதுரகவியாழ்வார் வாழ்க்கை :


இந்த ஆசாரிய நிஷ்டையை உலகுக்குத் தன் செயலாலும், சொல்லாலும் நிரூபித்துக் காட்டியவர்தான் மதுரகவியாழ்வார். இதைச் சொல்வதே மதுரகவி ஆழ்வார் வாழ்க்கைச் செய்தி. பாண்டிய நாட்டில் உள்ள திவ்ய தேசம் திருக்கோளூர். அது தான் மதுரகவியாழ்வார் அவதரித்த ஊர்.


எம்பெருமானுக்கு “வைத்த மாநிதிப் பெருமாள்” என்று பெயர். குபேரன் தன்னுடைய நிதிகளை எல்லாம் இழந்து, வைத்த மாநிதிப் பெருமாளை நோக்கி தவம் இருந்து நவநிதிகளையும் பெற்றதாக தல வரலாறு கூறும். நமக்கும் மதுரகவியாழ்வார் மூலமாக நவ நிதியத்தை வைத்த மாநிதிப் பெருமாள் தந்திருக்கிறார். அவர் மூலமாகத் தான் நவநிதியங்களான ஆழ்வார்களின் அருளிச் செயல் பாசுரங்களும் நமக்குக் கிடைத்தன.


பிராமண குலத்தில் பிறந்த இவர் வேத வேதாந்தங்கள் என்று மரபுக்கே உரிய கல்வியைக் கற்று, இளம் வயதிலேயே பெரிய பண்டிதர் ஆனார். இறையனுபவம் பெற வேண்டி வடமதுரை, காசி, கயை, நைமிசாரண்யம், சாளக்கிராமம், பதரிகாச்ரமம் என்று அத்தனைத் தலங்களையும் தரிசித்தவர், ஸரயூ நதிக்கரையில் அமைந்திருக்கும் அயோத்தி மாநகரத்தை அடைந்தார்.


அங்கே அர்ச்சாவதார அழகனாய் எழுந்தருளியிருக்கும் இராமபிரானைச் சேவித்துக் கொண்டே பல நாட்கள் தங்கியிருந்தார். ஓர் நாள் இரவு. தான் பிறந்த ஊரான திருக்கோளூரின் திசை நோக்கித் தொழுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மதுரகவிகள், அன்றும் தென்திசை நோக்கி தியான ரூபமாய்த் தொழுது நின்றபோது, வானத்தில் அதிசயிக்கத்தக்க ஓர் ஜோதியைக் கண்டு வியந்தார். ஜோதி தெரியும் திசையையே ஆதாரமாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். 

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 17 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்


ஸ்லோகம் – 8 

ஸ்ருதி முதலானவைகளாலே சொல்லப்பட்ட அனைத்து ஆத்மகுணங்களும் (அஹிம்ஸை, மெய்பேசுதல், கொடுமையில்லாமை, தூய்மை, பொறியடக்கம், கொடைத்தன்மை, மனவடக்கம், பொறுமை, அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்படுகின்ற ஆத்மகுணங்கள் (உயிரின் நற்பண்புகள்) ஆகும்.) நிறம்பினவர் மணவாளமாமுனிகள் என்று சிறந்த ஞானபக்தி நிஷ்டர்களான கூரத்தாழ்வான் போல்வார்கள் கூட என்னைக் கொண்டாடும் அளவுக்கு நான் நடந்து கொண்டிருக்கிறேன். கூரத்தாழ்வானை ஏமாற்ற முடியுமா? முதலியாண்டானை ஏமாற்ற முடியுமா? நான் ஏமாற்றி இருக்கின்றேன். இவர்கள் எல்லோரும் மஹா ஞானிகள். ஏன் ஏமாறுகிறார்கள் தெரியுமோ. இவன் ராமானுஜர் ஸம்பந்தி என்ற பெயர் வைத்து இருப்பதால் ஏமாந்துவிட்டனர்.

எறும்பியப்பா தான் எழுதிய க்ரந்தத்திலே, திருமண்காப்பு நன்றாக இருக்கிறது. ராமானுஜதாஸன் என்று தாஸ்ய நாமா வைத்துக் கொண்டிருக்கிறாரே. இப்படி இருக்கிறவர்கள் முதல் கோஷ்டி என்கிறார். இவர்களிடம் நாம் தப்பே பண்ணக் கூடாது. அபசாரப் படக்கூடாது என்கிறார். அவர்களுக்கு வேண்டிய நல்லதைச் செய்துவிட்டு விலகிப் போய்விடவேண்டும் என்கிறார். இவர்களுக்குத்தான் நாம ரூப ப்ரதானர்கள் என்று பெயர் கொடுத்துள்ளனர். 12 திருமண்காப்பு இருக்கும். துளசி மணிமாலைகள் எல்லாம் அணிந்துகொண்டிருப்பர். அடியேன் ராமானுஜதாஸன் என்று ரொம்ப அழகாகச் சொல்லுவர். ஆனால் அநுஷ்டானம் இருக்குமா என்றால் தெரியாது. இவர்களிடமும் நீ அபசாரப் படாதே. ஏன் என்றால் அந்த அளவுக்கு பின்பற்றுகிறார்கள் அல்லவா? இது இருந்துவிட்டது என்றால் நாளைக்கு தேறிவந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் அல்லவா? இவர்களிடம் அபசாரப்படாதே என்கிறார்.

அத்யா அபி வஞ்சநபர: அத்ர யதீந்த்ர! வர்த்தே – இப்படித்தான் அடியேன் நடந்துகொண்டு வருகிறேன். தேவரீர்தான் போக்கிக் கொடுக்கவேண்டும் என்று ஏழாவது ஸ்லோகத்தில் பிரார்த்தித்தார்.

எட்டாவது ஸ்லோகம்: 

खावहोहमनिशं तव दुष्टचेष्टः शब्दादिभोगनिरतः शरणागताख्यः ।
त्वत्पादभक्त इव शिष्टजनैघमध्ये मिथ्या चरामि यतिराज! ततोSस्मि मूर्खः ॥ (8)

து:காவஹோ அஹம் அநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ்ஸரணாகதாக்ய:|
த்வத்பாதபக்த இவ ஸிஷ்டஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க: || (8)

அடியேன் மூர்க்கன். ஏன்? உம்மைச்சுற்றி அடியவர்கள் கூட்டம் நின்று கொண்டு ராமானுஜ ராமானுஜ என்று சொல்லிகொண்டு இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்குள் சத்தம்போடாமல் நானும் நுழைந்தேன். அந்த கூட்டத்துக்குள் நுழைவதற்கு ஏதாவது யோக்யதை இருக்கிறதா என்று கேட்டீர்களானால், எனக்கும் அந்தக் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை. எந்த யோக்யதையும் எனக்குக் கிடையாது ஆனால் நுழைந்தேன். என்ன என்ன தப்பு பண்ணியிருக்கிறீர் என்று ஸ்வாமி யதிராஜர் கேட்டார்: