வியாழன், 31 டிசம்பர், 2020

திருப்பாவை - 17 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதினேழாவது பாசுரம்

(சென்ற பாசுரத்தின் தொடர்ச்சியாகவே இப்பாசுரத்தையும் பார்க்க வேண்டும். சென்ற பாசுரத்தில் கண்ணனின் திருமாளிகைக்கு உள்ளே செல்வதற்கு வாயில் காப்போனிடம் அனுமதி வாங்கினாள் ஆண்டாள். உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக பார்த்து வருகிறாள். முதலில் அவளின் கண்ணில் பட்டது கண்ணனின் தகப்பனார் நந்தகோபரின் அறை. இனி பாசுரத்திற்குள் செல்வோம்.)


“ஐயா, மனிதர்கள் மானம் காக்கும் அம்பரம் அதாவது துணி, உயிர் காக்கும் தண்ணீர், பசியாற்றும் உணவு இவற்றை கணக்கின்றி யாசிப்பவர்களுக்கு அவர்கள் திருப்திப்படும் அளவிற்கு தர்மம் செய்யும், எங்கள் ஆயர்குலத்துத் தலைவரே நந்தகோபரே தாங்கள் எழுந்தருளவேண்டும்.”


“சிறுமியர்களே உங்களுக்கு என்ன வேண்டும்.” 


“ஐயா, நாங்கள் தங்கள் திருக்குமாரன் தேவாதி தேவன் கண்ணனை கண்டு பரிசு வாங்க வந்துள்ளோம். அவர் எந்த அறையில் சயனித்திருப்பார்.”


“அப்படியா, அந்த அறையில் தன் தாயார் யசோதையுடன் கண் வளர்ந்திருக்கின்றார் பாருங்கள்.”


“மிக்க நன்றி ஐயா.”


ஆண்டாள் தன் தோழியருடன் நந்தகோபரின் அறையிலிருந்து அடுத்ததாக யசோதையின் அறைக்குச் சென்றார்கள். அங்கு யசோதையை கண்டதும்.

ஶ்ரீமத் பாகவதம் - 244

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தெட்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் வருண லோகத்தினின்று  நந்தனை திரும்பக் கொண்டு வருதலும், வருணன் ஸ்ரீக்ருஷ்ணனை ஸ்தோத்ரம் செய்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் கோபர்களுக்கு தன் வைகுண்ட லோகத்தைக் காட்டுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒரு கால் நந்தன் ஏகாதசியினன்று ஆஹாரம் புசியாதிருந்து, பரமபுருஷனை நன்றாக ஆராதித்து, மற்றை நாள் த்வாதசி ஒரு கலையளவு (மிகச்சிறிய கால அளவு 1 நிமிடம் (அ) 48 வினாடி (அ) 8 வினாடி) மாத்ரமே மிகுந்திருக்கையால், அதற்குள் பாரணை செய்ய வேண்டுமென்னும் ஆவலால் ஆஸுர வேளையான (அஸுரர்கள் விழித்திருக்கும் நேரமான) அர்த்தராத்ரியில் (நடு இரவில்) எழுந்து, பொழுது தெரியாமல், அப்பொழுதே ஸ்னானம் செய்வதற்காக யமுனையின் ஜலத்தில் இழிந்தான். அவ்வாறு ராத்ரியில் நீராட விழிந்த அந்நந்தனை வருணனுடைய ப்ருத்யனாகிய (சேவகனான) ஓர் அஸுரன் பிடித்து, வருணனிடம் கொண்டு போய்ச் சேர்த்தான். அப்பால், பொழுது விடிகையில், கோபர்கள்  நந்தனைக் காணாமல், “க்ருஷ்ணா! ராமா!” என்று முறையிட்டார்கள். அப்பொழுது, ஸ்ரீக்ருஷ்ண பகவான், அவர்கள் முறையிடுவதைக் கேட்டு, தந்தையாகிய நந்தனை வருணன் கொண்டு போனான் என்பதையும் அறிந்து, தன்னுடையவர்க்கு அபயம் கொடுப்பவனும், ஸமர்த்தனுமாகையால் அவ்வருணனிடம் சென்றான். லோகபாலனாகிய அவ்வருணனும் இருடீகேசனாசிய (இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவன்) பரம புருஷன் தன்னிடம் வந்திருப்பதைக் கண்டு, அவனுடைய காட்சியே பெரிய உத்ஸவமாகப் பெற்று, பூஜைக்கு வேண்டிய கருவிகளை அபரிமிதமாகக் (அளவற்ற அளவில்) கொண்டு வந்து, அவனைப் பூஜித்து, இவ்வாறு மொழிந்தான்.

புதன், 30 டிசம்பர், 2020

திருப்பாவை - 16 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதினாறாவது நாள்

(ஆறாவது பாசுரத்திலிருந்து பதினைந்தாவது பாசுரம் வரை ஆண்டாள் தன் தோழியர்களை எழுப்பினாள். இப்பொழுது அடுத்த கட்டமாக கண்ணனின் திருமாளிகைக்கு வருகிறாள். இந்தப் பாசுரம் நாம் எவ்வாறு கோயிலுக்குச் சென்று, அங்கு எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு நன்றாக விவரிக்கிறாள் கோதை உள்ளர்த்தத்தில். கோயிலுக்குச் செல்லும் முன் முதலில் நமக்கு அடக்கம் வரவேண்டும். அங்கே வாயிலில் நிற்கும் துவாரபாலகர்களிடம் அனுமதி பெற வேண்டும். அவர்கள் எப்பொழுதும் பகவானோடே இருப்பதால். கொடிமரத்தை வணங்கவேண்டும். உடல் தூய்மையாக மனமும் தூய்மையாக அவன் புகழ் பாடிக் கொண்டுச் செல்ல வேண்டும். ‘மணிக்கதவம் தாள் திறவாய்’ என்ற பதத்திற்கு வியாக்யானத்தில் ஆசார்யர்களின் ஆசியுடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று இருக்கிறது. வாருங்கள் பாசுரத்திற்குச் செல்வோம்)


“கோதே, இன்று நாம் பதினாறாவது நாள் வந்துவிட்டோம். இத்துடன் நமது பாவை நோன்பு முடிந்துவிட்டதா. அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்.”

 

“பாவாய், ஏற்கனவே இரண்டாம் நாள் நம் பாவை நோன்பு நோற்பதற்கான நோக்கம் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தெரிவித்திருக்கிறேன் அல்லவா. இப்பொழுது தான் நாம் நம் பாவை நோன்பின் முக்கிய கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஆயர்ப்பாடியின் மன்னன், நம் கண்ணனின் தந்தை நந்தகோபரை அவர் மாளிகைக்கே சென்று பார்க்கப் போகிறோம்.”

 

“அப்படியா கோதை. கண்ணனின் மாளிகையைப் பார்க்கப் போகிறோமா எனது பிறவிப்பயன் இன்றுதான் கிடைக்கப்போகிறது. இன்று நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டார்கள் இதுதான் சரியான தருணம்.”

 

“வாருங்கள் நாம் அனைவரும் ஆயர்பாடிக்குச் செல்வோம்.”

ஶ்ரீமத் பாகவதம் - 243

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தேழாவது அத்தியாயம்

(இந்த்ரன் ஸ்ரீக்ருஷ்ணனுடைய வைபவத்தைக் கண்டு, காமதேனுவுடன் வந்து, கோவிந்த பட்டாபிஷேகம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன், கோவர்த்தன பர்வதத்தை (மலையை) எடுத்து, தரித்து, கோகுலத்தை விடா மழையினின்று பாதுகாக்கையில், இந்த்ரனும், காமதேனுவும், ஸ்வர்க்க லோகத்தினின்று புறப்பட்டு வந்தார்கள். இந்த்ரன் தான் அபராதம் செய்தமையால் வெட்கமுற்று, ஏகாந்தத்தில் (தனிமையில்) ஸ்ரீக்ருஷ்ணனைக் கிட்டி, ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியுடைய கிரீடத்தினால் இந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் பாதங்களில் ஸ்பர்சித்தான் (தொட்டான்). அமித ப்ரபாவமுடையவனாகிய (அளவற்ற பெருமை உடையவனான) ஸ்ரீக்ருஷ்ணனுடைய வைபவத்தைக் கேட்டிருந்த தேவேந்திரன், அவ்வைபவத்தை நேரில் கண்டு அனுபவித்தானாகையால், மூன்று லோகங்களுக்கும் தானே ஸ்வதந்த்ர ப்ரபுவென்னும் (தன் விருப்பப்படி ஆளும் தலைவன் என்னும்) கர்வம் அழியப்பெற்று, கைகளைக் குவித்துக் கொண்டு, இவ்வாறு மொழிந்தான்.

இந்த்ரன் சொல்லுகிறான்:- உன்னுடைய வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) பரமபதம் சுத்தஸத்வ மயமானது. ரஜஸ்-தமஸ்ஸுக்கள் தீண்டப்பெறாதது. ராக-த்வேஷாதிகளின் ஸம்பந்தமற்றது. கேவலம் உன்னுடைய உபாஸனா ரூபமான தவத்தினால் அடையத் தகுந்தது. உன் ஸங்கல்ப மாத்ரத்தினால் ஏற்பட்டதும், ஸத்வாதி குணங்களின் பரிணாமமுமாகிய இந்த ஸம்ஸாரமும், அதன் மூலமாய் வருவதும், சரீர ஸம்பந்தத்திற்குக் (உடல் தொடர்புக்குக்) காரணமுமாகிய கர்மானுபந்தமும் (முன் வினையாகிற கட்டும்), உன் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிற) அந்தப் பரமபதத்தில் கிடையாது. 

ஸர்வேச்வரனே! அந்தச் சரீர (உடல்) ஸம்பந்தத்தினால் விளைபவைகளும், மீளவும் மற்றொரு சரீர (உடல்) ஸம்பந்தத்திற்குக் காரணமாய் இருப்பவைகளுமான ராகாதிகள் (விருப்பு முதலியவைகள்) உனக்கு ஏது? கிடையாது. அவை, தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்ற மனக்கலக்கம்) உடையவர்களுக்கு அடையாளமாயிருக்கும் பதார்த்தங்களல்லவா (பொருட்கள், விஷயங்கள் அல்லவா)? ராகாதிகளால் (விருப்பு, வெறுப்பு முதலியவைகளால்) அல்லவோ ப்ராணிகளின் தேஹாத்மப்ரம (இந்த உடலே ஆத்மா என்ற மனக்கலக்கம்) ரூபமான அஜ்ஞானம் (அறியாமை) வெளியாகிறது. ஆகையால், ஸர்வஜ்ஞனாகிய (எல்லாம் அறிந்தவனாகிய) உனக்குக் கிடையாது. ஷாட்குண்யபூரணனே! (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே!) ஆயினும், நீ தர்மத்தை  நிலை நிறுத்துவதற்காகவும், துஷ்டர்களை (கொடியவர்களை) நிக்ரஹிப்பதற்காகவும் (தண்டிப்பதற்காகவும்), தண்டனை விதிக்கும் அதிகாரத்தை ஏற்றுக் கொள்கின்றனையன்றி, ராகாதிகளாலன்று (விருப்பு, வெறுப்பு முதலியவைகளால் அன்று). நீ, ஸமஸ்த லோகங்களுக்கும் தந்தை. ஹிதோபதேசம் செய்பவன் (நன்மையைக் கற்பிப்பவன்); கடக்க முடியாத நியாமகன் (நியமிப்பவன்); உரிய காலங்களில், அவரவர்க்குத் தகுந்தபடி தண்டனை செய்பவன். ஆகையால், நீ, தம்மையே ஜகத்திற்கெல்லாம் ஸ்வதந்த்ர ப்ரபுவாக (தன் விருப்பப்படி ஆளும் தலைவன் என்று) அபிமானித்துக் (பெருமையாக நினைத்துக்) கொண்டிருக்கின்ற என்னைப் போன்றவர்களுடைய கர்வத்தை உதறிக் கொண்டு, எங்கள் ஹிதத்திற்காகவே (நன்மைக்காகவே) உன் ஸங்கல்ப மாத்ரத்தினால் அப்ராக்ருதமான (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்களுடன் கூடிய மூலப்ரக்ருதியின் தொடர்பு இல்லாத, சுத்த ஸத்வ மயமான) திவ்ய மங்கள விக்ரஹங்களை ஏற்றுக் கொண்டு, நடையாடுகின்றாய். என்னைப் போன்ற அறிவில்லாத மூடர்கள் எவரெவர் தம்மை ஜகத்திற்கெல்லாம் ஸ்வதந்த்ர ப்ரபுக்களாக அபிமானித்திருக்கிறார்களோ (தன் விருப்பப்படி ஆளும் தலைவன் என்று பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ), அவர்களுக்கு உரிய காலத்தில் தண்டனை அளிப்பதால், பயங்கரனாயிருக்கின்ற உன்னைக் கண்டு, தாங்களே ஜகத்திற்கெல்லாம் ப்ரபுக்களென்கிற துரபிமானத்தை (தவறான எண்ணத்தை) விரைவில் துறந்து, கர்வமும் தொலையப் பெற்று, பெரியோர்களின் மார்க்கத்தைத் தொடர்ந்து நடக்கின்றார்கள். 

செவ்வாய், 29 டிசம்பர், 2020

திருப்பாவை - 15 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதினைந்தாவது நாள்

(இந்தப் பாசுரம் மிகவும் சிறப்பு வாய்ந்த பாசுரம். இப்பாசுரம் திருப்பாவைக்கே ஒரு திருப்பாவை என்பார்கள் பெரியோர்கள். இப்பாசுரம் ஒரு உரையாடலைப் போன்றே அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது. இப்பாசுரம் மூன்றாவது ஐந்து பாசுரங்களின் கடைசிப் பாசுரம். எல்லோரையும் அழைத்து நம் கண்ணன் திருமாளிகைக்கு செல்வதற்கு தாயராகும் முதல் பாசுரம் என்றும் கூறுவர். வாருங்கள் இப்பாசுரத்திற்குள் புகுவோம்.)


“கோதை இன்று பதினைந்தாவது நாளிற்கு வந்துவிட்டோம். நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டனர். வழக்கம்போல் ஒருத்தித் தான் வரவில்லை.”


“அப்படியா வாருங்கள் அவள் இல்லம் செல்வோம்.”


அவளின் இல்லத்திற்கு வந்து…..


“ஏலே, இளங்கிளியே இன்னுமா உறங்குகிறாய்?”


உள்ளே இருப்பவள் கோபத்துடன், 


“இப்படி வீட்டின் முன் நின்று சில் சில் என்று பலரும் உறைய கத்தாதீர்கள். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பார்ப்பார்கள். நங்கைகளே நானே வருகிறேன்.”


“உன்னைப் பற்றித்தான் எங்களுக்குத் தெரியுமே. வாய்ச்சொல்லிலேயே பந்தலிடுவாய். நீ இப்படித்தான் சொல்வாய், ஆனால் வர மாட்டாய். ஏமாற்றுவாய்.”


“என்னையா சொல்கிறீர்கள். அப்படி செய்பவர்கள் நீங்கள் தான்.”

ஶ்ரீமத் பாகவதம் - 242

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தாறாவது அத்தியாயம்

(கோபிமார்கள் ஸ்ரீக்ருஷ்ணனுடைய அமானுஷ (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) சரித்ரங்களைப் பற்றிச் சங்கிக்க, நந்தன் கர்க்கருடைய வசனங்களைச் சொல்லி, அவர்களைத் தெளிவித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தக் கோபர்கள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய இத்தகைய பற்பல அற்புத சரித்ரங்களை நினைத்து, அவனுடைய மஹிமையை உள்ளபடி அறியாதவர்களாகையால், வியப்புற்று,  நந்தனிடம் வந்து மொழிந்தார்கள்.

கோபர்கள் சொல்லுகிறார்கள்:- இப்பாலகன் செய்கிற இத்தகைய பல செயல்களும் மிகவும் அற்புதங்களாயிருக்கின்றன. ஆகையால், க்ராம்யர்களான (ஒன்று மறியாத மூடர்களான) கோபர்களிடத்தில், இவன் தனக்கு ஜுகுப்ஸிதமான (வெறுக்கத்தக்க) ஜன்மம் பெறுதற்கு எவ்வாறு உரியவனாவான்? ஏழு வயதுள்ள பாலனாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணன், மத்த கஜம் (மதம் பிடித்த யானை) துகிக்கையால் தாமரை மலரைத் தரிப்பதுபோல, இப்பெருமலையை ஒற்றைக் கையினால் எப்படி தரித்துக் கொண்டிருந்தான்? மற்றும், 

1. இவன் கண்ணைத் திறக்கவும் முடியாத இளங்குழந்தையாயிருக்கும் பொழுது, சரீரத்தின் யௌவன (இளம்) வயதைக் காலம் அனாயாஸமாகப் பறிப்பது போல, மிகுந்த பலமுடைய பூதனையின் ஸ்தன்யத்தை (தாய்ப்பாலை) ப்ராணன்களோடு (உயிரோடு) பானம் செய்தானே (குடித்தானே). அது எப்படி? 

2. இவன் மூன்று மாதக் குழந்தையாயிருக்கும் பொழுது, வண்டியின் கீழ் படுத்துக் காலைக் குறுக்கும் மேலுமாய் உதைத்து அழுது கொண்டிருக்கையில், அச்சகடம் (வண்டி) இவனுடைய  நுனிக்காலால் அடியுண்டு, தலை கீழாய் விழுந்ததே. அது எப்படி? 

திங்கள், 28 டிசம்பர், 2020

திருப்பாவை - 14 - கோமான் ஶ்ரீ பாலாஜி

 பதினான்காவது நாள்

“பாவாய், இன்று யாரடி வரவில்லை. கண்டிப்பாக ஒருத்தியாவது வராமல் இருப்பாளே. தினமும் அவர்களை எழுப்புவதே நமக்கு வேலையாகிவிட்டது.”


“ஆம் கோதே, இன்றும் ஒருத்தி வரவில்லை. அவள் நேற்று, நம்மிடம் பெரிய பெருமை பேசினவள். தன்னை யாரும் எழுப்ப வேண்டாம், தானே முன்னர் எழுந்து நம் அனைவரையும் எழுப்புவதாகச் சொன்னாளே அவள் தான் வரவில்லை.”


“சரி தான். அவளுக்கு வாய் மட்டும் தான் இருக்கிறது. செயலில் இல்லை. வாருங்கள் அவள் இல்லம் செல்வோம்.”


“நங்காய், உன் வீட்டு புழக்கடையில் உள்ள வாவியுள்…”


“கோதே, ‘புழக்கடை வாவியுள்’ என்றால்…..”


“பாவாய், நம் வீட்டு முகப்பு வாசலை விட மிக குறுகியதான வாசலுடன். வீட்டின் கடைசியில் நாம் புழங்கும் இடம், அதனுள் உள்ள சிறிய குளம் என்று கூறுகிறேன். நம் அனைவரின் வீட்டிலும் இருக்குமே நீ பார்த்ததில்லையா அல்லது உனக்கு பெயர் தெரியாதா. சரி பரவாயில்லை மேலும் கேள். முக்தி தரும் நகரேழில் முக்கியமான காஞ்சியின் அருகே ‘நடவாவி கிணறு’ என்றே ஒன்று உள்ளது. அங்கே நம் வரதர் சித்திரை மாத பௌர்ணமியன்று அக்கிணற்றில் இறங்கி கிணற்றை மூன்று முறை வலம் வருவார். அதேபோன்று இருக்கும் இவள் வீட்டு வாவியில் செங்கழுநீர் அதாவது செந்தாமரை மலர்ந்து ஆம்பல் அதாவது அல்லி வாய் மூடிவிட்டது.”


“கோதே, தாமரை மலர்வதும் அல்லி மூடுவதிலும் என்ன புதுமையிருக்கிறது.”

ஶ்ரீமத் பாகவதம் - 241

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தைந்தாவது அத்தியாயம்

(இந்த்ரன் தன்னுடைய யாகம் தடைபட்டமையால் கோபித்து, கோகுலத்தை அழிக்க விரும்பி மழை பெய்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் கோவர்த்தன பர்வதத்தைக் குடையாகத் தாங்கி கோகுலத்தைப் பாதுகாத்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! அப்பொழுது தேவேந்த்ரன், அப்பூஜையை ஸ்ரீக்ருஷ்ணன் தடுத்ததை அறிந்து, ஸ்ரீக்ருஷ்ணனையே நாதர்களாகவுடைய கோபர்களின் மேல் கோபித்துக் கொண்டு, உலகங்களை அழிக்கும் தன்மையுடையவைகளான ஸாம்வர்த்தகம் (ப்ரளய (ஊழிக்) காலத்தில் அழிவை உண்டாக்கும் மழையைப் பொழியும் மேகக்கூட்டம்) என்கிற மேகக்கூட்டத்தைத் தூண்டினான். மற்றும் அவ்விந்த்ரன் அம்மேகங்களைக் குறித்து மேல்வருமாறு கூறினான்.

இந்த்ரன் சொல்லுகிறான்:- காட்டில் வாஸம் செய்பவர்களான இடையர்களுக்குச் செல்வப் பெருக்கினால் உண்டான கொழுப்பின் பெருமை மிகவும் அற்புதமாயிருக்கின்றது. ஏனென்றால், அவர்கள் மரணம் அடையும் தன்மையுள்ள மானிடப் பயலான க்ருஷ்ணனை அவலம்பமாகக் கொண்டு (சார்ந்து நின்று), தேவனாகிய என்னை அவமதித்து, என் யாகத்தைப் பங்கம் (அழிவு) செய்தார்களல்லவா? கர்மாக்களில் ஊக்கம் உடையவர்கள், உறுதியற்றவைகளும், பெயருக்கு ஓடங்கள் போன்றவைகளுமான, பலனைக் கருதி செய்யப்படும் கர்மங்களாகிற யாகங்களால் ஸம்ஸாரமாகிற ஸாகரத்தைத் (இந்த பிறப்பு இறப்பாகிற ஸம்ஸாரக் கடலைத்) தாண்ட விரும்புவது போல் இருக்கிறது அவர்களின் செயல்; மோக்ஷத்திற்கு உபாயமான ஆத்ம ஜ்ஞானத்தோடு கூடிய ‘ஆன்வீக்ஷிகீ’ என்கிற த்யான ரூபமான ப்ரஹ்ம வித்யையை விட்டு விட்டு, பலனை விரும்பிச் செய்யும் யாகம் முதலிய கர்மாக்களால் எப்படி மோக்ஷத்தை அடைய முடியும்? இப்படியிருக்க, வீணாக வாயாடும் தன்மையனும், மூர்க்கனும், வணக்கமற்றவனும், தன்னைத் தானே பண்டிதனாக நினைத்துக் கொண்டிருப்பவனும், என்னுடைய  நிக்ரஹத்தினால் (தண்டனையினால்) மரணம் அடையப்போகிறவனும், ஸாதாரண மனுஷ்யனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனை அவலம்பமாகக் (பற்றாகக்) கொண்டு, இந்த இடையர்கள் எனக்கு அனிஷ்டம் (தீங்கு) செய்தார்கள். செல்வத்தினால் செருக்குற்றவர்களும், ஸ்ரீக்ருஷ்ணனால் வளர்க்கப்பட்ட தேஹமுடையவர்களுமான இந்த இடையர்களின் செல்வப் பெருக்கினால் உண்டான கொழுப்பின் மிகுதியை உதறி விடுவீர்களாக. மற்றும், பசுக்களை அழிப்பீர்களாக. நானும் ஐராவதமென்கிற என்னுடைய யானையின் மேல் ஏறிக்கொண்டு மிகுந்த வேகமுடைய “மருத்” என்னும் காற்றுக் கூட்டங்களோடு கூடி,  நந்தன் முதலிய கோபர்களைக் கொல்லுவதற்காக உங்கள் பின்னோடு புறப்பட்டு வருகின்றேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தேவேந்த்ரனால் ஆஜ்ஞை (கட்டளை) செய்யப்பட்ட மேகங்கள், கட்டுத் தரியினின்று அவிழ்த்து விடப் பெற்று வந்து, பலமுள்ளவளவு விடாமழைகளைப் பெய்து, நந்த கோகுலத்தைப் பீடித்தன. அம்மேகங்கள், மின்னி, இடித்துப் பெருங்காற்றுக்களால் தூண்டப்பட்டு, கல் மழைகளைப் பெய்தன, மற்றும் அவை ஸ்தம்பங்கள் (தூண்கள்) போலப் பருத்திருக்கின்ற மழைத் தாரைகளை ஓயாமல் பெய்து கொண்டிருக்கையில், மேடும் பள்ளமுமாயிருந்த பூமி முழுவதும் ஜல ப்ரவாஹங்களால் (வெள்ளத்தால்) சூழப்பட்டு, ஒரே வெள்ளமாகி, கண்ணுக்குப் புலப்படவேயில்லை. பெரிய விடா மழையினாலும், பெருங்காற்றினாலும், பசுக்கள் நடுக்கமுற்றன. இடையர்களும், இடைச்சிகளும், குளிரினால் வருந்தி, கோவிந்தனைச் சரணம் அடைந்தார்கள். 

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

திருப்பாவை - 13 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதிமூன்றாவது நாள்

“கோதை, இன்று பதிமூன்றாவது நாளுக்கு வந்துவிட்டோம். இன்றுடன் நிறைவடைந்துவிட்டதா நம் பாவை நோன்பு.”


“இல்லை பாவாய், நாம் இன்னும் நம் மன்னன் கண்ணன் திருமாளிகைக்கேச் செல்லவில்லை. அவனை நேரில் பார்த்து நம் கோரிக்கையை தெரிவிக்க வேண்டாமா. அதற்குள் ஏன் அவசரம். இன்றாவது அனைவரும் வந்துவிட்டார்களா.”


“இன்றும் ஒருத்தி வரவில்லை கோதை. அவளுக்கு ஏதோ மனதில் ஒரு குழப்பம். நாம் செய்யும் இந்தபாவை நோன்பு சரிதானா என்று, நேற்று என்னிடம் வினவினாள்.”


“அப்படியா வாருங்கள் அவள் இல்லத்திற்கேச் செல்வோம். அவளின் குழப்பத்தைத் தீர்ப்போம்.”


அவளின் இல்லத்தின் முன்.


“அடியே போதரிக் கண்ணினாய், பறவைகள் உறக்கத்திலிருந்து எழுந்து இரைத் தேட புறப்பட்டுவிட்டது. அவற்றின் இரைச்சல் கேட்கவில்லையா.  இதே பறவை வடிவில் அதாவது கொக்கின் வடிவில், நம் கண்ணணைக் கொல்ல, கம்சனால் ஏவப்பட்ட அரக்கன் பகாசுரனின் வாய் கிழித்து அவனைக் கொன்றவனை, முன்பு சீதையை கடத்திச் சென்ற இலங்காதிபதி இராவணின் பத்துத் தலைகளை ஒவ்வொன்றாய் தன் பானத்தால் கிள்ளி எறிந்தானே நம் இராமன், அவனின் கீர்த்திகளை நாங்கள் அனைவரும் பாடிக் கொண்டு வருகிறோம். கிழக்கில் வெள்ளி முளைத்து மேற்கில் விழாயன் உறங்கிற்று இன்னும் என்ன உறக்கம்.”


“கோதை, ஒரு சின்ன சந்தேகம். வெள்ளி விழாயன் என்பது கிழமைகளை குறிக்கவா அல்லது கிரகங்களை குறிக்கவா. கிழமை என்றால் வியாழனுக்கு பிறகுதானே வெள்ளி.”

ஶ்ரீமத் பாகவதம் - 240

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்து நான்காவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் இந்த்ர யாகத்தைத் தடுத்து, கோவர்த்தன பர்வதத்திற்குப் பூஜை செய்யும்படி நியமித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பலராமனுடன் அந்த ப்ருந்தாவனத்திலேயே வஸித்துக்கொண்டிருக்கிற ஸ்ரீக்ருஷ்ண பகவான், இந்த்ர யாகத்திற்காக முயற்சி செய்கின்ற கோபாலர்களைக் கண்டான். எல்லார்க்கும் அந்தராத்மாவாயிருப்பவனும் (ஆத்மாவாக உள் இருப்பவனும்), ஸர்வஜ்ஞனுமாகிய (எல்லாம் அறிந்தவனுமான) ஸ்ரீக்ருஷ்ணன், அவர்கள் செய்யும் முயற்சி இன்னதற்காக என்பதை அறிந்தவனாயினும், அறியாதவன் போல் வணக்கத்துடன் நந்தன் முதலிய வ்ருத்தர்களைப் (பெரியவர்களைப்) பார்த்து இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தந்தையே! உங்களுக்கு இப்பொழுது என்ன பரபரப்பு உண்டாயிருக்கின்றது? இதை எனக்குச் சொல்வீர்களாக. இது யாகமாயின், இதற்கு என்ன பலன்? இது யாரை உத்தேசித்தது? இதற்கு ஸாதனம் யாது? தந்தையே! எனக்கு இதைக் கேட்க வேண்டுமென்று பெரிய விருப்பம் உண்டாயிருக்கின்றது. ஆகையால், இதை எனக்குச் சொல்வீராக. எல்லா ஆத்மாக்களையும் தங்களோடு துல்யமாகப் பார்க்கும் தன்மையுடைய பெரியோர்களுக்கு மறைத்து வைக்கும்படியான கார்யம் எதுவுமே இராதல்லவா? தன் தேஹத்திலும் பிறர் தேஹங்களிலும் ஆத்மாவென்னும் ப்ரமமின்றி (மனக்கலக்கம் இன்றி), தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவர்களும், சத்ரு (எதிரி), மித்ரன் (நண்பன்), உதாசீனன் (எதிரி என்றோ, நண்பன் என்றோ பாராட்டாத நடுநிலையாளன்) என்னும் பேதமில்லாதவர்களுமான பெரியோர்களுக்கு எது தான் மறைக்கத்தக்கது? எதுவுமேயன்று, சத்ரு (எதிரி), மித்ரன் (நண்பன்) என்னும் பேத புத்தியுள்ளவர்களுக்கும், சத்ருவைப் போல உதாசீனனும் துறக்கத் தகுந்தவனே. ஸ்னேஹிதனோ (நண்பனோ) என்றால், தன்னைப் போலவே பார்க்கத் தகுந்தவனென்று சொல்லுகிறார்கள். ஆகையால், ஸ்னேஹிதனாகிய நான், ரஹஸ்யத்தையும் கேட்கத் தகுந்தவனே. 

இவ்வுலகத்தில் அறிவுள்ள ஜனங்கள், கார்யங்களை நண்பர்களுடன் அடிக்கடி கலந்தாலோசித்தே நடத்துகிறார்கள். நண்பர்களுடன் கலந்தாராய்ந்தறிந்து செய்பவர்களுக்குக் கார்யம் ஸித்திப்பது போல, அவர்களுடன் கலந்து ஆராயாமல் செய்கிறவனுக்கு, கார்யம் ஸித்திக்காது. ஆகையால், நண்பர்களுடன் கலந்து சாஸ்த்ர விதியின்படி ஆராய்ந்தறிந்து கொண்டு செய்கிறீர்களா? அல்லது, உலக வழக்கத்தின்படி கண் மூடித்தனமாகவே செய்கிறீர்களா? இதைக் கேட்கிற எனக்கு நன்றாகச் சொல்ல வேண்டும்.

சனி, 26 டிசம்பர், 2020

திருப்பாவை - 12 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பன்னிரெண்டாவது நாள்

“கோதே, நாம் மார்கழி மாதத்தின் பாதிக்கு வந்துவிட்டோம். பனி அதிகமாக பெய்ய ஆரம்பித்துள்ளது.”


“ஆம் நங்காய், நல்ல பனி பொழிகிறது. அனைவரும் வந்துவிட்டனரா. அல்லது யாரேனும் வராமல் உள்ளனரா.”


“கோதே எனக்கு என்னமோ யாராவது ஒருவர் வேண்டுமென்றே வராமல் இருக்கின்றனரோ என்று தோன்றுகிறது.”


“ஏன் எதை வைத்து அவ்வாறு சொல்கிறாய்.”


“யாராவது ஒருவர் வரவில்லையென்றால் உன்னிடமிருந்து ஒரு பாசுரம் கிடைக்கின்றதே. நீ பாடினால் அக்கண்ணனே இங்கு வருவான் என்பதால் வராமல் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.”


“ஆகா நன்றாக இருக்கிறது நியாயம். சரி பரவாயில்லை நமது நோக்கமே அனைவரும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டும். இன்று யார் வரவில்லை.”


“இன்று நம் ஆயர்பாடியிலேயே அதிக கன்றும் எருமையும் உள்ள நற்செல்வன் தங்கைதான் வரவில்லை. அவள் இல்லம் இங்கே அருகே தான் உள்ளது, செல்வோமா கோதை.”


நற்செல்வன் தங்காய் இல்லத்திற்கு முன்.


“தோழிகளே நில்லுங்கள் இங்கே வீட்டுவாசல் முன் சேறாக இருக்கின்றது. நேற்று மழை பெய்ததா.”


“இல்லை கோதே மழை எழவும் பெய்யவில்லை. பின் என்னவாக இருக்கும்.”

ஶ்ரீமத் பாகவதம் - 239

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் கோபாலர்களைக் கொண்டு அன்னம் வேண்டுகிற வ்யாஜத்தினால் (சாக்கினால்) ப்ராஹ்மண பத்னிகளை அனுக்ரஹித்து, யாகத்தில் தீக்ஷித்துக் கொண்டிருக்கிற ப்ராஹ்மணர்களுக்கு அனுதாபத்தை விளைத்தல்.)

கோபர்கள் சொல்லுகிறார்கள்:- ராமா! ராமா! மிகுந்த வீர்யமுடையவனே! க்ருஷ்ணா! துஷ்டர்களை அழிக்குந் தன்மையனே! இந்தப் பசி எங்களை வருத்துகின்றது. அதை அடக்கும் வழி தேடுவீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தேவகிக்குப் பிள்ளையாகப் பிறந்து, மனுஷ்யனாய் நடனம் செய்து கொண்டிருப்பினும், ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) தன்னிலைமை மேன்மேலும் விளங்கப் பெற்றிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு கோபாலர்களால் விண்ணப்பம் செய்யப்பெற்று, தன்னிடத்தில் மிகுந்த பக்தியுடைய ப்ராஹ்மண பத்னிகளை அனுக்ரஹிக்க முயன்று, அந்தக் கோபாலர்களை நோக்கி இவ்வாறு மொழிந்தான். 

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வேதங்களை ஓதி உணர்ந்து உபதேசிக்கும் திறமையுடையவர்களான ப்ராஹ்மணர்கள், ஸ்வர்க்கத்தை விரும்பித் தேவதைகளின் ஆராதன ரூபமான ஆங்கிரஸமென்னும் ஸத்ரயாகத்தை அனுஷ்டிக்கிறார்கள். அவ்விடம் போவீர்களாக. கோபர்களே! அங்கு போய் மஹானுபாவனும், நம் மன்னனுமாகிய பலராமனுடைய பெயரையும், என்னுடைய பெயரையும் சொல்லி, எங்களால் அனுப்பப்பட்டோம் என்பதை அறிவித்து, அன்னம் வேண்டுவீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு  பகவானால் கட்டளை இடப்பெற்ற அந்தக் கோபாலர்கள், அப்படியே சென்று, இரண்டு கைகளையும் குவித்து, பூமியில் தண்டம் போல் விழுந்து, ப்ராஹ்மணர்களை நமஸ்கரித்து, அன்னம் வேண்டினார்கள்.

கோபாலர்கள் சொல்லுகிறார்கள்:– ஓ, ப்ராஹ்மணர்களே! நாங்கள் சொல்லுவதைக் கேட்பீர்களாக. நாங்கள் ஸ்ரீக்ருஷ்ணனுடைய கட்டளைப்படி நடக்குந்தன்மையரான கோபாலர்கள். உங்களுக்கு க்ஷேமம் உண்டாகுக. நாங்கள், இப்பொழுது அந்த ஸ்ரீக்ருஷ்ணனாலும், அவனுடைய தமையனாகிய பலராமனாலும் அனுப்பப்பட்டு, வந்திருக்கின்றோம். அதை அறிவீர்களாக. இதோ ஸமீபத்திலேயே பசுக்களை மேய்த்துக்கொண்டிருக்கிற அந்த ராம க்ருஷ்ணர்கள், பசியினால் பீடிக்கப்பட்டு உங்களிடத்தினின்று அன்னத்தை விரும்புகிறார்கள். 

ப்ராஹ்மணர்களே! தர்மத்தை உணர்ந்தவர்களில் சிறந்தவர்களே! இந்த விஷயத்தில் உங்களுக்கு ச்ரத்தை (ஊக்கம், தீவிர விருப்பம்) இருக்குமாயின், வேண்டுகிற அந்த ராம க்ருஷ்ணர்களுக்கு, அன்னம் கொடுப்பீர்களாக. தீக்ஷிதனுடைய (யாக விரதம் பூண்டுள்ளவரிடம்) அன்னத்தைப் புசிக்கலாகாதேயென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். பசு ஹிம்ஸை உடைய யாகத்திலும், ஸௌத்ராமணி யாகத்திலும் தான் யஜமானனுடைய அன்னத்தைப் புசித்தால் தோஷமேயொழிய, மற்றதில், யாகம் செய்பவர்களின் அன்னத்தைப் பசியுள்ளவன் புசிப்பானாயின், தோஷம் கிடையாது. ஆகையால், எங்களுக்கு அன்னம் கொடுப்பீர்களாக.

வெள்ளி, 25 டிசம்பர், 2020

திருப்பாவை - 11 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதினொன்றாவது நாள்


“நாம் பாவை நோன்பு ஆரம்பித்து இன்று 11வது நாள் வந்துவிட்டோம். எனக்குத் தெரிந்து நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். ‘அருங்கலப் பாவாய்’ நான் சொல்வது சரிதானே.”


“ஆம் கோதை நம் வயதொத்த கோபியர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். நேற்று நம் வீட்டின் அருகில் உள்ள செல்வப் பெண்டாட்டி நம் நோன்பை பற்றி விசாரித்தார்கள். நானும் தெரிவித்தேன். அவருக்கும் நம் கண்ணன் மேல் தீராக் காதலாம். நோன்பு நோற்க வருகிறேன் என்றார்கள். அவரது இல்லம் செல்வோமா.”

“செல்வோம் பாவாய்.”

செல்வப் பெண்டாட்டியின் இல்லத்தின் முன்…..


“அக்கா, என் வயதொத்த கன்னிகள் வந்துவிட்டோம். நீங்கள் நோன்பு நோற்க வருகிறேன் என்றீர்களாம். வைகுண்டத்தில் உறைபவனும், ஆயிரம் நாமங்கள் கொண்டவனும் கார்மேகவண்ணன் கண்ணனின் நாமங்களைப் பாடிக் கொண்டு உன் வீட்டு முற்றத்தில் நிற்கிறோம். 

ஶ்ரீமத் பாகவதம் - 238

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்திரண்டாவது  அத்தியாயம்

(கோபீ வஸ்த்ராபஹார (துகில் கவர்ந்த) வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஹேமந்த ருதுவில் (பனிக்காலத்தில்) முதல் மாதமாகிய மார்கழி மாதத்தில் நந்த கோகுலத்திலுள்ள கோப கன்னிகைகள் அனைவரும் பரிசுத்தமான ஆஹாரத்தைப் (உணவை) புசித்துக்கொண்டு (உண்டு), காத்யாயனியின் ஆராதன ரூபமான வ்ரதத்தை ஒரு மாதம் வரையில் அனுஷ்டித்தார்கள். அக்கன்னிகைகள் அருணோதய வேளையில் (ஸூர்ய உதயத்திற்கு முன் 4 நாழிகைகள் – 1½  மணி நேரம் அருணோதய காலம்) யமுனாஜலத்தில் ஸ்னானஞ்செய்து, ஜலக்கரையில் மணலால் காத்யாயனியின் ப்ரதிமையை (திருவுருவம்) செய்து, நல்ல மணமுள்ள கந்தங்களாலும், அத்தகைய பூமாலைகளாலும், பலவகையான உபஹாரங்களாலும், தூப, தீபங்களாலும், தளிர்களாலும், பழங்களாலும், அக்ஷதைகளாலும், அந்தக் காத்யாயனீ தேவியை நன்றாகப் பூஜித்தார்கள். 

“காத்யாயனி! மிகுதியும் ஆச்சர்யமான சக்தியுடையவளே! தன்னுடைய ஆராதன ரூபமான மஹாயோகத்தை நிறைவேற்றும் தன்மையளே! தன்னை ஆராதிப்பவர்கள் விரும்பும் பலனைக் கொடுக்கும் திறமையுடையவளே! தேவீ! நந்தகோப குமாரனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை எனக்குக் கணவனாகச் செய்ய வேண்டும். உனக்கு நமஸ்காரம்” என்ற இம்மந்திரத்தை ஜபித்துக்கொண்டு அவர்கள் காத்யாயனிக்குப் பூஜை செய்தார்கள். 

அந்தக் கோப கன்னிகைகள் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மனம் செல்லப் பெற்று “நந்தகுமாரன் எங்களுக்குப் பதியாக (கணவனாக) வேண்டும். இவ்வாறு நீ அருள் புரிய வேண்டும்” என்று பத்ரகாளியை ஆராதித்துக் கொண்டு, ஒரு மாதம் முழுவதும் வ்ரதத்தை அனுஷ்டித்தார்கள். அந்த இடைக் கன்னிகைகள் தினந்தோறும் விடியற்காலத்தில் எழுந்து, ஒருவரையொருவர் பெயரைச் சொல்லி அழைத்தெழுப்பி, ஒருவரோடொருவர் கைகோத்து, ஸ்ரீக்ருஷ்ணனை உரக்கப் பாடிக்கொண்டு, யமுனையில் ஸ்னானம் செய்யப் (நீராடப்) போவது வழக்கம். இப்படி நடக்கையில் ஒருகால், யமுனா நதிக்கு வந்து, முன் போலவே கரையில் வஸ்த்ரங்களை (ஆடைகளை) அவிழ்த்து வைத்து, ஜலத்தில் இறங்கி, ஸந்தோஷத்துடன் ஸ்ரீக்ருஷ்ணனைப் பாடிக்கொண்டு விளையாடினார்கள். 

அப்பொழுது, யோகீச்வரர்களுக்கும் ஈச்வரனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், அவர்கள் செய்யும் வ்ரதத்தையும் விளையாடுவதையும் அறிந்து, அவர்களின் வ்ரதத்தை நிறைவேற்ற விரும்பி, நண்பர்களுடன் அவ்விடம் வந்து அவர்கள் கரையில் வைத்திருந்த வஸ்த்ரங்களை எடுத்துக் கொண்டு, விரைவுடன் சென்று, கதம்ப மரத்தின் மேல் ஏறிக்கொண்டு, சிரிக்கின்ற இடைப் பிள்ளைகளுடன் தானும் சிரித்துக்கொண்டு, பரிஹாஸமாக (கேலியாக) இவ்வாறு மொழிந்தான்.

வியாழன், 24 டிசம்பர், 2020

திருப்பாவை - 10 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பத்தாவது நாள்

கோதே, நாம் இத்தனை நாட்கள் நோன்பிருந்து வருகிறோமே நமக்கு நிச்சயம் சொர்க்கம் தான் கிடைக்கும்.


அடியே, சொர்க்கம் என்னடி சொர்க்கம்., நாம் நம் மன்னன் கண்ணன் திருவடி அடைந்தோமானால் சொர்க்கத்தைக் காட்டிலும் பெரிதான வைகுந்தத்தையேத் தருவான். பேரின்பத்தையே அவன் அள்ளித் தர சிற்றின்பம் எதற்கடி. சரி இன்று நம் பாவை நோன்பின் பத்தாவது நாளுக்கு வந்துவிட்டோம். இன்றாவது எல்லோரும் வந்துள்ளார்களா.


வழக்கம்போல் கோதை ஒருத்தி மட்டும் வரவில்லை. அவள்தான் நேற்று என்னிடம் சொர்க்கத்தைப் பற்றி கேட்டாள்.


அடியே, அழகான ஆடை ஆபரணங்கள் அணிய விரும்பும் அருங்கலமே, உன்னை இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் பிடிக்குமே. உன் பேச்சு, நடை, உடை பாவனை எல்லாம் அந்த கண்ணனுக்கே பிடிக்குமே. உனக்கு என்ன நேர்ந்தது. நோன்பு நோற்றவுடன் உனக்கு சொர்க்கத்தின் மேல் ஆசை வந்துவிட்டதோ. அந்த சொர்க்கத்தை பற்றி கனவுக் கொண்டு இருக்கிறாயா. நமக்கு கண்ணன் இருக்குமிடம் தானே சொர்க்கம். நாங்கள் உன் வீட்டுவாசலில் நிற்கின்றோம் எங்களுக்கு வாயிற்கதவையாவது திறக்கலாமே அல்லது ஏதாவது மறுமொழியாவது தரலாமே. பிள்ளாய் அவளுக்கு அந்த எண்ணமே இல்லை போலும்.

புதன், 23 டிசம்பர், 2020

திருப்பாவை - 9 - கோமான் ஶ்ரீ பாலாஜி

ஒன்பதாம் நாள்


“கோதை இன்று நாம் பாவை நோன்பின் ஒன்பதாம் நாள் வந்துவிட்டோம். இன்று அனைவரும் வந்துவிட்டனர் என்றே நினைக்கின்றேன்.”


“அருமை அனைவருக்கும் பகவதனபவம் விரைவில் கிட்டும். சரி எங்கே என் மாமன் மகளைக் காணவில்லையே. அவள் வரவில்லையோ. நாள்தோறும் யாராவது ஒருவர் வராமல் இருக்கிறார்கள். நம்மில் இருப்பவர்களில் ஒருத்தி நடுநாயகப்பெண் மற்றொருத்தி குதூகலம் உடையவள் இவளோ செல்வ செழிப்பில் புரளும் சீமாட்டி. நம்மை இணைக்கும் ஒரே மந்திரம் ஹரி நாமம் தான். கண்ணன் மேல் கொண்ட அளவில்லாக் காதல் தான். அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவர் இல்லமாகச் சென்று அழைக்கிறேன்.”


“ஆம் கோதை நீ சொல்வது வரிதான். நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே மந்திரம் கண்ணன் தான். உன் மாமன் மகள் இன்று வரவில்லை, நாம் அவள் இல்லத்திற்கு செல்வோம்.”

திருப்பாவை - 8 - கோமான் ஶ்ரீ பாலாஜி

எட்டாம் நாள்


“கோதே, நேற்று அவளை நீ பேய்ப்பெண்ணே என்று அழைத்தது அவளுக்கு மிகவும் வருத்தமாயிருந்ததாம்.”


“ஏன் அவள் இன்று வரவில்லையா”


“வந்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு சற்று வருத்தம். அதை போக்கிட ஏதாவது செய்யேன்.”


“கண்டிப்பாக. பார் பேசிக் கொண்டே இருந்ததில் கீழ்வானம் வெளுத்துவிட்டது. நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டார்களா.”


“இல்லை இன்றும் ஒருத்தி வரவில்லை.”


“ஓகோ அப்படியா அவள் இல்லத்திற்கே செல்வோம். அவளை பேய்ப்பெண்ணே என்றெல்லாம் அழைக்க மாட்டேன்.”


அவளின் வீட்டு வாசலில் கோதை மற்றும் அவளின் தோழிகள்.


“அடியே, அழகுச்சிலையே, என்றும் எப்பொழுதும் மகிழ்ச்சியை முகத்தில் நிறைந்திருப்பவளே கீழ்வானம் வெளுத்துவிட்டது.”


அந்த இல்லத்திலிருந்து மிக மெல்லிய குரலில்…..

செவ்வாய், 22 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 237

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் வேணு (புல்லாங்குழல்) கானம் செய்தலும், கோபிகைகள் அதைக் கேட்டுக் காம விகாரங்கொண்டு, ஒருவர்க்கொருவர் பேசிக் கொள்ளுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன், பசுக்களோடும், கோபாலர்களோடும் கூடி, இவ்வாறு சரத்   ருதுவால் (இலையுதிர் காலத்தால்) தெளிந்த ஜலமுடையதும், தாமரைத் தடாகங்களில் பட்டு வருகையால் நல்ல பரிமளமுடைய காற்றினால் வீசப்பெற்றதுமாகிய, வனத்திற்குள் (காட்டிற்குள்) ப்ரவேசித்தான். யாதவர்களுக்கு ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன், காடுகளெல்லாம் வரிசை வரிசையாய்ப் புஷ்பித்திருக்கப்பெற்றதும், மதுபானத்தினால் மதித்திருக்கின்ற வண்டுகளும் மற்றும் பல பறவைகளும் இனமினமாய்க் கூவப்பெற்ற தாமரைத் தடாகங்களும், ஆறுகளும், பர்வதங்களும் (மலைகளும்) அமைந்து, ரமணீயமாயிருப்பதுமாகிய, வனத்திற்குள் கோபாலர்களோடும், பலராமனோடும் ப்ரவேசித்து, பசுக்களை மேய்த்துக் கொண்டு, வேணு (புல்லாங்குழல்) கானம் செய்தான். 

இடைச்சேரியிலுள்ள சில கோபிமார்கள் மன்மத விகாரத்தை (காமக் கிளர்ச்சியை) விளைப்பதாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேணு (புல்லாங்குழல்) கானத்தைக்  கேட்டு, தங்கள் ஸகிகளுக்கு வர்ணிக்கத் (விவரிக்கத்) தொடங்கினார்கள். ஸ்ரீக்ருஷ்ணன், வேணுகானம் செய்யும் செயலை வர்ணிக்கத் தொடங்கின கோபிகைகள், அவனுடைய சேஷ்டைகளை நினைத்து, காம விகார (காமக் கிளர்ச்சியின்) வேகத்தினால் மன வ்யாகுலமுற்று (வருந்தி), அதை வர்ணிக்க முடியாமலே இருந்தார்கள். திறமையுடைய கூத்தாடுகிறவன், தன்னுருவம் தெரியாதபடி வேஷம் பூண்டு வருவதுபோல், கோபால வேஷத்தினால் தன்னுடைய அஸாதாரண ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டிருக்கிற ஸ்ரீக்ருஷ்ணன், சிரஸ்ஸில் (தலையில்) மயில் தோகையாகிற அலங்காரத்தையும், காதுகளில் கர்ணிகார புஷ்பத்தையும் (கொன்றைப்பூவையும்), அரையில் பொன்னிறமுள்ள அழகான ஆடையையும், மார்பில் வைஜயந்தி என்னும் பூமாலையையும் தரித்து, நடச்ரேஷ்டனுடைய (சிறந்த நாட்டியக்காரன்) வேஷம் போன்ற வேஷமுடையவனாகி, வேணுவின் (புல்லாங்குழலின்) த்வாரங்களைத் தன்னுடைய அதரத்தின் (உதடுகளின்) அம்ருதத்தினால் நிறைத்துக்கொண்டு, தன்னைத் தொடர்ந்து வருகின்ற கோபாலர்களால் பாடப்பட்ட புகழுடையவனாகித் தன் அடிவைப்புக்களால் அலங்கரிக்கப்பட்டு, அழகாயிருக்கின்ற ப்ருந்தாவனத்திற்குள் நுழைந்தான். 

இவ்வாறு ஸமஸ்த ப்ராணிகளின் மனத்திற்கும் இனிதாயிருக்கும்படி பாடுகின்ற ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேணு (புல்லாங்குழல்) கானத்தை, கோபிகைகள் அனைவரும் கேட்டு, அவனுடைய சேஷ்டைகளை (செயல்களை) ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு, புத்தியில் ஸந்நிதானம் செய்கின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனை அணைத்து, மனக்களிப்புற்றிருந்தார்கள்.

திங்கள், 21 டிசம்பர், 2020

திருப்பாவை - 7 - கோமான் ஶ்ரீ பாலாஜி

ஏழாம் நாள்

(இன்றைய பாசுரத்திலும் ஆண்டாள் தன் தோழியை எழுபுவதற்கு அவள் இல்லத்திற்கே சென்றுவிட்டாள்.)


கோதே, நேற்று நீ பாடின ‘புள்ளும் சிலம்பின காண்’ பாசுரம் கேட்டு நம் தோழியர்கள் அனைவரும் பாவை நோன்பிற்கு வந்துவிட்டார்கள் என்று நம்புகிறேன்.


இல்லையடி, ஒருத்தி மட்டும் வரவில்லை அவள் பேய்ப் பெண்.


என்னது அவளுக்கு பேய்ப் பிடித்துவிட்டதா.


ச்சீ இல்லையடி அவளுக்கு கோவிந்த நாமப் பேய் பிடித்திருக்கிறது. நாம் பாடும் கோவிந்த நாம சங்கீர்த்தனத்தில் நடு நாயகமாக அவளே நின்றிருப்பாள் நம் கீர்த்தனைகளை நன்றாய் ரசிப்பாள்.


சரி அவளை எழுப்புவோம் கோதை.


அடியே, பேய்ப்பெண்ணே, தன் குட்டிகளுக்கு இரைத் தேட புறப்படும் ஆண் பறவையை வழியனுப்ப, அதனுடன் கீசுகீசு என்று பேசிக் கொண்டிருக்கும் ஆனைசாத்தன் பறவைகளின் பேச்சரவம் கேட்கலையா.


கோதே ஆனைசாத்தன் பறவை எப்படியிருக்கும். எத்தனையோ பறவைகள் இருக்க இதை ஏன் நீ தேர்ந்தெடுத்தாய்.

ஶ்ரீமத் பாகவதம் - 236

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபதாவது அத்தியாயம்

(வர்ஷ ருது, சரத் ருது : இவைகளின் வர்ணனம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, இடையர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்று,  ராம க்ருஷ்ணர்கள் தங்களையும், பசுக்களையும்,  காட்டுத் தீயினின்று விடுவித்த அற்புதச் செயலையும், ப்ரலம்பரஸுரனைக் கொன்ற வ்ருத்தாந்தத்தையும், கோபிமார்களுக்குச் சொன்னார்கள். வயது முதிர்ந்த கோபர்களும், கோபிகைகளும், பிள்ளைகள் சொன்ன அந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு, மிகவும் வியப்புற்று, தேவ ச்ரேஷ்டர்கள் தாமே ராம க்ருஷ்ண ரூபர்களாய் கோகுலத்திற்கு வந்திருக்கிறார்களென்று நினைத்தார்கள். பிறகு, ஸமஸ்த ஜந்துக்களுக்கும் (எல்லா பிராணிகளுக்கும்) உத்பத்திக்கு இடமாயிருப்பதும், திசைகளெல்லாம் விளங்கப் பெற்றிருப்பதும், ஆகாயத்தில் மேக கர்ஜனங்கள் நிறைந்திருப்பதுமாகிய, வர்ஷருது (மழைக்காலம்) வந்தது. 

மின்னல்களும், இடிகளும் அமைந்த காளமேகங்களால் முழுவதும் மறைக்கப்பட்ட ஆகாயம், ப்ரக்ருதியினால் மறைக்கப்பட்ட தர்ம பூதஜ்ஞானமுடையதும், ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டிருப்பதுமாகிய, ஜீவாத்மஸ்வரூபம் போல் ப்ரகாசித்தது. மழைக்கு அபிமானி தேவதையாகிய ஸூர்யன், எட்டு மாதங்களாகத் தன் கிரணங்களால் பூமியினின்று இழுத்த ஜலமாகிற தனத்தை, மீளவும் தகுந்த காலம் சேர்ந்திருக்கையில், தன் கிரணங்களாலேயே விடத் தொடங்கினான். மின்னல்களோடு கூடிய பெரிய மேகங்கள், கொடிய காற்றினால் அசைக்கப்பட்டு, மன இரக்கமுற்றவை போன்று ப்ராணிகளின் ஜீவனத்தை விளைக்கவல்ல ஜலத்தை பெய்தன. பலனை விரும்பித் தவம்செய்யும் புருஷனுடைய சரீரம், தவம்செய்யும் பொழுது இளைத்திருந்து, தவத்தின் பலன் கை கூடினபின், காம போகங்களை அனுபவிக்கையால் புஷ்டியடைந்திருப்பது போல, க்ரீஷ்ம ருதுவினால் (கோடைக்காலத்தினால்) இளைத்திருந்த பூமி, மேகங்களால் மழை பெய்து நனைக்கப்பட்டு, மிகவும் செழிப்புற்றிருந்தது. 

கலியுகத்தில், பாபத்தினால் வேதவிருத்தங்களான பாஷண்ட (வேதத்திற்கு எதிரான) ஆகமங்களே விளங்கி, வேதங்கள் விளக்கமற்றிருப்பது போல, ராத்ரியின் ஆரம்பங்களில் இருள் மூடிக் கொண்டிருக்கையால், மின்மினிப் பூச்சிகளே விளங்கினவன்றி, சந்த்ரன், குரு, சுக்ரன் முதலிய க்ரஹங்கள் மேகங்களால் மறைக்கப்பட்டு, விளக்கமற்றிருந்தன. சிஷ்யர்கள், ஆசார்யனுடைய நித்ய கர்மானுஷ்டானத்திற்கு முன்பு பேசாமல் படுத்திருந்து, அவனுடைய நித்ய கர்மானுஷ்டானம் முடிந்த பின்பு, அவன் குரலைக் கேட்டு அத்யயனம் செய்வது போல, தவளைகள் அதற்கு முன் பேசாதிருந்து, மேகத்தின் கர்ஜனையைக் கேட்டு, சப்தம் செய்தன. இந்த்ரியங்களை வெல்ல முடியாமல் அவற்றின் வழியே போகும் புருஷனுடைய வீடு, பணம் முதலிய ஸம்ருத்திகள் ஸத்பாத்ரங்களில் சேராமல் அதர்ம மார்க்கத்தினால் வளர்ந்து வருவது போல, சிற்றாறுகள் மழை ஜலங்களால் நிறைந்து, கரை புரண்டு பாயத்தொடங்கின. பச்சை நிறமுடைய இளம் புற்களால் நிறைந்து, பட்டுப் பூச்சிகளால் சிவந்து, நிலை வாழைகளின் பூக்களால் சோபையுடையதுமாகிய பூமி, பல நிறமான சித்ர த்வஜ படங்களால் (அழகிய கொடிகளால்) விளங்குகிற ராஜாக்களின் ஸைன்ய சோபையை (படையின் அழகை) ஒத்திருந்தது. கழனிகள், நெல்லு முதலிய பலன்கள் ஸம்ருத்தமாயிருக்கப் (செழிப்பாய் இருக்கப்) பெற்று, பயிரிடுகிற குடிகளுக்கு ஸந்தோஷத்தையும், தெய்வாதீனமாய்ப் பலன் உண்டாகிறதென்பதை அறியாமல் பிறருடைய ஸம்ருத்தியைப் (செழிப்பைப்) பொறாதவர்களுக்கு மன வருத்தத்தையும், விளைத்தன. ஜலத்திலுள்ள ப்ராணிகளும், தரையிலுள்ள ப்ராணிகளும், புதிய ஜலத்தை உபயோகப்படுத்தி, பகவானுடைய பக்தர்கள் அவனைப் பணிவதினால் அழகிய உருவம் பெறுவது போல, அழகிய மேனன்மையைப் பெற்றார்கள். 

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

திருப்பாவை - 6 - கோமான் ஶ்ரீ பாலாஜி

ஆறாம் நாள்


(முதல் ஐந்து முடிந்து அடுத்த ஐந்தாவது பாசுரத்திற்கு செல்கிறோம். வரும் பாசுரங்களில் கோதை நாச்சியார் இளம் கன்னிகையர்களை எழுப்புகிறாள். ஏன் அவள் இருப்பவர்களை வைத்தே நோன்பினைத் தொடரலாமே ஆனால் அவ்வாறு செய்யாமல் அவரவர் இல்லங்களுக்கேச் சென்று அவர்களை எழுப்புகிறாள். சுயநலமற்ற அவளின் செயல் போற்றக்கூடியதே. ஆச்சார்யர்களின் ஸ்வாபதேச உரையில் இவை ஒவ்வொரு ஆழ்வாரையும் ஆண்டாள் எழுப்புவதாக கூறுவர். இப்பாசுரங்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஆண்டாள் நிறைய உள்ளர்த்தங்களுடனே எழுதியுள்ளாள். அதை காலட்சேபத்தில் ஆசார்யர்களிடத்தில் கேட்கக் கேட்க இது எவ்வளவு புனிதமானது என்பது விளங்கும். நாம் மேலோட்டமாகப் பார்ப்போம்.)


“நான் இதுவரைக்கும் பாவை நோன்பு நோற்பது பற்றியும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் சொல்லிவிட்டேன். இதில் எந்த ஐயமும் இருக்காது என்று நம்புகிறேன். இன்று ஆறாம் நாள், நம் பாவை நோன்பிற்கு நிறைய பேர் வரவில்லை போலிருக்கிறதே. ஏன் என்னாயிற்று அவர்களுக்கு.”


“கோதே, வேறொன்றுமில்லை. ஐந்து நாளாக விடிகாலை தினமும் எழுந்து வந்த அவர்களுக்கு அசதி ஏற்பட்டிருக்கும் அதன் காரணமாக வராமல் இருக்கலாம். நாம் அவர்களைப் போய் எழுப்பலாம்.”


ஒரு கோபிகன்னிகையின் வீட்டின் கதவுமுன்.


“அடியே பிள்ளாய் (சிறுபெண்ணே), இத்தனை நாளாக நம் பாவை நோன்பிற்கு வந்திருந்தாய். இன்று வரவில்லை. நாம் சரியாக காலையில் எழுந்திருக்கத் தவறினாலும் ஒரு நாளும் பறவைகள் தவறுவதில்லை. கதிரவன் வருமுன்னே தன் இரைத் தேட கூட்டைவிட்டு கிளம்பிவிடும். ஆனால் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய். பறவைகளின் அரசனான கருடனின் தலைவனான எம்பெருமானின் கோயிலிலே வெள்ளை வெளேரென்று இருக்கும் சங்கின் பெரு முழக்கம் உனக்குக் கேட்கவில்லையா.”


“கோதே, சங்கு என்றாலே வெள்ளையாகத்தானே இருக்கும் இதில் எதற்கு வெள்ளை விளிச்சங்கு என்கிறாய்.”


“பிள்ளாய், சங்கிலும் பல நிறங்களுண்டு. தூய்மையின் அடையாளமாக நாம் வெள்ளையைத் தானே குறிப்பிடுகிறோம். அதனால் தான் வெள்ளை விளிச்சங்கென்றேன்.”


“கோதே, பேரரவம் என்றாயே சங்கு பேரரவமா?”

ஶ்ரீமத் பாகவதம் - 235

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பத்தொன்பதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் முஞ்சாரண்யத்தில் கோபாலர்களை காட்டுத் தீயினின்று பாதுகாத்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கோபாலர்கள், ப்ரலம்பன் மாண்ட பின்பு மீளவும் விளையாட்டில் ஊக்கமுற்றிருக்கையில், அவர்களுடைய  பசுக்கள் இஷ்டப்படி மேய்ந்து கொண்டு, வெகுதூரம் சென்று, புல் மேய்வதில் விருப்பத்தினால் இஷீக வனத்திற்குள் (காட்டிற்குள்) நுழைந்தன. ஆடுகள், பசுக்கள், மனுஷ்யர்கள் இவையெல்லாம் ஒரு வனத்தினின்று (காட்டினின்று) மற்றொரு வனத்திற்குச் (காட்டிற்குச்) செல்லுவதும், அதினின்று மற்றொரு வனம் (காடு) செல்வதுமாகி, வெகு தூரம் சென்று, காட்டுத் தீயினால் தபிக்கப்பட்டு, கதறிக் கொண்டே இஷீக வனத்திற்குள் நுழைந்தன. அப்பால், விளையாடிக்கொண்டிருந்த க்ருஷ்ண ராமாதி கோபாலர்கள், அப்பொழுது அவ்விடத்தில் பசுக்களைக் காணாமல் மன இரக்கமுற்று, குளப்படிகளால் (கால் சுவடுகளால்) அவற்றின் வழியைக் கண்டு பிடிக்கலாமென்று தேடியும் புல் பூமியாகையால் குளப்படியைக் (கால் சுவடுகளைக்) காண முடியாமல் இருந்தார்கள். 

அந்தப் பசுக்களின் குளம்புகளாலும், பற்களாலும் துண்டிக்கப்பட்ட புற்களாலும், குளப்படிகளாலும் (கால் சுவடுகளாலும்) அடையாளஞ் செய்யப் பெற்ற பசுக்களின் வழியைக் கண்டுபிடித்துக் கொண்டு சென்று அங்கும் தங்களுக்கு ஜீவன ஸாதனமான பசுக்களை காணாமல் மனத்தில் விசனமுற்று (கவலைப்பட்டு), இஷீக வனத்தில் வழி தப்பி கதறுகின்ற பசு மந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல், தண்ணீர், தாஹம் எடுத்து வருந்தி, தேடும் ப்ரயத்னத்தைத் (முயற்சியைத்) துறந்து, மீண்டு வந்தார்கள். அப்பொழுது ஸ்ரீக்ருஷ்ணன், மேகம் போல் கறுத்து, மிகவும் உயர்ந்திருப்பதுமாகிய ஒரு வ்ருக்ஷத்தின் மேல் ஏறிக் கொண்டு, கம்பீரமான தன் குரலால் பசுக்களின் பெயர்களைச் சொல்லி அழைத்தான். அந்தப் பசுக்கள், தங்கள் பெயர்களைச் சொல்லி அழைக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனுடைய குரலைக் கேட்டு மனக்களிப்புற்று, ப்ரதித்வனி (எதிரொலி) செய்தன. 

அப்பொழுது, திடீரென்று பெரிய காட்டுத் தீ வனத்திலுள்ள ஜந்துக்களையெல்லாம் அழிப்பதாகி,  காற்றினால் தூண்டப்பட்டுக் கிளர்ந்து, நன்றாகப் பற்றியெரிகின்ற கொள்ளிகளால் அங்குள்ள ஜங்கம ஸ்தாவரங்களை (அசையும் மற்றும் அசையாத பொருட்களை) எல்லாம் தொட்டுக் கொண்டு கிளம்பிற்று. கோபாலகர்கள், கோகுலத்துடன் நாற்புறத்திலும் நிரம்பி வருகின்ற காட்டுத் தீயைக்கண்டு பயந்து, மரண பயத்தினால் பீடிக்கப்பட்ட ஜனங்கள் தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பாரத்தைப் போக்கும் தன்மையுள்ள பகவானைச் சரணம் அடைந்து தங்கள் வருத்தத்தை விண்ணப்பம் செய்வது போல, பலராமனோடு கூடிய ஸ்ரீக்ருஷ்ணனை சரணம் அடைந்து, இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள்; 

திருப்பாவை - 5 - கோமான் ஶ்ரீ பாலாஜி

ஐந்தாம் நாள்.

கோதை, நேற்று இரவு முழுவதும் நல்ல மழையாம். நாம் இந்த பாவை நோன்பு ஆரம்பிக்கும் முன் அவ்வாறு பெய்ததில்லையாம் பெரியோர்கள் சொல்லுகிறார்கள். நீ பாடியவாறு ஆழிமழைக்கு  அண்ணா, கண்ணா மகிழ்ந்து விட்டார் போலிருக்கிறது. இருந்தாலும் ஒரு சந்தேகம். நாம் நோற்கும் இந்த பாவை நோன்பின் பலன் நமக்கே கிடைத்திடுமா. நாம் முன்னால் செய்த பாவங்கள் கழியுமா? 


என்ன கேள்வி கேட்டு விட்டாய், நேற்று இரவு மழை பெய்தது என்றாயே நம் நோன்பின் பலன்கள் அவ்வாறு. இன்னும் உனக்கு சந்தேகம் ஏன்? நம் கண்ணன் மாயவன் இருக்க கவலை எதற்கு. நாம் இன்று ஐந்தாம் நாள் வந்துள்ளோம். அதைப் பார்ப்போமே!


‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ 


கோதை, நம் மன்னவன் கண்ணனுக்கு நாள்தோறும் புதிது புதிதாக பெயர்களைச் சூட்டிக் கொண்டேச் செல்கிறாயே இன்று மாயன் என்று ஆரம்பித்துள்ளாய். 


ஆம் சகி, அவன் எண்ணற்ற பேருடையான், பீஷ்மர் அவன் மேல் ஆயிரம் நாமங்களை சஹஸ்ர நாமம் என்று அம்புப்படுக்கையில் கிடக்கும்போது தருமருக்குப் பாடியுள்ளார். புருஷசூக்தத்தில் தெரிவித்துள்ளாற் போன்று அவன் ஆயிரமாயிரம் நாமங்களை உடையவன். நம்மால் அந்தளவுக்கு முடியுமா என்று தெரியவில்லை. பார்ப்போம்.

வெள்ளி, 18 டிசம்பர், 2020

திருப்பாவை - 4 - கோமான் ஶ்ரீ பாலாஜி

நான்காம் நாள்.

"கோதே, நீ பாட்டுக்கு இந்த பாவை நோன்பு நோற்றால் தீங்கின்றி மாதம் மும்மாரி பெய்யும் என்று சொல்லி விட்டாய், ஆனால் என்ன சின்னச் சின்னத் தூறலாத்தானே பெய்கின்றது. இப்படியிருக்க நீ என்னடான்னா நன்னா மழை பெய்யும், செல்வவளம் செழிக்கும் என்று சென்ற பாடலில் சொன்னாயே."


"இருடி, அதற்குள் என்ன அவசரம். இன்னிக்கு தானே நான்காம் நாள். நம்மோட இந்த நோன்புக்கு இடையூரா அடைமழை பெய்து நம் நேதன்பினை பாழாக்கப் போகுதேன்னு நினைச்சிட்டிருக்கேன் நீ வேற. "


‘ஆழிமழைக் கண்ணா’ என  ஆண்டாள் ஆரம்பித்ததும், ஒருத்தி மற்றொருத்தியிடம் "இவளுக்கு கண்ணன் மேல் இருந்த மோகத்தினால் பார்க்கும் அனைத்தும் கண்ணனாகவே தெரிவதைப் போல் பித்துப் பிடித்துவிட்டது. மழைக்கு அதிபதி வருணன் தானே அவனை அழைக்காமல் கண்ணனை அழைக்கிறாள். இதனால அவன் கோவிச்சுட்டு மழை பெய்து தள்ளிடப் போறான்."


பயத்தினாலும் நடுக்கத்தினாலும் தோழியின் குரல் சற்றே அதிகப்பட, இதை கேட்ட கோதை, "அடியே பயப்படாதே நான் பாடியதில் இரண்டு அர்த்தம் உள்ளது. நமக்கு சகலமும் கண்ணனன்றோ என்று ஒரு அர்த்தத்திலும் அதை பிரித்துப் பாடுவோமாயின் ‘ஆழி மழைக்கு அண்ணா’ என்று வருணனையும் தான் குறிப்பிடுகிறேன். அவனால் நமக்குக் காரியம் ஆக வேண்டுமே அதனால் தான் அவனை அண்ணா என்று கூப்பிடுகிறேன். மேலும் அவனுக்கு மழையை எப்படி பெய்விக்க வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தான் நான் சொல்லப்போகிறேன்."


"ஓகோ கதை இப்படிப் போகுதோ உன்னை புரிஞ்சுக்கவே முடியலடி. நீ நிறைய விஷயம் தெரிந்தவளாயிருக்கே."

ஶ்ரீமத் பாகவதம் - 234

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதினெட்டாவது அத்தியாயம்

(க்ரீஷ்மருது (கோடைக்கால) வர்ணனமும், ஸ்ரீக்ருஷ்ண ராமர்கள் கோபாலர்களோடு விளையாடுவதும், ப்ரலம்பாஸுர வதமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு ஸ்ரீக்ருஷ்ணன், மனக்களிப்புற்ற பந்துக்களான இடையர்கள் சூழ்ந்து வரவும், பாடவும் பெற்று, பசு மந்தைகளால் அழகாயிருக்கின்ற கோகுலத்திற்குள் நுழைந்தான். ஸ்ரீராம  க்ருஷ்ணர்கள் இவ்வாறு மாயையினால் கோபாலர்கள் என்னும் கபட வேஷம் பூண்டு விளையாடிக் கொண்டிருக்கையில் ஒருகால், ப்ராணிகளுக்கு அவ்வளவு இஷ்டமல்லாத க்ரீஷ்ம ருது (கோடைக்காலம்) வந்தது. ஸாக்ஷாத் பகவானாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன்னுடைய அம்சமாகிய பலராமனோ வாஸம் செய்யப் பெற்றமையால், எல்லா ஸம்ருத்திகளும் அமைந்திருக்கிற ப்ருந்தாவனத்தின் குணங்களால், அந்த க்ரீஷ்ம ருதுவும்கூட (கோடைக்காலமும் கூட), வஸந்த ருது (வஸந்த காலம்) போலத் தோன்றிற்று. 

அங்குக் கர்ண கடோரமான (காதுக்குக் கொடிதான) சுவர்க்கோழிகளின் த்வனிகள் மலையருவிகளின் ஓசைகளால் மறைக்கப்பட்டிருந்தன. மற்றும், அங்கு வ்ருக்ஷங்கள் (மரங்கள்) அந்த அருவிகளின் திவலைகளால் (நீர்த்துளிகளால்) அடிக்கடி நனைந்து, செழிப்புற்று, நிரைநிரையாகி, மிகவும் அலங்காரமாயிருந்தன. நதிகள், தாமரையோடைகள், அருவிகள் ஆகிய இவற்றின் அலைகளில் பட்டு அவற்றின் திவலைகளையும் (நீர்த்துளிகளையும்) செங்கழுநீர், தாமரை, நெய்தல் முதலிய புஷ்பங்களில் பட்டு, அவற்றின் தூட்களையும் ஏற்றுக் கொண்டு, வருகிற மந்த மாருதத்தினால் (தென்றல் காற்றால்) வீசப் பெற்றிருப்பதும் மிகவும் பச்சென்றிருக்கிற புற்கள் நிறைந்திருப்பதுமாகிய அந்த ப்ருந்தாவனத்திலுள்ள ஜந்துக்களுக்கும் வ்ருக்ஷம், கொடி, செடி முதலியவற்றிற்கும், க்ரீஷ்ம ருதுவாலும் (கோடைக் காலத்தாலும்), அந்த ருதுவில் (காலத்தில்) உண்டான அக்னி, ஸூர்யன் இவற்றாலும் விளையக் கூடிய உபத்ரவம் (துன்பம்) சிறிதும் உண்டாகவில்லை. 

ஸூர்ய கிரணங்கள் விஷம் போல் கொடியவைகளாயினும், ஆழ்ந்த ஜலமுடைய பெரிய ஓடைகளின் கரைகளில் வீசுகின்ற அலைகளால் சேறோடிக் கிடக்கிற மணற் குன்றுகளோடு கூடின அந்த ப்ருந்தாவன பூமியின் ஈரத்தையும் பசும்புற்கள் முளைத்துச் செழிப்பாயிருக்கும் நிலைமையையும் அழிப்பதற்கு வல்லவையாக இல்லை. பூ, இலை, காய், பழம் முதலியவை ஸம்ருத்தமாய் (நிறைவுடன்) இருக்கவும், விசித்ரமான ம்ருகங்கள், பறவைகள் இவை சப்திக்கவும், மயில்கள், வண்டுகள் இவை பாடவும், குயில்கள், ஸாரஸங்கள் இவை கூவவும் பெற்று, அவ்வனம் நிரம்பவும் அழகாயிருந்தது. 

மஹானுபாவனாகிய (மிகவும் உயர்ந்தவனான) ஸ்ரீக்ருஷ்ணன், விளையாட விரும்பி பலராமனுடன் குழலை மிகவும்அழகாக ஊதிக் கொண்டு, இடையர்களாலும், பசு மந்தைகளாலும் சூழப்பட்டு, அந்த வனத்திற்குள் (காட்டிற்குள்) நுழைந்தான். ராமன், க்ருஷ்ணன் முதலிய இடையர்கள் அனைவரும் தளிர், மயிலிறகு, பூங்கொத்து, பூமாலை, சிவப்பு நிற தாதுக்கள் இவைகளை அணிந்து கூத்தாடுவதும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு சண்டை செய்வதும், பாடுவதுமாகி விளையாடினார்கள். ஸ்ரீக்ருஷ்ணன் கூத்தாடுகையில், சிலர் அதற்குப் பொருந்துமாறு பாடினார்கள். சிலர் உள்ளங்கை, கொம்பு இவைகளால் வாத்யம் வாசித்தார்கள். சிலர் நல்லது நல்லதென்று புகழ்ந்தார்கள். நாட்யமாடுகிறவர்கள் நட்டுவனைத் துதிப்பது போல, இடைப்பிள்ளைகளின் வேஷம் பூண்டு மறைந்திருக்கின்ற ராம க்ருஷ்ணர்களை, அவ்வாறு இடையர்களாகப் பிறந்திருக்கின்ற தேவதைகள் துதித்தார்கள். கன்றுகுடுமி தரித்திருக்கிற அந்த ராமக்ருஷ்ணர்கள், ஒருகால் சுற்றுவதும் தாண்டுவதும், தள்ளுவதும், தோள்தட்டுவதும், ஒருவரையொருவர் பிடித்திழுப்பதும், கைச்சண்டை செய்வதுமாகி விளையாடினார்கள்.  

வியாழன், 17 டிசம்பர், 2020

திருப்பாவை - 3 - கோமான் ஶ்ரீ பாலாஜி

(இரண்டாம் பாசுரத்தில் ‘பாவை நோன்பு’ நோற்க வேண்டிய முறைகளை தெரிவித்த ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் நோன்பு நோற்பதால் வரப்போகும் பலன்களை தெரிவிக்கிறாள்.)


“அம்மா கோதே, நீ சொன்னா மாதிரி நாங்களும் உன்னுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்கிறோம். அதனால் எங்களுக்கு என்ன பயன், பகவத் சங்கல்பத்தைத் தவிர, அதை கொஞ்சம் சொல்லேன்”.


ஆண்டாள் சிறிதும் தயக்கமின்றி பாசுரத்தை ஆரம்பிக்கிறாள்.


‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’


கோதே ஒரு நிமிஷம், நீ ஏற்கனவே முதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே’ என்றும் இரண்டாம் பாசுரத்தில் ‘பையத்துயின்ற பாற்கடல் வண்ணனையும்’ போற்றிப் பாடின இப்பாசுரத்தில் ‘ஓங்கி உலகளந்த’ன்னு ஆரம்பிக்கிறயே ஏதாவது விசேஷம் இருக்கா”. 


ஆண்டாள் முகத்தில் சின்ன புன்சிரிப்பு.


“விசேஷம் இல்லாமலயா, சின்ன வாமன மூர்த்தியாக அவதாரம் செய்து அசுர சக்ரவர்த்தி மாவலியிடம் மூவடி மண் கேட்டு, பெற்று, நெடிதுயர்ந்து ஈரடியால் இந்த உலகம் முழுதும் அளந்தானை போற்றிப் பாடாமல் வேறு யாரை பாடுவது”. 


உடன் வந்திருந்த தோழிகள், “ஏன் கோதா மற்ற அவதாரங்களை காட்டிலும் நீ வாமனனுக்கு சிறப்புத் தருகிறாய் ஏதாவது காரணம் இருக்கிறதா”.